கொட்டிக் கிடக்குது வேலை... கட்டிக் கொண்டு போகலாம்!' -- வேலை வாய்ப்புகள்,
''இ ன்ஜினீயரிங், ஐ.டி., எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனி கேஷன் படித்த பிறகும் வேலைஇல்லாதவர்கள் ...
https://pettagum.blogspot.com/2012/12/blog-post_7698.html
இந்தக் கருத்தை நம்ப முடியவில்லைதானே!
ஆனால், ''இதுதான் உண்மை'' என்று அடித்துச் சொல்கிறார்... மத்திய அரசின் 'தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செக்ரெட்டரிஷிப் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பின் தலைவர் நிஸார் அகமது. சென்னையில் உள்ள இந்த அமைப்பின் தென்மண்டல அலுவலகத்தில், இத்துறையில் பட்டம் பெற்றவர்களுக்கான முதலாவது பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போதுதான் இத்தகைய உத்தரவாதத்தைத் தந்தார் நிஸார் அகமது.
பிறகு அவரிடம் பேசியபோது, ''இப்போது இந்தப் படிப்பை படித்து முடித்தவர்களுக்கு மட்டுமல்ல... இன்னும் எத்தனை பேர் வந்தாலும் வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது. மத்திய அரசின் உயர் பதவிகள், நிர்வாக இயக்குநர்கள், முழு நேர இயக்குநர்கள், கம்பெனி தலைவர்கள் துணைத் தலைவர்கள் என்று பல பணிகளில் அமர முடியும்.
படிப்பு முடிந்ததுமே... உங்களைக் கொத்திக் கொண்டு போக நிறுவனங்கள் காத்துக் கிடக்கின்றன. ஆண்டுக்கு லட்சக் கணக்கில் சம்பளம் தருவதற்கும் தயாராக இருக்கின்றன. பெண்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் இப்படிப்பு குறித்த விழிப்பு உணர்வு குறைவாகவே உள்ளது. வேலை வாய்ப்பு கொட்டிக் கிடக்கும் இந்த துறைக்குள் நுழைவதற்கு அவர்கள் எல்லாம் முன் வரவேண்டும்'' என்று விளக்கமாகச் சொன்னார்!
யோசியுங்கள் மக்களே!
1 comment
இந்த படிப்பை காலேஜ் மாதிரி செமஸ்டர் முறையில் அல்லது நான் - செம்ஸ்டர் முறையிலோ நடத்தினால் ஏராளமான பேர் இத்துறையில் படித்து வெற்றி பெற முடியும். படித்தா படி இல்லாட்டி போ என்கிற மாதிரியும், 15 மாத இண்டர்ஷிப்பிற்கு இவர்கள் நிர்ணயித்துள்ள சம்பளமும் இன்றைய காலக்கட்டத்தில் மிக குறைவு.நிறைய பேர் படிக்க வரக்கூடாது என்பதில் இவர்கள் கவனமாக இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
Post a Comment