30 வகை பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்

30 வகை பிரியாணி 'டெய்லி சாம்பார், ரசம், காரக் குழம்பு சாதம்தானா?’ என்கிற சலிப்புக் குரல் கேட்டதுமே... பல வீடுகளிலும் மணக்க ஆரம்பித்து...

30 வகை பிரியாணி

'டெய்லி சாம்பார், ரசம், காரக் குழம்பு சாதம்தானா?’ என்கிற சலிப்புக் குரல் கேட்டதுமே... பல வீடுகளிலும் மணக்க ஆரம்பித்துவிடும் பிரியாணி. 'எப்பவும் இதே பிரியாணிதானா?' என்று அதிலும் சலிப்புக் குரல் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே... 30 வகை பிரியாணியுடன் களம் இறங்குகிறார் சமையல் கலை நிபுணர் .
''வித்தியாசமான டேஸ்ட்ல பப்பட் பிரியாணி, தஹி பிரியாணி; ஆரோக்கியத்துக்கு உதவுற ஸ்பிரவுட் பிரியாணி, பச்சை சுண்டைக்காய் பிரியாணினு  அழகு கொஞ்சும் விதத்தில் அலங்கரித்திருக்கிறார் செஃப்
பேபி கார்ன்  பனீர் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி சாதம் - ஒரு கப், பேபிகார்ன் துண்டுகள், பனீர் - தலா ஒரு கப், தக்காளி, வெங்காயம் - தலா 2, பச்சை மிளகாய் - 3, பூண்டு - 4 பல், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தனியாத்தூள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பேபிகார்னை வேக வைத்து தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை விட்டு, சூடானதும் சீரகம், பூண்டு, நறுக்கிய வெங் காயம், கீறிய பச்சை மிளகாய் போட்டு சூடுபட கிளறவும். அதனுடன் தக்காளி துண்டுகள், வேக வைத்த கார்ன், பனீர் சேர்த்துக் கிளறவும். மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், கரம்மசாலாதூள் உப்பு போட்டு நன்கு கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் இறக்கி, சாதம் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தூவி அலங்கரித்தால்... பேபிகார்ன் - பனீர் பிரியாணி தயார்.
இது சத்தும், சுவையும் நிறைந்தது. இதற்கு பச்சடி, சிப்ஸ் தொட்டுச் சாப்பிடலாம்.
கட்டா பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், சீரகம், இஞ்சி - பூண்டு விழுது - தலா கால் டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
கட்டா செய்ய: தக்காளி (விழுதாக அரைக்கவும்) - 4, கடலை மாவு - அரை கப், மிளகாய்த்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளி விழுது, கடலை மாவு, மிளகாய்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய் விட்டு கலந்து பிசைந்து, கயிறு போல நீளவாட்டில் கனமாக உருட்டவும். 2 இஞ்ச் நீள துண்டுகளாக வெட்டவும்.
அரிசியைக் கழுவி, 2 கப் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். பின்னர் உப்பு சேர்த்து உதிராக சாதம் வடிக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு, உருட்டி வைத்துள்ள கட்டாக்களை போட்டு, மிதமான தீயில் வேகவிட்டு, தண்ணீர் வடித்து எடுக்கவும். கட்டாக்களை சிறு சிறு துண்டுகளாக 'கட்’ செய்து ஆற விடவும். கடாயில் நெய் விட்டு, சூடானதும், கடுகு, சீரகம் தாளித்து... இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கலந்து, நறுக்கிய கட்டாக்களை போட்டு புரட்டவும். அதில் சாதத்தை போட்டு கரண்டியால் லேசாக கலக்கவும். 5 நிமிடம் கழித்து பரிமாறவும்.
