பருப்பு தோசை! தேவையானவை: பச்சரிசி - ஒரு கப் இட்லி அரிசி - அரை கப் கடலைப்பருப்பு - ஒரு கப் துவரம் பருப்பு - கால் கப...
பருப்பு தோசை!
தேவையானவை:
- பச்சரிசி - ஒரு கப்
- இட்லி அரிசி - அரை கப்
- கடலைப்பருப்பு - ஒரு கப்
- துவரம் பருப்பு - கால் கப்
- பாசிப்பருப்பு - கால் கப்
- உளுந்து - ஒரு மேசைக்கரண்டி
- வெந்தயம் - கால் தேக்கரண்டி
- சோம்பு - ஒரு மேசைக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 5
- பூண்டு - 2 பற்கள்
- சீரகம் - கால் தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- தாளிக்க:
- எண்ணெய்
- கடுகு - ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
செய்முறை:
அரிசி மற்றும் பருப்பு வகைகளை (தனித்தனியாக) 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
உளுந்து மற்றும் வெந்தயத்தையும் ஊற வைக்கவும். ஊறிய பருப்புடன் காய்ந்த
மிளகாய், சோம்பு, பூண்டு, சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்
கொள்ளவும்.
அதனுடன் அரிசியை நன்றாக அரைத்துச் சேர்க்கவும்.
பிறகு உளுந்து மற்றும் வெந்தயத்தையும் அரைத்துச் சேர்க்கவும். அத்துடன்
தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர்
ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
தோசை கல்லைச் சூடாக்கி, எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை எடுத்து
மெல்லிய தோசையாக (ரவா தோசை போல) ஊற்றவும். சிவந்ததும் திருப்பி போட்டு
மறுபுறமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான பருப்பு தோசை தயார். தேங்காய் சட்னி அல்லது சர்க்கரையுடன் சூடாகப் பரிமாறவும்.
Post a Comment