ஃபாஸ்ட் ஃபுட் மேளா! முந்திரி குருமா தேவையானவை: பொடியாக நறுக்கிய காய்கறிகள் - ஒரு கப், முந்திரி, தக்காளி விழுது - தலா 2 கப், வெங்காயம் - 2,...
ஃபாஸ்ட் ஃபுட் மேளா!
முந்திரி குருமா
தேவையானவை: பொடியாக நறுக்கிய காய்கறிகள் - ஒரு கப், முந்திரி, தக்காளி விழுது - தலா 2 கப், வெங்காயம் - 2, புளிக்காத தயிர், எண்ணெய் - தலா 2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன். அரைத்துக் கொள்ள: இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 4 பல், பச்சைமிளகாய் - 2, மிளகாய்த்தூள், சோம்பு - தலா ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1.தனியாக அரைக்க: முந்திரி - 8, தேங்காய் துருவல் - அரை கப்.
செய்முறை: காய்கறிகளில் ஒரு கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து, குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியே அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய், நெய்யைக் கலந்து காய வைத்து அதில், முந்திரியை வறுத்து, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்த மசாலா விழுதை பச்சை வாடை போக வதக்கி, தக்காளி விழுது சேர்த்து, குறைந்த தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும். தயிரைக் கடைந்து அதில் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து, அரைத்த தேங்காய் - முந்திரி விழுது, உப்பு சேர்த்து, தேவையெனில் தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
தூள் பக்கோடா
தேவையானவை: நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒரு கப், கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்துடன் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து, சிறிது தண்ணீரைத் தெளித்துப் பிசறவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், பிசைந்த கலவையை நன்றாக கைகளால் உதிர்த்துப் போட்டு உதிரியான பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.
உருளைக்கிழங்கு குருமா
தேவையான பொருட்கள்-உருளைக் கிழங்கு - 1/4 கிலோ-தக்காளி - 3=தேங்காய் - 1/2 மூடி=சின்ன வெங்காயம் - 100 கிராம்=இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி=பொட்டுக்கடலை - 1/2 தேக்கரண்டி=பட்டை - 4=கிராம்பு - 4.=சோம்பு - 1/2 தேக்கரண்டி=கசகசா - 1/2 தேக்கரண்டி=கறிவேப்பிலை - 1 கொத்து=மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி=மல்லித்தூள் - 1 1/2 தேக்கரண்டி=மஞ்சள் தூள் - 1 சிட்டிகை=கொத்துமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை=1. உருளைக்கிழங்கை முதலில் தனியே வேகவைத்துக் கொள்ளவும்.=2. அடுத்து சின்ன வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.=3. பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, போட்டு தாளிக்கவும்.=4. அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.=5. பிறகு தக்காளி, கருவேப்பிலை போட்டு வதக்கவும்.=6. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.=7. அதில் மஞ்சள்தூள் சேர்த்து கலந்து, பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும்.
8. அதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து மல்லித்தூள் வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.=9. பிறகு தேங்காய், சோம்பு, கசகசா, பொட்டுக்கடலை சேர்த்து நன்றாக அரைத்து, அடுப்பில் உள்ள உருளைக்கிழங்கு கலவையுடன் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும்.=10. குழம்பு நன்கு கொதித்ததும், கொத்துமல்லி தழை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
கடலைப்பருப்பு குருமா
தேவையான பொருட்கள்=கடலைப்பருப்பு - 50 கிராம்=பெரிய வெங்காயம் - 1=தக்காளி - 1=தேங்காய் துருவல் - 1/4 கோப்பை=
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி=கறிவேப்பிலை - 1 கொத்து=கொத்துமல்லித்தழை - சிறிதளவு=பட்டை - 2=
சோம்பு - 1/2 தேக்கரண்டி=கசகசா - 1/4 தேக்கரண்டி=லவங்கம் - 5=மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி=சீரகம் - 1/4 தேக்கரண்டி=
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி=மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி=எண்ணெய் - 3 தேக்கரண்டி=உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. கடலைப்பருப்பை கழுவி சீரகம், மஞ்சள்தூள் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு முக்கால் பதத்திற்கு குழைந்து விடாமல் தண்ணீரில் வேகவைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. தேங்காயைத் துருவி சோம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, போட்டு தாளித்து, பிறகு நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.