மஷ்ரூம்   சோயா சங்ஸ் பிரியாணி
தேவையானவை: மஷ்ரூம் துண்டுகள், பாசுமதி அரிசி - தலா ஒரு கப், சோயா சங்ஸ் - அரை கப், வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒன்று, தக்காளி - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, பச்சை மிளகாய் - 3 (விருப்பப்பட்டால் கூடுதலாக சேர்க்கலாம்), எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்ப் பால் - கால் கப், தயிர் - அரை கப், தனியாத்தூள்,  சீரகத்தூள்  - தலா அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, பட்டை - 2 துண்டு, கிராம்பு, ஏலக்காய் - 4, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, சோயா சங்ஸை தனித்தனியாக ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வறுக்கவும். வெங்காயத்தை சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கி... தக்காளி துண்டுகள், கீறிய பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் மஷ்ரூம், சோயா சங்க்ஸ், தனியாத்தூள், சீரகத்தூள்  சேர்த்து, உப்பு போட்டுக் கலக்கவும். தயிர், தேங்காய்ப் பால் சேர்த்து, திக்கான கிரேவியாக வந்ததும், அரிசியை சேர்த்து குக்கரில் வைத்து 2 கப் தண்ணீர் விட்டு மூடி, 2 விசில் வந்ததும் இறக்க வும். பிறகு, நெய் விட்டுக் கலந்து, கொத்தமல்லி தூவி அலங்கரிக் கவும்.
ரய்தா இதற்கு ஏற்ற சைட் டிஷ்.
கொத்தமல்லி பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, இஞ்சி - பூண்டு விழுது, சோம்பு - தலா அரை டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 4, எண்ணெய், நெய் - தலா 2 ஸ்பூன், உப்பு - தேவையானஅளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி, தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். சுத்தம் செய்த கொத்தமல்லி, பச்சை மிளகாயை புளி சேர்த்து நைஸாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு, பட்டையை வறுத்து... இஞ்சி - பூண்டு விழுது, அரைத்த கொத்தமல்லி விழுது சேர்த்து, உப்பு போட்டு கிளறவும். பிறகு, அரிசியை 2 மடங்கு தண்ணீருடன் சேர்த்துக் கலந்து குக்கரை மூடி, 2 விசில் வந்ததும் இறக்கவும். சிறிது நேரம் கழித்து திறந்து, நெய் விட்டு கலக்கவும்.
இது, பசியைத் தூண்டக் கூடிய பிரியாணி. பச்சடி, அப்பளம் தொட்டு சாப்பிட... சுவை அபாரமாக இருக்கும்.
மஷ்ரூம் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி சாதம் - ஒரு கப், மஷ்ரூம் துண்டுகள் - அரை கப், தக்காளி - 2, வெங்காயம் - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், சோம்பு - தலா கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, நெய், எண்ணெய் - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் சோம்பு போட்டு வறுக்கவும். நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்துக் கிளறவும். தக்காளி துண்டுகள், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள்  ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து, மஷ்ரூம் துண்டுகளையும் போட்டுக் கிளறவும். நன்கு வெந்து சேர்ந்தாற் போல வந்ததும் சாதம், நெய் சேர்த்துக் கலக்கவும். கொத்தமல்லி, புதினாவை பரவலாக போட்டுக் கலந்து பரிமாறவும்.
இது சத்து நிரம்பிய பிரியாணி.
பப்பட் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பொரித்த அப்பளம் (மசாலா அப்பளம்) - 10, தேங்காய் துருவல் - அரை கப், காய்ந்த மிளகாய்  - 3, முந்திரி - 6, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் (விருப்பப்பட்டால்) - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி, 2 கப் தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் தேங்காய் எண்ணெயை விட்டு, சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை வறுக்கவும். ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்து, உப்பு போட்டு குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வைத்து, 5 நிமிடம் கழித்து திறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவலை (உதிரியாகும் வரை) வறுத்து குக்கரில் போடவும். அப்பளத்தை நொறுக்கி அதையும் சேர்த்துக் கலக்கவும். (விருப்பப்பட்டால்) கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கலந்து, 5 நிமிடம் கழித்து பரிமாறவும்.
இந்த பப்பட் பிரியாணியின் வாசனையே சாப்பிடும் ஆவலைத் தூண்டும்.
கறிவேப்பிலை பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலாதூள் - தலா அரை டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு,
செய்முறை: பாசுமதி அரிசியுடன் உப்பு சேர்த்து சாதம் வடித்துக் கொள்ளவும். கறிவேப்பிலை, தேங்காயை அரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பை வறுக்கவும். மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசலாத்தூள் சேர்க்கவும். அரைத்த கறிவேப்பிலை - தேங்காய் விழுதை போட்டுக் கிளறவும். நன்கு சூடானவுடன், சாதம், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, நெய் விட்டு கலந்து, வேறு பாத்திரத்துக்கு மாற்றி பரிமாறவும்.
