'சாஃப்ட்'டான சப்பாத்தி... செய்வது எப்படி? சமையலில் ஏற்படும் பொதுவான சந்தேகங்களுக்கு விடை!

'சாஃப்ட்'டான சப்பாத்தி... செய்வது எப்படி? தா ங்கள் செய்த சமையலை ருசிக்கும் அனுபவத்தைவிட, குடும்பத்தினர் போடும...

'சாஃப்ட்'டான சப்பாத்தி... செய்வது எப்படி?
தாங்கள் செய்த சமையலை ருசிக்கும் அனுபவத்தைவிட, குடும்பத்தினர் போடும் `சபாஷ்'தான் பெண்களுக்கு முழுநிறைவை அளிக்கும். எவ்வளவுதான் அக்கறையுடன் செய்தாலும், சிலசமயம் சமையல் சொதப்பலாக  முடிந்துவிடுவதுண்டு. `அடடா... காரம் அதிகமாயிடுச்சே?' `குழம்புக்குத் தொட்டுக்க வேற ஏதாவது செஞ்சிருக்கலாமோ' என்றெல்லாம் யோசிப்பது இல்லம்தோறும் வாடிக்கைதான். உற்சாகத்துடன் சமைக்க ஆரம்பிப்பவர்கள், மனதிருப்தியுடன் அதை இறக்கி வைக்க உதவும் வகையில், சமையலில் ஏற்படும் பொதுவான சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார், பிரபல சமையல்கலை நிபுணர் ரேவதி சண்முகம்...

‘‘இட்லிக்கு மாவு அரைக்கும்போது உளுந்தை எவ்வளவு நேரம் அரைக்கலாம்?’’
‘‘அதிகபட்சம் 20 - 25 நிமிடங்கள் போதும். அதற்கு மேல் தேவையில்லை. உளுந்து அரைக்கும்போது அது வெளுத்து நன்றாக பஞ்சு போல வரும் பதத்தில் எடுத்துவிடலாம். பிறகு, அரிசி மாவை அரைத்து, இரண்டையும் அடித்துக் கரைத்து சேர்த்தால் இட்லி, தோசை ருசியாக இருக்கும். இட்லி, தோசைக்கும் வேறு எதுவும் சேர்க்கத் தேவையில்லை. மாவு ஆட்டும் பதம் மட்டுமே போதுமானது.’’

‘‘பயறு வகைகளில் வண்டு விழாமல் இருக்க..?’’
‘‘வாங்கியவுடன் வறுத்துவிட்டு ஸ்டோர் செய்ய வேண்டும். வண்டு விழாததுடன், சமைக்கும்போது விரைவிலேயே வெந்து விடும், கூடுதல் சுவை யாக இருக்கும்.’’

‘‘சமையலில் காய்களைப் பொறுத்தவரை செய்யும் தவறுகள் என்ன?’’
‘‘பொருந்தாத காய்களை வைத்து, பொருந்தாத சமையல் செய்யக் கூடாது. சாம்பாருக்கு, பொரியலுக்கு, வறுவலுக்கு என்றுள்ள காய்களையே அந்தந்த சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். சாம்பாருக்கு தொட்டுக்கொள்ள காரக்கறி, மோர்க்குழம்புக்கு உசிலி வகைகள், அவியல், காரக்குழம்புக்கு... பொரியல், பருப்பு சேர்த்த கூட்டு என்ற காம்பினேஷனையும் கடைப்பிடிக்க வேண்டும்.’’

‘‘காய்களை நறுக்குவதில் ஏதேனும் வரையறை உண்டா?’’
‘‘ஆம்... அவியலுக்கு விரல் நீளத்தில் கொஞ்சம் மெல்லிசாகவும் தடிமனாகவும், பொரியலுக்கு நீளமாகவும் மெல்லிசாகவும், கூட்டுக்கு சிறிது சிறிதாகவும், சாம்பாருக்கு பட்டை பட்டையாகவும் நறுக்கவும். ஒவ்வொரு காய்க்கும் அது வேகும் நேரத்தைக் கணக்கிட்டு அளவாக எண்ணெய், தண்ணீர் ஊற்ற வேண்டும். அதிகமாக அல்லது குறைவாக ஊற்றினால், காயின் சத்து குறைவதுடன் சுவையும் மாறிவிடும்.’’

‘‘சமையலில் உப்பு, காரம் கூடிவிட்டால் என்ன செய்வது?’’
‘‘குழம்பில் காரம் கூடிவிட்டால், தேங்காய் அரைத்து ஊற்றலாம். சாம்பார் எனில் வேகவைத்த பருப்பை கடைந்து ஊற்றலாம் அல்லது புளி சேர்க்கலாம். இதேபோல் குழம்பில் உப்பு கூடிவிட்டால், உருளைக்கிழங்கை தோல் சீவி நறுக்கி சேர்த்தால் உப்பின் தன்மையை குறைத்துவிடும். பொரியல் என்றால் துருவிய தேங்காய் சேர்த்துப் புரட்டலாம்.’’

