பசும்பாலுக்கு மாற்றாக, சில வகைப் பால்கள் அவற்றை எப்படித் தயாரிப்பது என்பதே ஊட்டம் தரும் வீகன் டயட்!!
ஊட்டம் தரும் வீகன் டயட் ப சு, தன் கன்றுக்குக் கொடுக்க தன் ரத்தத்தில் இருந்து உற்பத்திசெய்யும...

பலன்கள்: இதயத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அதிகம் கிடைக்கும். புரதச்சத்து, வைட்டமின் ஏ, பி6, இ ஆகியவையும் கிடைக்கும். பாதாம் தோலில் இருக்கும் ஃபிளவனாய்ட், இதயத்துக்குப் பலம் சேர்க்கும். பாதாம் பாலை நான்கு மணி நேரம் வரை ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே பயன்படுத்த முடியும்.
பலன்கள்: புரதச்சத்து அதிகம் உள்ளது. ட்ரிப்டோபான் (Tryptophan), வைட்டமின் பி3, பி6, ஃபோலேட், மாங்கனீஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்தது. வேர்க்கடலைப்பாலை, பசும்பால் போலவே காய்ச்சியும் பயன்படுத்தலாம்.
பலன்கள்: மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், வைட்டமின் பி1, பி3, பி5, பி6 , வைட்டமின் சி, இ, கே இருக்கின்றன. இதில், நல்ல கொழுப்பு அதிகம் கிடைக்கும். தேங்காய்ப் பாலை, தயாரித்த நான்கு மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.
பலன்கள்: சோயா பாலை சூடுபடுத்தி மட்டுமே அருந்த வேண்டும். டீ, காபிக்கும் சோயா பாலைப் பயன்படுத்தலாம். புரதச்சத்து அதிகம் கிடைக்கும். பொட்டாசியம் நிறைந்தது. ஐசோஃப்ளேவோன்ஸ் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கிறது. எலும்புத் தேய்மானத்தைத் தடுக்கும்.
பலன்கள்: புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து அதிக அளவு உள்ளன. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதில் இருக்கிறது. மேலும் மக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், தாமிரம், துத்தநாகம், செலினியம் ஆகிய தாதுஉப்புக்களும் அதிக அளவு உள்ளன. அனைவருக்கும் ஏற்றது. கறுப்பு எள் பயன்படுத்துவது மிகுந்த பலன் தரும்.
சோயா பால் மற்றும் வேர்கடலைப் பாலில் இருந்து தயிர் தயாரிக்க முடியும். கைகுத்தல் அரிசி அல்லது பழுப்பு அரிசி சாதத்தில் தண்ணீர் ஊற்றிவைத்து, மறுநாள் நீராகாரம் தயாரித்துக்கொள்ள வேண்டும். இது உறை மோராகப் பயன்படும். சோயா அல்லது வேர்க்கடலைப் பாலை கொதிக்கவைத்து சிறிது ஆறியதும், இளஞ்சூடாக இருக்கும்போது, ஒரு கப் பாலுக்கு நான்கு டேபிள்ஸ்பூன் நீராகாரம் சேர்க்க வேண்டும். 8 - 12 மணி நேரத்துக்குப் பிறகு தயிர் ரெடி.
Post a Comment