தாய்ப்பாலைப் பெருக்கும் வெந்தயக் கீரை!
தாய்ப்பாலைப் பெருக்கும் வெந்தயக் கீரை! வெ ந்தயக் கீரைக்கு வெந்தியம், மேதி, வெந்தை என வேறு பெயர...

https://pettagum.blogspot.com/2015/08/blog-post_47.html
தாய்ப்பாலைப் பெருக்கும் வெந்தயக் கீரை!
வெந்தயக்
கீரைக்கு வெந்தியம், மேதி, வெந்தை என வேறு பெயர்களும் உள்ளன. கார்ப்புச்
சுவைகொண்ட வெந்தயக் கீரை குளிர்ச்சியானது. சிறுநீர்ப் பெருக்கியாகச்
செயல்படுவது.
வெந்தயக்
கீரையின் தண்டை அரைத்து, மோருடன் குடித்துவர, வயிறு தொடர்பானப் பிரச்னைகள்
தீரும். வெந்தயம், உயர் ரத்த அழுத்தம், நீர் வேட்கை, சீதக்கழிச்சல் போன்ற
பிரச்னைகளைப் போக்கும்.
இரும்புச்சத்து
அதிகம் இருப்பதால், ரத்தச்சோகை வராமல் தடுக்கும். வயிற்றுப்புண்
உள்ளவர்கள் அரை டீஸ்பூன் வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அருந்த, விரைவில்
குணமாகும். பார்வைத்திறனை மேம்படுத்தும். உடலுக்கு நல்ல ஊட்டத்தைத் தரும்.
வயிற்றுப்போக்கு, செரிமானப் பிரச்னைகள் மற்றும் இரைப்பைப் பிரச்னைகளுக்கு வெந்தயக் கீரை அருமருந்து.
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், வயதாவதால் ஏற்படும் தோற்றத்தின் முதிர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.
கோழி முட்டை, தேங்காய்ப் பால், நெய் இவற்றுடன் வெந்தயக் கீரை சேர்த்துச் சாப்பிட்டால், இடுப்பு வலி நீங்கும்.
வெந்தயக் கீரையை வேகவைத்து, வெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், பித்தத்தினால் வரும் மயக்கம் சரியாகும்.
வெந்தயக் கீரையை அரைத்து, வெல்லம் சேர்த்து லேகியமாகச் செய்து சாப்பிட, கல்லீரல், மண்ணீரல் வீக்கங்கள் குணமாகும்.
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் உணவில் வெந்தயக் கீரையை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கும்.
மாதவிடாய்
வலி, பிரச்னைகளைப் போக்கும். 45-வயதுக்கு மேற்பட்டப் பெண்கள் மாதவிடாய்
நின்ற பிறகு, அவர்களின் உடலில் ஏற்படும் சோர்வு மற்றும் உடல் வலி போன்ற
பிரச்னைகளைத் தீர்க்கும். மனதுக்கும் உடலுக்கும் சக்தியைத் தரும்.
வெந்தயக்
கீரையின் இலைகள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இதனால், ரத்தத்தில்
சர்க்கரை சேரும் விகிதம் (கிளைசெமிக் குறியீடு) குறைகிறது. கீரையில் உள்ள
அமினோ அமிலம் உடலில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது.
முகத்தில்
கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் சுருக்கங்கள் இருந்தால், வெந்தயக்
கீரைச் சாற்றைத் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவிவர,
முகம் பொலிவுபெறும். பருக்கள் நீங்கும்.
ஃப்ரெஷ்ஷான
வெந்தயக் கீரையின் இலைகளை அரைத்து, பேஸ்ட் செய்து, உச்சந்தலையில் தடவி,
அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவிவர, கூந்தல் நன்கு வளரும்.
முடி உதிரும் பிரச்னை குறையும்.
வெந்தயக் கீரை கடைசல்!
ஒரு பிடி பயத்தம் பருப்பை வேகவைக்க வேண்டும். வெந்தயக் கீரையை நன்றாக அலசி, பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி, வெந்தயக் கீரையுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு, தனியாக வேக வைக்க வேண்டும். வெந்தயக்கீரை நன்கு வெந்ததும், வேகவைத்து கடைந்த பருப்பைச் சேர்க்க வேண்டும். கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் தாளித்து, கீரை கடைசலில் சேர்க்க வேண்டும். இந்த வெந்தயக்கீரை கடைசலை சாதத்தில் பிசைந்துச் சாப்பிடலாம். சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
ஒரு பிடி பயத்தம் பருப்பை வேகவைக்க வேண்டும். வெந்தயக் கீரையை நன்றாக அலசி, பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி, வெந்தயக் கீரையுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு, தனியாக வேக வைக்க வேண்டும். வெந்தயக்கீரை நன்கு வெந்ததும், வேகவைத்து கடைந்த பருப்பைச் சேர்க்க வேண்டும். கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் தாளித்து, கீரை கடைசலில் சேர்க்க வேண்டும். இந்த வெந்தயக்கீரை கடைசலை சாதத்தில் பிசைந்துச் சாப்பிடலாம். சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
Post a Comment