நோன்பின் சட்டங்கள்! அமுத மொழிகள்,

நோன்பின் சட்டங்கள்! ========================== பசியை அடக்கிக் கொண்டு தொழுதல்!... தமிழக முஸ்லிம்களிடம் உள்ள மற்றொரு அறியாமையையும் ...

நோன்பின் சட்டங்கள்!
==========================
பசியை அடக்கிக் கொண்டு தொழுதல்!...
தமிழக முஸ்லிம்களிடம் உள்ள மற்றொரு
அறியாமையையும் சுட்டிக்
காட்டுவது அவசியமாகும்.
நோன்பு துறப்பதற்காகத் தண்ணீர்
குடித்தவுடன் மஃக்ரிப்
தொழுகைக்கு இகாமத்
சொல்லப்பட்டு விடுவதுண்டு.
இதனால் தண்ணீரைக் குடித்தவுடன் மஃக்ரிப்
தொழுகைக்குச் சென்று விடுவார்கள்.
ஆனால் உடலும், மனமும் உணவில் பால்
நாட்டம்
கொண்டிருக்கும்.
இவ்வாறு செய்வது பேணுதல் என்ற எண்ணம்
பலரிடம் உள்ளது. உண்மையில் இது பேணுதல்
அல்ல!
மாறாக மார்க்கத்தில் கண்டிக்கப்பட்ட
ஒரு செயலாகும்.
மல ஜலத்தை அடக்கிய நிலையிலும்,
உணவு முன்னே
இருக்கும் போதும் எந்தத் தொழுகையும்
இல்லை
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 869
உங்களில் ஒருவர் உணவில் இருக்கும் போது
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால்
உணவுத்
தேவையை முடிக்கும் வரை தொழுகைக்குச்
செல்ல
வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்:
இப்னு உமர்
(ரலி) நூல்: புகாரி 5465, 671
இந்த நபிமொழிகளிலிருந்து ஜமாஅத்
தொழுகையை
விட, பசியைப்
போக்குவது முதன்மையானது என்பதை
அறிந்து கொள்ளலாம். சாதாரண
நாட்களிலேயே இந்த
நிலை என்றால் நோன்பின் போது மஃக்ரிப்
நேரத்தில்
அதிகமான பசியும், உணவின் பால் அதிக
நாட்டமும்
இருக்கும்.
இந்த நேரத்தில் மனதை உணவில்
வைத்து விட்டு,
உடலை மட்டும் தொழுகையில் நிறுத்துவது
அல்லாஹ்வுக்கு விருப்பமானது அல்ல
என்பதால்
தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு
நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.
இன்னொன்றையும் நாம் மறந்து விடக் கூடாது.
ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு ஆரம்ப
நேரமும், ஒரு
முடிவு நேரமும் உள்ளது.
முடிவு நேரத்துக்குள்
தொழுகையை நிறைவேற்றி விட வேண்டும்.
பசியின் காரணமாக ஜமாஅத்தைத் தான்
விடலாமே
தவிர தொழுகையை விட்டு விடக் கூடாது.
மஃக்ரிப்
தொழுகையைப் பொறுத்த வரை சூரியன்
மறைந்தது
முதல் சுமார் 60 நிமிடம் வரை தொழுகை நேரம்
நீடிக்கும். அதற்குள் தொழுகையை நிறைவேற்றி
விட வேண்டும்.
ஏனெனில் தொழுகை முஃமின்கள் மீது நேரம்
குறிக்கப்பட்ட
கடமையாகவுள்ளது என்று (4:103
வசனத்தில்) அல்லாஹ் கூறுகிறான்.
நோன்பு துறக்க ஏற்ற உணவு நம்மிடம் எந்த
உணவு
உள்ளதோ அதன் மூலம் நோன்பு துறக்கலாம்
என்றாலும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
நோன்பு துறக்கும்
போது முதலில் பேரீச்சம்
பழங்களை உட்கொள்ளுமாறு
ஆர்வமூட்டி உள்ளார்கள். யாருக்கு பேரீச்சம்
பழம்
கிடைக்கிறதோ அவர் அதன் மூலம்
நோன்பு துறக்கட்டும்! கிடைக்காதவர்கள்
தண்ணீர் மூலம் நோன்பு துறக்கட்டும்;
ஏனெனில் அது தூய்மையானதாகும்
என்று நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:
அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: திர்மிதீ 594.
பேரீச்சம் பழத்தையோ, தண்ணீரையோ முதலில்
உட்கொண்டு விட்டு அதன் பிறகு மற்ற
உணவுகளை
உட்கொள்வதால் நபிகள் நாயகத்தின்
சுன்னத்தைப்
பேணிய நன்மையை அடைந்து கொள்ளலாம்...

Related

அமுத மொழிகள் 4782873317874457794

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item