5. பிறகு இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. நன்கு வதங்கியதும், மல்லித்தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒரு கோப்பை தண்ணீர் சேர்த்து, நன்கு கொதிக்க விடவும்.
7. ஒரு கொதி வந்ததும் தனியே அரைத்து வைத்துள்ள தேங்காயைச் சேர்க்கவும்.
8. பிறகு வேக வைத்த கடலைப்பருப்பை ஒன்று இரண்டாக லேசாக மசித்து, இதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பாத்திரம் அடிபிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
9. பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்துமல்லித்தழை சேர்க்கவும்.
குறிப்பு
1. கடலைப் பருப்பை குழைய வேக வைத்தால் குருமா கூழாகி விடும்.
2. வேக வைத்த கடலைப்பருப்பை குழம்புடன் சேர்த்ததும், குழம்பு அடிபிடிக்கும். அதனால் அடிக்கடி கிளற வேண்டும்.
3. இதனுடன் புடலங்காய், சௌசௌ, சுரைக்காய் போன்ற காய்களைச் சேர்த்தும் குருமா செய்யலாம்.
4. இக்குருமா இட்லி, தோசை, சப்பாத்தி, சாப்பாட்டிற்கு சுவையாக இருக்கும்.
தக்காளி கொத்சு
தேவையான பொருட்கள்
தக்காளி - 4=பெரிய வெங்காயம் - 3=கறிவேப்பிலை - 2 கொத்து=மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி=மல்லித் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை=பெருங்காயம் - 1 சிட்டிகை=கடுகு - 1/4 தேக்கரண்டி=உடைத்த உளுந்து - 1/4 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1/4 தேக்கரண்டி=எண்ணெய் - 3 தேக்கரண்டி=உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. பெரிய வெங்காயம், தக்காளியை பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
2. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உடைத்த உளுந்து, கடலைப் பருப்பு போட்டு தாளிக்கவும்.
3. அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. வெங்காயம் சிவக்கும் அளவு வதக்கிய பின் நறுக்கி வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
5. தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து லேசாக கிளறி, உப்பு, 2 குவளை (டம்ளர்) தண்ணீர் சேர்த்து, மல்லித் தூள் வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
6. தண்ணீர் நன்றாக சுண்டி, ஓரளவிற்கு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
குறிப்பு
1. தக்காளி குறைவாக சேர்க்க விரும்பினால் 2 தேக்கரண்டி தக்காளி கூழ் (சாஸ்) சேர்த்து செய்தாலும் நன்றாக இருக்கும்.
2. சப்பாத்தி, தோசை, மற்றும் சாப்பாட்டிற்கு தக்காளி கொத்சு மிகவும் சுவையாக இருக்கும்.
ரவா தோசை
தேவையான பொருட்கள்
ரவை - 400 கிராம் (2 கோப்பை)=அரிசி மாவு - 1 மேஜைக் கரண்டி=மைதா மாவு - 1 மேஜைக் கரண்டி=கொத்துமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு=பச்சை மிளகாய் - சிறிதளவு=இஞ்சி - சிறிதளவு=மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி=கடுகு - 1 தேக்கரண்டி=பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு=உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. புளித்த மோரில் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
2. நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை மோரில் சேர்க்கவும்.
3. பின்னர் அதனுடன் வறுத்த ரவை, மைதா மாவு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
4. பிறகு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயைக் காயவைத்து அதில் மிளகு, சீரகம், கடுகு ஆகியவை சேர்த்து தாளித்து, கலந்து வைத்த மாவில் கொட்டவும்.
பூரி
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கோப்பை (150 கிராம்)=மைதா மாவு - 1 கோப்பை (150 கிராம்)=ரவை - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு=உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் 1/2 கோப்பை தண்ணீரில் 1 தேக்கரண்டி எண்ணெய், உப்பு சேர்த்து அதில் கோதுமை மாவு, மைதா மாவு, ரவை சேர்த்து கையில் ஓட்டாத பதத்தில் மாவாகப் பிசைந்து சிறு சிறு உருண்டையாக (பிளவு இல்லாமல்) உருட்டி வைக்கவும்.
2. சிறு உருண்டைகளை சப்பாத்தி கல்லில் இட்டு சிறிது எண்ணெய் ஊற்றி பூரி அளவிற்கு மெல்லியதாக அழுத்தி வைக்கவும்.
3. வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அழுத்தி வைத்துள்ள பூரி மாவை ஒன்று ஒன்றாக போட்டு சிவந்து உப்பி பொன் நிறமானதும் எடுத்து, வடிதட்டில் வைத்து எண்ணெய் இறங்கியதும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு
1. பூரி மாவு பிசைந்து அதிக நேரம் வைத்திருந்து பொரித்தால் அதிக எண்ணெய் உறிஞ்சும். அதனால் மாவு பிசைந்த சிறிது நேரத்தில் பூரி பொரித்து விட வேண்டும்.
2. மாவு பிசையும் போது ரவைக்குப் பதிலாக 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தாலும் பூரி மொருமொருப்பாக வரும்.
5. பின்னர் அதனுடன் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
6. தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.
குறிப்பு
1. மாவை அதிக நேரம் ஊறவைக்கக் கூடாது. ஊறினால் தோசை மொறுமொறுப்பாக வராது.
2. வெங்காயத்தை பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து தோசை சுட்டால் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.
பருப்பு உருண்டை குழம்பு
தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு - 150 கிராம்=தேங்காய் - 1/4 மூடி=பெரிய வெங்காயம் - 2=தக்காளி - 3
பச்சை மிளகாய் - 1=இஞ்சி விழுது - 1=மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி=பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி=பட்டை - 4=கிராம்பு - 4=சோம்பு - 1 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி=கறிவேப்பிலை - 1 கொத்து=கொத்து மல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. கடலைப்பருப்பில் பாதி பருப்பை ஊற வைத்துக் கொள்ளவும், மீதி பருப்பை வேக வைத்துக்கொள்ளவும்.
2. ஊற வைத்த கடலைப்பருப்பை வடைக்கு அரைப்பது போல் அரைத்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி விழுது 1/4 ஸ்பூன், பூண்டு விழுது 1/4 ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லி, நறுக்கிய பச்சை மிளகாய், சோம்பு, அனைத்தையும் போட்டு சிறு உருண்டையாக உருட்டி இட்லி தட்டில் ஆவியில் வேக வைக்கவும்.
3. பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, போட்டு அவை வெடித்ததும், வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது போட்டு, வாசனை போகும் வரை வதக்கவும்.
4. இதில் மிளகாய்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
5. பிறகு வேகவைத்த கடலைப் பருப்பை ஒன்றிரண்டாக மசித்து இதில் சேர்க்கவும்.
6. பிறகு தேங்காய், சோம்பு, கசகசா ஆகியவற்றை அரைத்து சேர்க்கவும்.
7. பிறகு நன்கு கொதித்ததும், ஆவியில் வேக வைத்த உருண்டையை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
8. பிறகு இறக்கிவைக்கும் போது, கொத்துமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.
கறிவேப்பிலை சட்னி
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 1 கட்டு=சின்ன வெங்காயம் - 1 கோப்பை=தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2=கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி=உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி
புளி - 1 கொட்டை அளவு=தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி
பூண்டு - 4 பல்லு=இஞ்சி - 1 துண்டு=உப்பு - தேவையான அளவு
தாளிக்க=கடுகு - 1/2 தேக்கரண்டி=கடலைப்பருப்பு - 1/4தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/4 தேக்கரண்டி=பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 1 தேக்கரண்டி=கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
1. சிறிது எண்ணெயை விட்டு கருவேப்பிலையை நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
2. வாணலியில் சிறிது எண்ணெயைவிட்டு கடலைபருப்பையும் உளுந்தையும் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
3. பிறகு அதில் வெங்காயத்தைக் கொட்டி சிவக்க வதக்கவும்.
4. அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
5. பிறகு அதில் புளியைச் சேர்க்கவும்.
6. பின்னர் இறக்கிவைத்து தேங்காய் துருவலைச் சேர்த்து ஆறவைக்கவும்.
7. பிறகு அனைத்தையும் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
8. அடுத்து தாளிக்கும் பொருள்களைக் கொண்டு தாளிக்கவும்.
குறிப்பு:=1. இறக்கும் போது ஒரு தேக்கரண்டி நெய்விட்டு இறக்கினால் வாசனையாக இருக்கும்.
வெங்காய சட்னி
தேவையான பொருட்கள்=வெங்காயம் - 200 கிராம்=தக்காளி - 2
பூண்டு - 3 பல்லு=இஞ்சி - 1 துண்டு=உப்பு - தேவையான அளவு
தாளிக்க=கடுகு - 1/2 தேக்கரண்டி=கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி=பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 1 தேக்கரண்டி=கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
1. வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, இவை அனைத்தையும் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
2. பிறகு தாளிக்கும் பொருள்களைப் போட்டு தாளித்து அரைத்த விழுதை அதில் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.