இந்த பிரியாணி... அசத்தலான சுவை, மணம் கொண்டிருப்பதுடன் சத்தும் நிறைந்தது.
சஃப்ரான் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், சஃப்ரான் (குங்குமப்பூ) - 10, வெங்காயம் - ஒன்று, பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், தக்காளி - ஒரு கப், பச்சைப் பட்டாணி - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, முந்திரி - 6, திராட்சை - ஒரு டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், ஏலக்காய் - 4, பட்டை - 2 துண்டு, பிரிஞ்சி இலை - ஒன்று, கிராம்பு - 4, கொத்தமல்லி - சிறிதளவு, நெய், எண்ணெய் - தலா 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி,  2 கப் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, சூடானதும் சீரகம், ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு போட்டு வறுக்கவும். பிறகு முந்திரி, திராட்சையையும் சேர்த்து வறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், கேரட், தக்காளி,  கீறிய பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, இஞ்சி - பூண்டு விழுது உப்பு சேர்த்துக் கிளறவும். குங்குமப்பூ சேர்த்துக் கலந்துவிடவும். அரிசியை தண்ணீருடன் சேர்த்து, குக்கரை மூடி 2  விசில் வந்ததும் இறக்கி, சிறிது நேரம் கழித்து திறந்து நெய், கொத்தமல்லி கலந்து பரிமாறவும்.
பச்சடி, ரய்தா, சிப்ஸ், அப்பளம் தொட்டுக்கொள்ளலாம்.
ஆனியன் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், சின்ன வெங்காயம் - 20, பூண்டுப் பல் - 6, காய்ந்த மிளகாய்  - 4 (காரம் அதிகம்  வேண்டும் என்றால் எண்ணிக்கையை கூட்டிக் கொள்ளலாம்), தக்காளி - 4, ஏலக்காய், கிராம்பு - தலா 2, நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் சிறிது விட்டு, சூடானதும் ஏலக்காய், கிராம்பை வறுக்கவும். கூடவே, சுத்தம் செய்த சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டுப் பல் போட்டு  வதக்கவும். பிறகு தக்காளி துண்டுகளையும் உப்பையும் சேர்த்து வதக்கி, ஆறியதும் அரைத்துக் கொள்ளவும். குக்கரில் மீதமுள்ள எண்ணெயை விட்டு, சூடானதும் அரைத்த விழுதைப் போட்டு ஒரு நிமிடம் கிளறவும். அரிசியைக் கழுவி சேர்த்து, ஒரு பங்கு அரிசிக்கு 2 பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரை மூடி, 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். ஆறிய பின் திறந்து நெய் விட்டு கலக்கினால்... ஆனியன் பிரியாணி தயார்.
சோயா பனீர் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், சோயா பனீர் - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், குடமிளகாய் (மஞ்சள், பச்சை, சிவப்பு கலர் - - நறுக்கியது) - ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - அரை கப், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி - 10, பட்டை - 2 துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய் - தலா 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுக்கவும். தண்ணீர் வடித்து, அரிசியை வறுத்து எடுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, சூடானதும் பட்டை, கிராம்பு ஏலக்காயை வாசனை வரும்படி வறுக்கவும். குடமிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்படி மேலும் வதக்கவும். மஞ்சள்தூள், தனியாத்தூள், கரம் மசலாத்தூள் சேர்த்துக் கலக்கவும். சோயா பனீர், அரிசியை சேர்த்துக் கலந்து, 2 கப் தண்ணீர் விட்டு மூடி, 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆறிய பிறகு எலுமிச்சைச் சாறு, வறுத்த  முந்திரி கலந்து பரிமாறவும்.
இதற்கு ரய்தா, பச்சடி தொட்டு சாப்பிடலாம்
வெஜ் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், கேரட், பச்சைப் பட்டாணி, இளசான சோளம் எல்லாம் சேர்ந்து - ஒரு கப், உருளைக்கிழங்கு துண்டுகள், காலிஃப்ளவர் துண்டுகள் - தலா அரை கப், பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய் - 2, சோம்பு - அரை டீஸ்பூன், கிராம்பு - 4, எண்ணெய் - தேவையான அளவு.
