கோடையிலும் பொங்கும் கிணறு! மேல்மட்ட தண்ணீர் அறுவடை! விவசாயக்குறிப்புக்கள்!!

கோடையிலும் பொங்கும் கிணறு! மேல்மட்ட தண்ணீர் அறுவடை! கோ டை வெயில் வாட்டியெடுக்கத் தொடங்கிவிட்டது. ஆங்காங்கே தண்ணீர் பஞ்சம் தலைவி...

கோடையிலும் பொங்கும் கிணறு! மேல்மட்ட தண்ணீர் அறுவடை!
கோடை வெயில் வாட்டியெடுக்கத் தொடங்கிவிட்டது. ஆங்காங்கே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆழ்துளைக் கிணறுகளில் தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கிடைப்பதே பெரும்பாடு. அப்படியென்றால், திறந்தவெளிக் கிணறுகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. இப்படிப்பட்ட நிலையிலும், தஞ்சாவூர் மாவட்டம், மண்டலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமனின் திறந்தவெளிக் கிணற்றில் தண்ணீர் வற்றாமல் இருப்பதோடு... இறைக்க இறைக்க ஊறிக் கொண்டிருக்கிறது. ஜெயராமன் மேற்கொண்ட சின்ன தொழில்நுட்பம்தான், இதற்குக் காரணம்!
பொதுவாகத் திறந்தவெளிக் கிணறுகளில் தண்ணீர் வற்றினால், அப்படியே போட்டுவிட்டு... ஆழ்துளைக்கிணறு அமைத்து நிலத்தடி நீரை முழுமையாக உறிஞ்சுவதுதான் வழக்கம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் மேலும் அதல பாதாளத்துக்குச் செல்வதோடு, தண்ணீரில் உப்புத் தன்மை அதிகரித்து, பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், ஜெயராமன் நிலத்தடி நீரில் கை வைக்காமல், நிலத்தின் மேல் மட்டத்தண்ணீரை மட்டுமே அறுவடை செய்து, ஆண்டு முழுவதும் செழிப்பாக விவசாயம் செய்து வருகிறார்.

இந்தத் தொழில்நுட்பம் பற்றி பேச ஆரம்பித்த ஜெயராமன், “விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நான், அரசு மேல்நிலைப் பள்ளியில கணிப்பொறி ஆசிரியரா வேலை பார்த்துக்கிட்டே, விவசாயமும் செய்றேன். இது கடைமடைப் பகுதி. ஆத்துத் தண்ணீரை நம்பி விவசாயம் செய்ய முடியாது. திறந்தவெளிக் கிணறுகள் அமைச்சி, அதுல இருந்து தண்ணீர் இறைச்சிதான் எங்க பகுதியில விவசாயம் செஞ்சோம். ஒரு கட்டத்துல கிணறுகள்ல தண்ணீர் குறைஞ்சி போகவும்... கிணறுகளை அப்படியே விட்டுட்டு, போர்வெல் அமைக்க ஆரம்பிச்சாங்க. ஆரம்பத்துல 70, 80 அடியில தண்ணீர் கிடைச்சுது. அதுக்கு பிறகு 300, 350 அடி ஆழத்துக்கு தண்ணீர் போயிடுச்சு. எனக்கு, ஏற்கெனவே இருக்குற கிணறை சும்மா போட்டுட்டு, பல லட்ச ரூபாய் செலவு செஞ்சி போர்வெல் அமைச்சி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்குறதுல விருப்பம் இல்லை. அப்படியே அமைச்சாலும் எதிர்காலத்துல சுத்தமான தண்ணீருக்கு உத்தரவாதம் இல்லை. இந்தக் கிணத்துக்குள்ளேயே வேறு என்ன மாற்றம் செய்யலாம்னு தீவிரமான தேடுதல்யே இருந்தேன்.
ஒரு கட்டத்துல வரகூர் கிராமத்து விவசாயி ஒருத்தர், தன் கிணத்தோட பக்கவாட்டு பகுதிகள்ல நீளமான துளைகள் அமைச்சிருந்ததைக் கேள்விப்பட்டேன். அதை பார்த்துட்டுப் பத்து வருஷத்துக்கு முன்ன நானும் என்னோட கிணத்துல அதேபோல துளைகள் அமைச்சேன். பதினஞ்சாயிரம் ரூபாய்தான் செலவாச்சு. கிணத்தோட மொத்த சுற்றளவு 30 அடி. ஏழரை அடி இடைவெளியில 4 துளைகள் அமைச்சிருக்கோம். 4 இஞ்ச் விட்டத்துல 100 அடி தூரத்துக்கு இந்த துளைகளை அமைச்சிருக்கோம். கிணத்துல இருந்து 20 அடி தூரம் வரைக்கும் இரும்புக் குழாய் இருக்கு. கிணத்தோட ஆழம் 25 அடி. இதுல 15 அடி ஆழத்துல பக்கவாட்டு பகுதிகள்ல இந்த துளைகள் இருக்கு. இந்த துளைகள்ல இருந்து நிரந்தரமா எந்நேரமும் தண்ணீர் ஊத்திக்கிட்டே இருக்கு. இதனால் கடும்கோடையிலும் கூட, தண்ணீர் நிறைஞ்சே இருக்கு கிணறு.
ஏழரை ஹெச்.பி. நீர் மூழ்கி மோட்டார் மூலம் தினமும் காலையில 4 மணிநேரமும் சாயந்தரம் 4 மணிநேரமும் தண்ணீர் இறைக்கிறோம். ஆனாலும், உடனே தண்ணீர் நிறைஞ்சிடுது. பத்து வருசமா, இந்த தண்ணீரை வெச்சுதான் 5 ஏக்கர்ல முப்போகமும் சாகுபடி செய்றோம். இதுல மூணு ஏக்கர்ல முப்போகமும் நெல்லு. மீதியுள்ள 2 ஏக்கர்ல ஒரு போகம் நெல், இருபோகம் உளுந்து, பயறு, கடலைனு செழிப்பா சாகுபடி செய்றோம். தவிர, பக்கத்து வயல்காரருக்கும் மூணு ஏக்கருக்கு தண்ணீர் கொடுக்குறோம்.

