நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் ! - 1

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர் கே.எஸ்.கமாலுதீன் மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் உன்னை நீயே அறிவாய்! செ...

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்
கே.எஸ்.கமாலுதீன் மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

உன்னை நீயே அறிவாய்!

சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெரு பிரமாண்டமான கடைகளை அண்ணாந்து பார்க்கும் நம் கிராமத்து இளைஞர்கள், நாமும் அவர்களைப் போல் ஆக முடியுமா என பிரமிக்கிறார்கள். திருபாய் அம்பானியின் வெற்றிக் கதையை வாசித்த எம்பிஏ படிக்கும் சிறு நகரத்து இளைஞர்கள் ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல் மாதிரி கம்பெனிகளை நம்மால் தொடங்கி நடத்த முடியுமா என வியக்கிறார்கள்.

ஐ.டி படிப்பைத் தேர்வு செய்த பெரு நகரத்து இளைஞர்கள் பில்கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க் போன்று ஆக முடியுமா என கனவு காணுகிறார்கள். இந்த பிரமிப்பும், வியப்பும், கனவும் நிஜம் ஆகாது என்று எப்படிச் சொல்ல முடியும்..? எந்த விதைக்குள் எந்த விருட்சம் என்று எவர் கணிக்க முடியும்..?

சிந்தனைகளில் தரமும், உழைப்பில் உரமும் இருக்குமானால் யார் வேண்டுமானாலும் சூப்பர் பிசினஸ்மேன் ஆகலாம், ஜெயிக்கலாம். இதற்கு முதலில், என்னிடம் பிசினஸ்மேன் ஆகக்கூடிய முழுத் திறனும், தகுதியும் இருக்கிறது என நம்பவேண்டும். அடுத்தது, பிசினஸில் ஜெயிக்க வைக்கும் அத்தனை வித்தைகளையும், சூட்சுமங்களையும் அறிந்து கொள்ள மனக் கண்களை எப்போதும் திறந்தே வைத்திருக்க வேண்டும்.
‘‘படித்தப் படிப்புக்கான வேலை கிடைக்கவில்லை. உழைப்புக்கு ஏற்ற சம்பளம் இல்லை; திறமையும் அறிவும் வீணாகிக் கொண்டிருக்கிறது. வயதும் போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றுமே செய்யவில்லையே’’ என இன்றைய இளைஞர்கள் நான்கு பேர் கூடினாலே இந்தப் பேச்சுக்கள்தான் அதிகமாக இருக்கும். இளைஞர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து பெரிதும் கவலைப்படுகின்றனர். இதற்கெல்லாம் ஒரே தீர்வு, சொந்தமாகத் தொழில் தொடங்குவது என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அது உண்மையும்கூட.

ஏன் தொழில் தொடங்க வேண்டும்?

‘ரிச் டாட்... புவர் டாட்’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற பிசினஸ் தொடர்பான புத்தகங்களை எழுதியவர் ராபர்ட் கியாஸ்கி. இவர் இந்த 21-ம் நூற்றாண்டு தொழில்முனைவோர்களுக்கானது என்று குறிப்பிட்டு, அதற்கு ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார். காரணம், இந்த நூற்றாண்டு மனிதர் களில் சொந்தமாகத் தொழில் செய்பவர்களைத் தவிர, பிறர் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் உணர்வதில்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன.
மிகவும் பரபரப்பாக மாறிவிட்ட இந்த வாழ்க்கை முறை நம்முடைய எதிர்காலத்தை ஒரு நிலையற்ற தன்மைக்குள் வைத்திருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வேலை நிரந்தரமில்லை. நாம் வாங்கும் சம்பளம் நிரந்தரமில்லை. எனவேதான், இன்றைய தலைமுறையினர் அனைவரும் சொந்த மாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற மன நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் அரசு வேலைக்குப் போக வேண்டும் என்பதே எல்லோரது குறிக்கோளாகவும் இருந்தது. ஆனால், இப்போது யாரைக் கேட்டாலும் பிசினஸ் தொடங்க வேண்டும் என்பதே பதிலாக இருக்கிறது.

தொழில் தொடங்கினால், சுதந்திரமாகச் செயல்பட முடியும். நம்முடைய திறமைகளைப் பிறரிடம் நிரூபித்துக் காட்ட வேண்டிய தேவை இல்லை. நாமே அவற்றை நடைமுறைப்படுத்தி முயற்சி செய்து பார்க்கலாம். எல்லையில்லா வளர்ச்சியைச் சாத்தியமாக்கிக்கொள்ள முடியும். நம் தேவைகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. நம்மை சுற்றி இருக்கும் உலகம் நம்மிடம் அதிகமாக எதிர்பார்க்கிறது. நம் தேவைகளையும், பிறரது எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற பிசினஸ் நமக்குப் பெரிதாக கைகொடுக்கும்.

அதுமட்டுமல்லாமல், மக்களின் தேவையும் நுகர்வுக் கலாசாரமும் வெகுவாக மாறியிருக்கிறது. இது தொழில் செய்வதற்கான பல்வேறு வாய்ப்பு களையும் இந்த மெகா சந்தையில் உருவாக்கி இருக்கிறது. அந்த வாய்ப்புகள் தொழில்முனை வோர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றன. அவற்றை அடையாளம் காண்பவர்களே தொழில் முனைவோர்களாக ஆகும் பாக்கியம் பெற்றவர்கள்.
எல்லோராலும் பிசினஸ் செய்ய முடியுமா?