அரைக்க: வெங்காயம் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), கொத்தமல்லி தழை- அரை கப், புதினா - கால் கப், பூண்டு - 4 பல், இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி,  2 கப் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்று சேர்த்து அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, சூடானதும் பட்டை, ஏலக்காய், சோம்பு, கிராம்பு சேர்த்து வறுக்கவும். காய்கறி, அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்துக் கிளறவும். பச்சை வாசனை போனதும், இதில் அரிசியை தண்ணீருடன் சேர்த்துக் கலந்து மூடி வேகவிடவும். 2 விசில் வந்ததும் இறக்கி, சிறிது நேரதுக்குப் பிறகு திறந்து கரண்டியால் கிளறி பரிமாறலாம்.
பார்க்க கலர்ஃபுல்லாக இருக்கும் இந்த பிரியாணிக்கு, ஆனியன் ரய்தா சரியான சைட் டிஷ்.
 புதினா பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், புதினா, கொத்தமல்லி தழை - தலா ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 4, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 4 பல், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தக்காளி - 4, பட்டை - ஒரு துண்டு, எண்ணெய் - 2 டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி, 2 கப் தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தக்காளி ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, சூடானதும் பட்டையை போட்டு வறுக்கவும். அரைத்து வைத்துள்ள விழுது, மஞ்சள்தூள் போட்டு கிளறவும். இதில் அரிசியைத் தண்ணீருடன் சேர்த்து, உப்பு போட்டு கலந்து மூடிவிடவும். 2 விசில் வந்ததும் இறக்கவும். பிறகு நெய் விட்டு கலந்து பரிமாறவும்.
பீஸ் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வெங்காயம்  - 2 (நறுக்கிக் கொள்ளவும்), தக்காளி - 3  (நறுக்கிக் கொள்ள வும்), பச்சைப் பட்டாணி - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பிரிஞ்சி இலை - ஒன்று, முந்திரி - 6, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
அரைக்க: தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு பல் - 4, சோம்பு - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 3.  
செய்முறை: அரிசியைக் கழுவி, 2 கப் தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள வற்றை ஒன்று சேர்த்து அரைத்து எடுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, சூடானதும் பிரிஞ்சி இலையை சேர்க்கவும். முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும். கூடவே பட்டாணி, உப்பு, மஞ்சள்தூள், தக்காளி துண்டுகளை சேர்த்துக் கிளறவும். அரைத்து வைத்துள்ள விழுதை விட்டு கலக்கவும். ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் குக்கரில் சேர்த்துக் கலந்து மூடி, 2 விசில் வந்ததும் இறக்கினால்... பட்டாணி பிரியாணி தயார்.
இது, சத்து நிரம்பியது. குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
காலிஃப்ளவர் பிரியாணி
தேவையானவை:  பாசுமதி அரிசி - ஒரு கப், காலிஃப்ளவர் துண்டுகள் - 2 கப், நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், புதினா இலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசுமதி அரிசியைக் கழுவி, 2 கப் தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். காலிஃப்ளவர் துண்டுகளை சுத்தம் செய்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு, எலுமிச்சைச் சாறு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரம் மசாலாத்தூள் போட்டு கலந்து 5 அல்லது 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் நெய் விட்டு, சூடானதும் வெங்காயத் துண்டு களைப் போட்டு கிளறவும். ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் குக்கரில் சேர்க்கவும். காலிஃப்ள வர் கலவையையும் அதில் சேர்த்து மூடி, 2 விசில் வந்தவுடன் இறக்க வும். புதினா இலை தூவிக்  கலந்து பரிமாறவும்.
தால் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பூண்டுப் பல் - 10, சீரகத்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி தழை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 3, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: அரிசியைக் கழுவி, 2 பங்கு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். பருப்பையும் சுத்தம் செய்து தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். குக்கரில் நெய் விட்டு, சூடானதும் பூண்டுப் பல், கீறிய பச்சை மிளகாய் போட்டு கிளறவும். மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கலந்து,  ஊற வைத்த பருப்பு, அரிசியை தண்ணீருடன் குக்கரில் சேர்த்து மூடி, 2 விசில் விட்டு எடுத்து திறந்து, உப்பு சேர்க்கவும். மீண்டும் ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து எடுத்து திறந்து, கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்.