அவரும் இதை வெச்சு மூணு போகம் சாகுபடி செய்றார்” என்ற ஜெயராமன் நிறைவாக, “வயலுக்கு பாய்ச்சுற தண்ணீர்ல பத்து சதவீதத்தை மட்டும்தான் பயிர்கள் எடுத்துக்குது. மீதி தண்ணீர், இடுக்குகள் வழியா கீழ இறங்கி, இந்தத் துளைகள் மூலமா, கிணத்துக்கே வந்துடுது. மழைநீரும் நிலத்துக்குள்ள இறங்கி, கிணத்துக்கு வந்துடுது. மூணு போகமும் சாகுபடி செய்றதுனால, மண்ணுல எப்போதும் ஈரப்பதம் இருந்துக்கிட்டே இருக்கு. பயனில்லாம கிடக்குற கிணறுகள்ல, இது மாதிரி துளைகள் அமைச்சா... தண்ணீர் பிரச்னைக்கு சுலபமா தீர்வு கிடைச்சுடும்’’ என்றார்.
தொடர்புக்கு, ஜெயராமன், செல்போன்: 96555-14609.
‘இது மிகச் சிறந்த முறை!’
திறந்தவெளிக் கிணறுகளின் உள்ளே பக்கவாட்டுப் பகுதிகளில் நீளமான துளைகள் அமைப்பது குறித்து திண்டுக்கல் மாவட்டம் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை வேளாண் பொறியாளர் பிரிட்டோவிடம் கருத்து கேட்டோம்.

‘‘இது மிகச்சிறந்த முறையாகும். கிணறுகளின் உள்ளே வெள்ளைநிற படிவுப்பாறைகள் உள்ள பகுதிகளைத்  தேர்ந்தெடுத்து துளைகள் அமைக்க வேண்டும். இதுபோன்ற பகுதிகளில் உள்ள துளைகள் அவ்வளவு எளிதில் சிதையாது.  நீர்ப்பிடிப்பு, நீர்க்கசிவு, ர்ப்போக்குவரத்து அனைத்துக்கும் இதுதான் ஏற்றது. நீளமான துளையிடுவதற்கும் எளிதாக இருக்கும்.
 எதிர்காலத்தில் நெகிழ்வுத் தன்மையால் இந்தத் துளைகளில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்க, துளையின் ஒட்டுமொத்த நீளத்துக்குமே பிளாஸ்டிக் குழாய் சொருகுவது நல்லது. பிளாஸ்டிக் குழாயில் சுமார் 10 சென்டிமீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே துளைகள் இருக்க வேண்டும்’’ என்றார்.
தொடர்புக்கு, செல்போன்: 99444-50552.

Related

விவசாயக்குறிப்புக்கள் 7061727533797546140

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Saturday - Apr 5, 2025 7:20:10 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,137,362

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item