இன்றைய இளைஞர்களில் 35% பேர், படித்து முடித்ததும் ஏதோ ஒரு வேலைக்குப் போய் விடுகின்றனர். 35 சதவிகிதத்தினருக்கு பேர் படித்து முடித்தபிறகு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. இவர்கள் படிக்கும்போது நாம் ஏன் படிக்கிறோம், என்ன படிக்கிறோம், எதிர் காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றி பெரிதாக கவலைப்படுவ தில்லை. இவர்கள் பின்னாட்களில் மிகவும் கஷ்டப்படுகின்றனர். 25 சதவிகிதத்தினர் குடும்பத் தொழில்களைப் பார்த்து கொள் கின்றனர். 5% பேர் மட்டுமே படித்து முடித்ததும், சொந்தமாகத் தொழில் செய்ய முடிவெடுக்கின்றனர்.

இதில் வேலை பார்க்கும் 35 சதவிகித இளைஞர்கள், தங்களின் 30 வயதைக் கடக்கும்போதுதான் அவர்களுக்குள்ளும் நாம் ஏன் சொந்தமாகத் தொழில் தொடங்கக் கூடாது என்ற எண்ணம் உண்டாகிறது. அவர்களிலும் சிலர்தான் தாங்கள் வேலை பார்த்த அனுபவத்தை வைத்தும், தங்களின் சுய ஆர்வத்தை வைத்தும் தொழில் தொடங்க முன்வருகிறார்கள். பலரும், செய்யும் வேலையை விட்டுவிட்டு, தொழில் தொடங்கினால் சம்பளமும் போய்விடுமே! தொழிலில் நஷ்டம் வந்துவிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் நினைத்து, அதே வேலையில் இருந்துவிடுகிறார்கள்.

பிசினஸ் தொடங்கப் பணம் அவசியமே. கொஞ்சம் முயற்சித்தால், அதை எளிதில் தயார் செய்துவிட முடியும். தொழில் செய்யப் போகும் நபர், தன்னைத் தயார் செய்து கொள்வதில்தான் முதலில் கவனம் செலுத்த வேண்டும். ஓர் இடத்தில் வேலை பார்ப்பதும், பிசினஸ் செய்வதும் முற்றிலும் வேறானது. அதேபோல், தொழில் தொடங்குவதற்கு படிப்பு, வயது, மொழி எல்லாம்கூட பெரிய விஷயமே அல்ல. தொழில் செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற வெறி இருந்தால், தானாகவே அதற்கான அறிவை நம்மால் எளிதில் பெற்றுவிட முடியும். நாம் தயாரிக்கிற பொருளையோ அல்லது தரும் சர்வீஸையோ மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கிற சந்தேகம் நமக்கு வரவே கூடாது. மக்களுக்குத் தேவையான பொருளை அல்லது சர்வீஸை அவர்கள் விரும்பும் விதத்தில் தந்தால், ஏற்றுக்கொள்ளாமல் போக வாய்ப்பே இல்லை!

பெரிதாக ஆசைப்படுங்கள்!

பிசினஸ் தொடங்க முடிவு செய்தபின், என்ன பிசினஸ் செய்யப் போகிறோம், எப்படி செய்யப் போகிறோம் என்பதைத் திட்டமிட வேண்டும். திட்டமிட்டபடி அதனை நடைமுறைப்படுத்த என்னவெல்லாம் வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். பிசினஸ் என்பது பெட்டிக் கடை தொடங்கி நடத்துகிற மாதிரிதான் என்று நினைத்தால், தொழில் செய்யவே நினைக்காதீர்கள். பிசினஸ் என்பது பெரிய விஷயம். அதனை முறைப்படி செய்தாக வேண்டும்.

பிசினஸுக்குப் பெயர் வைப்பதிலிருந்து, அரசிடம் பதிவு செய்வது, முறையாக வரி கட்டி, படிப்படியான வளர்ச்சியை அடைந்து முன்னணி தொழிலதிபராக உயர்வதுதான் பிசினஸ். மற்றவையெல்லாம் பிசினஸ் அல்ல என்பதை முதலில் உணருங்கள். இப்படிப்பட்ட ஒரு வளர்ச்சியை விரும்பும் அணுகுமுறைதான் புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் பிசினஸ்மேன்களிடம் இருக்க வேண்டும்.

பிசினஸ் செய்ய மனதளவில் தயாராகிவிட்டீர்கள் என்றால், வெற்றிகரமாக நீங்கள் முதல்படியைத் தாண்டிவிட்டீர்கள் என்று அர்த்தம். அடுத்து...?

அதைப் பற்றி அடுத்த இதழில் சொல்கிறேன்.
(ஜெயிக்கலாம்)
----------------------------------------------------------------------------------------------------------------------------
கட்டுரையாளரைப் பற்றி...

கே.எஸ் கமாலுதீன். ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர். பிசினஸ் செய்வதிலும், சர்வதேச அளவில் ஏற்றுமதி தொழில் செய்வதிலும் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவமுள்ளவர். நட்சத்திர ஏற்றுமதியாளர் என்று அரசால் அங்கீகரிக்கப்பட்டவர். இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு, சிறு, குறு தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழகம் போன்றவற்றில் தொழில்முனைவோர்களுக்குப் பயிற்சியும் கொடுத்து வருகிறார். கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்கு பிசினஸ் குறித்த விழிப்புணர்வுக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.

Related

நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் 5559166724743075136

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item