வித்தியாசமான சுவை, மணத்துடன் இருக்கும் இந்த பிரியாணி, வயிற்றுப்புண்ணை ஆற்றும் குணம் கொண்டது. தயிர் பச்சடி, சிப்ஸ், அப்பளம் இதற்கு ஏற்ற சைட் டிஷ்.
சௌத் இண்டியன் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், டபுள் பீன்ஸ், ஆனியன், தக்காளி துண்டுகள் எல்லாம் சேர்த்து - 2 கப். புளிக்காத தயிர், பால் - தலா அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - மூன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,  பிரெட் துண்டுகள் - ஒரு கப், நெய் - 3 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
அரைக்க: சிவப்பு மிளகாய் - 2, தனியா - ஒரு டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், கிராம்பு - 2, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி,  ஒரு கப் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்து எடுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, சூடானதும் இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், நறுக்கிய காய்கறிகள் போட்டு கிளறவும். பச்சை மிளகாய், அரைத்த வைத்துள்ள விழுது சேர்த்து, அரிசியை தண்ணீருடன் சேர்க்கவும். தயிர், பால் விட்டு கலந்து, குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வைத்து எடுக்கவும். ஆறியதும் திறந்து, நெய் விட்டு கலக்கவும். பிரெட் துண்டுகளை எண்ணெயில் வறுத்துக் கலந்தால்... சௌத் இண்டியன் பிரியாணி தயார்.
இதற்கு  சிப்ஸ், அப்பளம், பச்சடி தொட்டுக் கொள்ளலாம்.
பேக்டு பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி சாதம் - 2 கப், பச்சைப் பட்டாணி, நறுக்கிய கேரட், பீன்ஸ் கலந்தது - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, தக்காளி சாறு - அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், சீஸ் துருவல் - ஒரு கப், பூண்டு (பொடியாக நறுக்கியது) - 5 பல், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: பட்டாணி, கேரட், பீன்ஸை உப்பு போட்டு வேக வைத்துக் எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி சாறு, மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறவும். பச்சை வாசனை போனதும் வேக வைத்த காய்கறிகள் சேர்த்துக் கிளறவும். ஒன்றாக சேர்ந்து வந்ததும் சிறிது சீஸ் துருவல் தூவி கலக்கவும். எண்ணெய் தடவிய கிண்ணத்தில் ஒரு லேயர் சாதம், ஒரு லேயர் சீஸ் கலவையை பரவலாக போட்டு, மறுபடியும் மாற்றி மாற்றி போட்டு சீஸ் கலவை மேல் போட்டு அழுத்தி விட்டு. 'மைக்ரோவேவ் அவன்’-ல் வைத்து பேக் செய்து எடுக்கவும்.
குயிக் அண்ட் ஈஸி பிரியாணி
தேவையானவை: ரோஸ்டட் சேமியா (மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது, சோம்பு - தலா கால் டீஸ்பூன், ஏலக்காய், பட்டை, கிராம்பு - தலா ஒன்று, கேரட் துருவல், குடமிளகாய் துருவல், வெங்காய துருவல், தக்காளி துண்டுகள் - தலா 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு வறுக்கவும். அதனுடன் கீறிய பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறவும். பிறகு வெங்காயம், உப்பு சேர்த்துக் கிளறவும். வெங்காயம் வெந்ததும் மற்ற காய்களை போட்டு வதக்கவும். நன்கு வதங்கி வரும் சமயம் சேமியாவை சேர்த்து, சுடு தண்ணீர் விட்டு கலந்து கிளறவும். இறுகி வந்ததும் இறக்கி, கொத்தமல்லி, புதினா, தூவி அலங்கரித்தால்... குயிக் அண்ட் ஈஸி பிரியாணி தயார்.
ரோஸ்டட் சேமியா இல்லையென்றால், சேமியாவை வறுத்தும் செய்யலாம்.
முருங்கைக்கீரை பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், முருங்கைக்கீரை (இலை மட்டும்) - ஒன்றரை கப், வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - ஒன்று, பிரிஞ்சி இலை - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், நெய் - தலா 2 டீஸ்பூன், உப்பு -  தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி, தண்ணீர் விட்டு ஊற வைத்து,  சாதம் வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடா னதும் பிரிஞ்சி இலையை சேர்க்கவும். கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், உப்பு, முருங்கைக்கீரை, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறவும்.  கீரை வதங்கியதும் கரம் மசாலாத்தூள் சேர்த்து கலக்கவும். பச்சை வாசனை போய் நல்ல மணம் வரும் சமயம் சாதத்தை உதிர்த்துப் போட்டு கலக்கவும். பிறகு, நெய் விட்டு கலந்து, குறைந்த தீயில் 2 நிமிடம் வைத்து எடுக்கவும்.