‘‘சூப் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயம்..?’’
‘‘சூப்பில் பலருக்கும் எவ்வளவு கார்ன்ஃப்ளார் சேர்ப்பது என்பது தெரியவில்லை. ஒரு கப் சூப் எனில் ஒரு டீஸ்பூன் கான்ஃப்ளார் போதுமானது. பதிலாக, ஓட்ஸையும் வறுத்து அரைத்து சூப்பில் சேர்க்கலாம்.’’

‘‘தாளிக்கும்போது செய்யும் தவறுகள் என்ன?’’
‘‘கடுகு, உளுந்தம்பருப்பை ஒரே டப்பாவில் கலந்து போட்டு வைத்து தாளித்தால், கடுகு பொரிவதற்கு முன்னதாக உளுந்து சிவந்துவிடும். கடுகு பொரியக் காத்திருக்கும்போது உளுந்து கருகிவிடும். உணவின் சுவையே மாறிவிடும். கடுகு பொரிந்த பின், உளுந்தைப் பொரிக்கவும்.’’

‘‘சத்துக்கள் வீணாகாமல் கீரையை சமைப்பது எப்படி?’’
‘‘கீரையை நன்றாக அலசி, சிறிது சிறிதாக நறுக்கி குக்கரில் போட்டு, சிறிதளவு வெங்காயம், தக்காளி சேர்த்து வேகவைத்துக் கொண்டால், கீரையின் நிறம் மாறாமலும், பச்சை வாசனை இல்லாமலும் இருக்கும். பின் என்ன சேர்க்க வேண்டுமோ சேர்த்துச் சமைக்கலாம். பச்சைக் காய்கறிகள் அனைத்துக்கும்கூட இது பொருந்தும். மேலும், கீரைக்கட்டின் வேர்ப்பகுதியை நறுக்கி, ஒரு பேப்பரில் சுற்றி ஃபிரிட்ஜில் வைத்தால் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.’’

‘‘இட்லி மாவு புளித்துவிட்டால் என்ன செய்யலாம்?’’
"பொதுவாக, மேலாக இருக்கும் மாவை இட்லி ஊற்றுவார்கள். அடியில் அரிசி மாவு தங்கும் என்பதால் இட்லி கடினமாக இருக்கும் என, கீழ் உள்ள மாவை தோசை ஊற்றுவார்கள். அப்படி கடைசியில் உள்ள மாவு புளிக்கும்போது அதனுடன் சிறிதளவு ரவை /அரிசி மாவு / கோதுமை மாவு சேர்த்து... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டி, தோசைக்கல்லில் கனமான தோசையாக ஊற்றி மிதமான தீயில் இரண்டு புறமும் வேகவைத்து எடுத்தால், அருமையாக இருக்கும்; மாவின் புளிப்பையும் எடுத்துவிடும்.’’

‘‘சப்பாத்தி நீண்ட நேரம் மிருதுவாக இருக்க டிப்ஸ்?’’
‘‘மாவு பிசையும்போது தளரப் பிசைந்துகொண்டாலே சப்பாத்தி நீண்ட நேரம் மிருதுவாக இருக்கும். சிலர் ஆர்வத்தில் ஏதேதோ சேர்த்து பிசைகிறார்கள். நான் கூடுதலாக எதுவும் சேர்ப்பதில்லை. அவசியமுமில்லை. அதேபோல பூரிக்கு மாவை இறுகப் பிசைந்துகொண்டால் அதிகம் எண்ணெய் உறிஞ்சாது. பூரிக்கு மாவுடன் சிறிது சர்க்கரையும் சேர்த்துப் பிசைய, ருசியாக இருக்கும்.’’

Related

காஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள்--வீட்டுக்குறிப்புக்கள்,

சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைக்க வேண்டும். ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ள அடுப்புச் சாதனங்களையும், இரப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அடுப்பை அணைக்கும்போது ...

குக்கர் பராமரிப்பு---வீட்டுக்குறிப்புக்கள்

1. குக்கரின் கொள்ளளவில் 3ல் 2 பங்கு அதாவது குக்கரின் முக்கால் பகுதிக்கு மட்டும் அரிசி மற்றும் காய்கறி வகைகளைச் சமைக்க வேண்டும். 2. குக்கரில் உள் தட்டு வைத்து பாத்திரம் வைத்து சமைத்ததினால் அடியில் உப்...

உப்பு அதிகமாகிவிட்டதா?-- வீட்டுக்குறிப்புக்கள்,

உப்பு அதிகமாகிவிட்டதா? சாம்பார் உள்ளிட்ட குழம்பு வகைகளில் உப்பு அல்லது காரம் அதிகமாகிவிட்டதா? கவலை வ...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Apr 2, 2025 7:32:43 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,136,494

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item