சோர்வை விரட்டியடிக்கும் அற்புதமான சில அழகுக் குறிப்புக்கள்!
கண்ணாடியில் பார்க்கும்போது முகத்தின் ஜொலிப்பு மங்கி, கண்களுக்கு அடியில் கறுப்பு படிந்து, சோர்ந்து போய் இருப்பது போல் தோன்றுகிறதா?...
https://pettagum.blogspot.com/2013/07/blog-post_1.html
கண்ணாடியில் பார்க்கும்போது முகத்தின்
ஜொலிப்பு மங்கி, கண்களுக்கு அடியில் கறுப்பு படிந்து, சோர்ந்து போய்
இருப்பது போல் தோன்றுகிறதா? கவலையை விடுங்கள். வீட்டில் இருக்கும்
பொருட்களை வைத்தே, சோர்வை போக்கி, முகத்தை பளிச்சென்று மாற்றிவிடலாம்.
* வெளியே போய்விட்டோ, பயணம் போய்விட்டோ
வீடு திரும்பும்போது ஒரு தேக்கரண்டி கோதுமை மாவோ அல்லது கடலை மாவோ
எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தக்காளி கூழ் சேர்த்து குழைத்து முகத்தில்
பூசுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.
|
* முட்டை வெள்ளைக் கரு இரண்டு தேக்கரண்டி,
அரை தேக்கரண்டி தேன், கால் தேக்கரண்டி எலுமிச்சை சாறு போன்றவைகளை கலந்தும்
முகத்தில் பூசி, பத்து நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவி நீக்குங்கள்.
இவ்வாறு செய்தால் முகத்தில் தென்படும் சோர்வு நீங்கிவிடும்.
* ஒரு வைட்டமின் மாத்திரை, இரண்டு
தேக்கரண்டி தயிர், ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் ஆகியவைகளை கலந்து முகத்தில்
தேய்த்தாலும் நல்ல பலன் கிடைக்கும். பயணம் முடிந்து சோர்ந்து வரும்போது
உருளைக்கிழங்கு சாறு, பால், தயிர் போன்ற ஏதாவது ஒன்றை முகத்தில் பூசி,
ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்வது நல்லது.
* ஒரு தேக்கரண்டி கோதுமையை வறுத்து
அரைத்து, அதில் அரை தேக்கரண்டி சர்க்கரை, சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து
முகத்தில் பூசுவதும் முகத்தை பளிச்சென்று மாற்றும்.
* வெள்ளரிக்காயை கொத்தி நறுக்கி சிறிது நேரம் பிரிஜ்ஜில் வையுங்கள். குளிர்ந்த பின்பு கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் வையுங்கள்.
* பால், மினரல் வாட்டர், சிறிய ஐஸ்
துண்டுகள் போன்றவைகளை பயன்படுத்தி இமைகளில் மென்மையாக மசாஜ் செய்யலாம்.
பன்னீரில் பஞ்சை முக்கி, கண்களை மூடிக்கொண்டு கண்களின் மீது வைத்தாலும்
புத்துணர்ச்சி கிடைக்கும்.
* எலுமிச்சை இலைகளை இடித்து தண்ணீரில்
போட்டு சூடாக்கியும் குளிக்கலாம். நல்லெண்ணெயை தலையில் தேய்த்து 15
நிமிடங்கள் வைத்திருந்து, பின்பு தலைக்கு குளித்தாலும் உற்சாகம்
கிடைக்கும்.
* ஆமணக்கு எண்ணெயை தலையில் இரவில்
தேய்த்து, காலையில் பயறு தூள் பயன்படுத்தி தலையை கழுவி குளிப்பதும் நல்லது.
தேங்காய் பாலை தலையில் தேய்த்து, பத்து நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு
குளித்தாலும் உடலுக்கு உற்சாகம் கிடைக்கும்.
|
Post a Comment