இது, இரும்புச் சத்து நிறைந்த பிரியாணி.
ஸ்பிரவுட் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பிரிஞ்சி இலை - ஒன்று, ஏலக்காய், கிராம்பு - தலா 2, பட்டை -  ஒரு  சிறு துண்டு, இஞ்சி - பூண்டு விழுது - கால் டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, முளைகட்டிய பச்சை பயறு, முளைகட்டிய வெந்தயம், முளைகட்டிய கொள்ளு எல்லாம் சேர்ந்து - ஒரு கப், எண்ணெய் - 4 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், புதினா - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, எலுமிச்சைச் சாறு- ஒரு ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி, 2 கப் தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் உதிரியாக சாதம் வடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பிரிஞ்சி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை போட்டு வறுக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு போட்டு கிளறவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது போட்டு கிளறவும். பச்சை வாசனை போனதும் முளைகட்டிய தானியங்களைப் போட்டு கிளறவும். தானியங்கள் வெந்ததும், அடுப்பை குறைந்த தீயில் வைத்து  சாதம் சேர்த்து மெதுவாக கலந்துவிடவும்.  நெய், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து இறக்கவும். புதினா தூவி அலங்கரிக்கவும்.
பலாக்கொட்டை பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வெங்காயம், தக்காளி - தலா 2, பச்சை மிளகாய் - 2 அல்லது 3, கேரட் - ஒன்று, பலாக்கொட்டை - 12, எண்ணெய் - 4 டீஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா 2, பிரிஞ்சி இலை - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி, 2 கப் தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். பலாக்கொட்டையை தட்டி அல்லது நசுக்கி தோல் நீக்கி, சிறு துண்டு களாக்கி வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, சூடானதும் பிரிஞ்சி இலையை சேர்க்கவும். சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு வறுக்கவும். நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். நறுக்கிய கேரட், தக்காளி துண்டுகள், பலாக்கொட்டை துண்டுகள் சேர்த்துக் கலக்கவும். அதில் அரிசியைத் தண்ணீருடன் சேர்த்து, குக்கரை மூடி, 2 விசில் வந்ததும் எடுத்து, ஆவி போனதும் திறந்து, கிளறினால்... பலாக்கொட்டை பிரியாணி தயார்.
 ட்ரை ஃப்ரூட்ஸ் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பாதாம் - 6, முந்திரி - 6, திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி (பல கலர்) - தலா 2 டீஸ்பூன், பேரீச்சம்பழம் (விதை நீக்கியது) 4, பச்சை மிளகாய் - 2, கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய்ப் பால் - அரை கப், நெய் - 4 டீஸ்பூன், ஏலக்காய், கிராம்பு - தலா 2, உப்பு - சிறிதளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊற வைக்கவும். தேங்காய்ப் பால், உப்பு சேர்த்து உதிரியாக சாதம் வடித்துக் கொள்ளவும். கடாயில் சிறிது நெய் விட்டு, சூடானதும் பாதாம் துண்டுகள், முந்திரித் துண்டுகளை பொன்னிறமாக வறுத்து, திராட்சை, பேரீச்சம்பழ துண்டுகள், டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து லேசாக புரட்டி எடுக்கவும். கடாயில் நெய் விட்டு, சூடானதும் ஏலக்காய், கிராம்பு போட்டு வறுக்கவும். இதனுடன் கீறிய பச்சை மிளகாய், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும். சாதத்தை மசாலா கலவையில் சேர்த்துக் கலந்து, தீயைக் குறைத்து 2 நிமிடம் வைத்து கிளறி எடுக்கவும். ட்ரை ஃப்ரூட்ஸ் கலவையை கலந்து பரிமாறவும்.
சூடாக அப்படியே சாப்பிடலாம். இதற்கு சைட் டிஷ் எதுவும் தேவையில்லை.