குறிப்பு=1. இறக்கும் போது ஒரு தேக்கரண்டி நெய்விட்டு இறக்கினால் வாசனையாக இருக்கும்.
ரவா கேசரி
தேவையான பொருட்கள்=ரவை - 2 கோப்பை=சர்க்கரை - 1 1/2 கோப்பை=முந்திரி - 10
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)=திராட்சை - 10=நெய் - 50 கிராம்=கேசரி பவுடர் - சிறிதளவு
செய்முறை
1. ரவையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
2. பாத்திரத்தில் 5 கோப்பை தண்ணீர் விட்டு(ஒரு மடங்கு ரவைக்கு 2 1/2 மடங்கு தண்ணீர்), அதில் கேசரி பவுடர் சிறிது சேர்த்து கொதிக்க விடவும்.
3. பிறகு இதில் வறுத்த ரவையை கொட்டி கிளறி விடவும்.
4. ரவை வெந்தவுடன் சர்க்கரையை கொட்டி பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விடவும்.
5. பின்னர் 2 ஸ்பூன் நெய், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
6. இக்கலவையை நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி விருப்பமான வடிவில் வெட்டவும்.
குறிப்பு
1. ரவா கேசரி செய்யும் போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து செய்தால் சுவை கூடும்.
கொத்தமல்லி சட்னி
தேவையான பொருட்கள்
கொத்தமல்லித்தழை - 1 கட்டு=தேங்காய் - 1/4 மூடி=பச்சை மிளகாய் - 3 அல்லது 4=உப்பு - தேவையான அளவு
தாளிக்க=கடுகு - 1/2 தேக்கரண்டி=கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி=உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது=எண்ணெய் - 1 தேக்கரண்டி=கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
1. கொத்தமல்லித்தழையை நன்கு நீரில் கழுவி, துருவிய தேங்காய், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
2. பிறகு தாளிக்கும் பொருள்களைப் போட்டு தாளித்து அரைத்த வைத்துள்ள விழுதில் சேர்த்து பரிமாறவும்
குறிப்பு
1. தாளிக்கும் போது ஒரு தேக்கரண்டி நெய்விட்டு இறக்கினால் வாசனையாக இருக்கும்.
வெண் பொங்கல்
தேவையான பொருட்கள்=பச்சரிசி - 1 கோப்பை (250 கிராம்)=பாசிப் பருப்பு - 50 கிராம்=மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி=நெய் - 1 மேஜைக்கரண்டி=முந்திரி - 10=இஞ்சி - 1/2 இன்ச் அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து=தண்ணீர் - 5 கோப்பை=உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை
1. பச்சரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கழுவி வடித்து வைத்துக் கொள்ளவும்.
2. பாசிப்பருப்பை எண்ணெய் விடாமல் வறுத்து கழுவிக் கொள்ளவும்.
3. அடுப்பில் குக்கரை வைத்து 5 கோப்பை தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
4. பிறகு பாசிப்பருப்பை போட்டு அரை வேக்காடு வேக விடவும்.
5. அதனுடன் கழுவி வைத்துள்ள அரிசியைப் போட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும்.
6. குக்கரில் 5 விசில் சத்தம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
7. தனியாக ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி நெய் விட்டு அதனுடன் உடைத்த முந்திரியை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
8. குக்கரில் ஆவி அடங்கியதும், வறுத்த முந்திரியை அதனுடன் சேர்க்கவும்.
9. அதனுடன் சிறிது நெய்யில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, துருவிய இஞ்சி ஆகியவற்றை தாளித்து சேர்க்கவும்.
10. பிறகு மீதமுள்ள நெய்யையும் ஊற்றி, கிளறி, சிறிது நேரம் மூடி வைக்கவும்.
11. பொங்கல் சிறிது ஆறியவுடன் பரிமாறவும்.
குறிப்பு
1. ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு தண்ணீரும், பாசிப்பருப்புக்கு ஒரு பங்குக்கு இரண்டு பங்கு தண்ணீரும் சேர்க்கவும்.
2. முழு மிளகு சாப்பிட விரும்பாதவர்கள் மிளகுத்தூளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
Post a Comment