 அவல் பிரியாணி
தேவையானவை: கெட்டி அவல் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 2, சோம்பு - கால் டீஸ்பூன், பட்டை - 1 துண்டு, ஏலக்காய் - 2, கிராம்பு - 2, வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டுகள், பச்சைப் பட்டாணி, கேரட் துண்டுகள் - தலா 2 ஸ்பூன்,  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: அவலை தண்ணீர் தெளித்துப் பிசிறி 10 நிமிடம் ஊற வைக்கவும், கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு வறுக்கவும். நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். வெங்காயம் வதங்கியதும் உருளைக்கிழங்கு, பட்டாணி, கேரட் சேர்த்துக் கிளறவும். காய்கறி வெந்து வரும் சமயம் பிசிறி வைத்துள்ள அவலை சேர்த்து லேசாக கலந்து கிளறவும். அவல் வெந்ததும் இறக்கி, கொத்தமல்லி, புதினா தூவி அலங்கரிக்கவும்.
இது, விரைவில் தயாரிக்கக் கூடியது. எல்லோருக்கும் ஏற்றது.
தஹி பிரியாணி
தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், தயிர் - ஒரு கப், வெள்ளரிக்காய் துருவல் - கால் கப், கேரட் துருவல்- கால் கப், பச்சை திராட்சை - கால் கப், புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, இஞ்சி - ஒரு சிறு துண்டு, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ - தலா ஒன்று, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியில் தண்ணீர் விட்டு கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். அப்படியே ஆவியில் வேகவைத்து எடுக்கவும். முத்து போன்று உதிரியாக இருக்கும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ தளித்து, இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கி எடுக்கவும். ஒரு பாத்திரத்தில், ஆவியில் வேக வைத்த  ஜவ்வரிசி, தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வறுத்து வைத்த மசாலாவை போட்டு கிளறவும். வெள்ளரிக்காய், கேரட், பச்சை திராட்சை, புதினா, கொத்தமல்லி போட்டு கலந்தால்... தஹி பிரியாணி தயார்.
பச்சை சுண்டைக்காய் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பச்சை சுண்டைக்காய் - ஒரு கப், கடலைப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 4, சோம்பு - அரை டீஸ்பூன், ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று, பட்டை - ஒரு துண்டு, இஞ்சி - ஒரு சிறு துண்டு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
 
செய்முறை: அரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, உதிரியாக சாதம் செய்து கொள்ளவும். சுண்டைக்காயை தட்டி தண்ணீரில் போட்டு விதையை நீக்கி எடுக்கவும். கடலைப்பருப்பை 30 நிமிடம் ஊற வைத்து . தண்ணீரை வடித்து மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். சுண்டைக்காயையும் அரைத்த பருப்பையும் ஆவியில் வேகவைத்து எடுத்து, உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, நறுக்கிய இஞ்சியை வறுத்து, ஆவியில் வேக வைத்த சுண்டைக்காய் - பருப்பை சேர்த்து கரண்டியால் சுருள கிளறவும். நன்கு சேர்ந்து, வெந்து உதிரியாக வந்ததும் தீயை
குறைத்துவிட்டு, உதிரியாக செய்து வைத்துள்ள சாதத்தை போட்டு கலந்து, மிகக் குறைந்த தீயில் 2 நிமிடம் வைத்து கிளறினால்... பச்சை சுண்டைக்காய் பிரியாணி தயார்
கேபேஜ் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், முட்டை கோஸ் (நறுக்கியது) - ஒன்றரை கப், தக்காளி துண்டுகள் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, தனியாத்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,  தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
 
செய்முறை: அரிசியைக் கழுவி, 2 கப் தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, சீரகத்தை வறுக்கவும். அத னுடன் நறுக்கிய கோஸ், நறுக்கிய வெங்காயம், தக்காளி துண்டுகள், இஞ்சி - பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து, உப்பு போட்டு கிளறவும். தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கலந்து, அதில் அரிசியைத் தண்ணீருடன் சேர்த்து, குக்கரை மூடி, 2 விசில் வந்ததும் இறக்கவும். சிறிது நேரம் கழித்து திறந்து, நெய் விட்டு கலக்கவும்.
ஸ்பைசி பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வெங்காயம் - 2, கொத்தமல்லி இலை - அரை கப், வெங்காயத் தாள் - ஒரு கொத்து, காய்ந்த மிளகாய் - 2, பூண்டுப் பல் - 5, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, சோயா சாஸ், சில்லி சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், நெய் - 2 ஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு -  தேவையான அளவு.
செய்முறை: ஒரு வெங்காயம், பூண்டு, மிளகாய் வத்தல், கொத்தமல்லி, இஞ்சி, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். அரிசியைக் கழுவி, 2 கப் தண்ணீர் விட்டு  ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, சூடானதும் மீதமுள்ள ஒரு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு வதக்கவும். அரைத்த வெங்காய விழுதை அதில் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், சிறிது உப்பு சேர்க்கவும். அதில் அரிசியைத் தண்ணீருடன் சேர்த்து, குக்கரை மூடி, 2 விசில்  வந்தவுடன் இறக்கவும். 5 நிமிடம் கழித்து திறந்து... நெய், நறுக்கிய வெங்காயத்தாள் கலந்து பரிமாறவும்.
புளி பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், சின்ன வெங்காயம் - 12, தக்காளி - 3, புளி - நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய்  - 3, தனியா - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், கொப்பரை துருவல் - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், நெய் - தலா 2 டீஸ்பூன், கொத்தமல்லி இலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் புளியை வறுத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாய், தனியா, வெந்தயம், கொப்பரை துருவல், சீரகத்தை வறுத்து எடுக்கவும், புளி, வறுத்த பொருட்கள் அனைத்தும் சேர்த்து பொடி செய்யவும். அரிசி, பருப்பை கழுவி, தனித்தனியாக ஊற வைக்கவும் (ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் விடவேண்டும். பருப்பு மூழ்கும் அளவு நீர் விட்டால் போதுமானது). கடாயில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், உப்பு, தக்காளி போட்டு வதக்கவும், நன்கு வதங்கியதும் வறுத்து பொடித்த பொடி மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கலக்கி தனியே வைக்கவும்.. ஊற வைத்த அரிசி, பருப்பை தண்ணீருடன் குக்கரில் சேர்த்து, 2 விசில்  வரும் வரை வைத்து இறக்கவும். சிறிது நேரம் கழித்து திறந்து, வெங்காய கலவையை சேர்த்து நெய் விட்டு கலந்து மூடி, 5 நிமிடம் கழித்து எடுத்து கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.
சிம்பிள் வெஜ் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், நறுக்கிய கேரட், பீன்ஸ், வெங்காயம் எல்லாம் சேர்த்து - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய், நெய் - தலா 2 டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, கிராம்பு - 3, ஏலக்காய் - 3, சோம்பு - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி, 2 கப் தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு போட்டு வறுத்து, இஞ்சி - பூண்டு விழுது, காய்கறி துண்டுகள், கீறிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கலக்கவும். ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் குக்கரில் சேர்த்து மூடி, 2 விசில் வந்ததும் இறக்கி வைக்கவும். 5 நிமிடம் கழித்து திறந்து, நெய் விட்டு கலந்து பரிமாறவும்.
ஷாஹி பனீர் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வெங்காயம், தக்காளி - தலா 2, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டுப் பல் - 4, முந்திரிப் பருப்பு - 10, கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், ஏலக்காய், பட்டை, கிராம்பு - தலா 2 ,  தயிர் - அரை கப், பனீர் துண்டுகள் - 1 கப், நெய் - 2 டீஸ்பூன், கொத்த மல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: அரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்து, உதிரியாக சாதம் வடித்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் ஏலக்காய், பட்டை, கிராம்பு தாளித்து, அரைத்த வெங்காய விழுதை போட்டு கிளறவும். பச்சை வாசனை போய், வெந்து வரும் சமயம், எல்லா தூள்களையும் போட்டு கலந்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு, உப்பு சேர்க்கவும். நன்கு கொதித்து கிரேவியாக வரும் சமயம் தயிர் விடவும். முந்திரி விழுது சேர்த்து மேலும் கொதிக்க விட்டு, பனீர் துண்டுகளை சேர்க்கவும். தீயை நிறுத்தி, உதிரியான சாதத்தை போட்டு கலக்கவும். பிறகு, நெய் விட்டு கிளறி, கொத்தமல்லி தூவி அலங்கரித்தால்... ஷாஹி பனீர் பிரியாணி தயார்.


Related

30 நாள் 30 வகை சமையல் 2804875743654553987

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item