முஸ்லிம்கள் என்றால்???. இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!!
முஸ்லிம்கள் என்றால்???. சில ஆண்டுகளுக்கு முன்னர் , கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம் தினமும் பஸ்ஸில் தான் செல்வேன். பஸ்பாஸ் இர...

முஸ்லிம்கள் என்றால்???.

மாதாமாதம் அதை புதுப்பிக்க டிப்போவுக்கு செல்வதுண்டு. அங்கு அலுவலகத்தில் கிளார்க்காக வேலைப் பார்க்கும் பெண் எங்க ஊரை சேர்ந்தவர்; நன்கு பழக்கமானவர். அந்த அக்கா பெயர் ஞாபகமில்லை. இதனால் அங்குள்ள மேலாளார் என்னிடம் நன்கு பழகிவிட்டார்.
நான் திடுக்கிட்டு, ”என்ன சார்! என் தலையில் கொம்பு முளைத்து அகோரமாவா இருக்கேன்” என்றேன் சிரித்துக் கொண்டே. அதற்கு அவர், ”அதுல்லப்பா, முஸ்லிம்கள் என்றால் தாடிவைத்துக் கொண்டு தலையில் தொப்பி வைத்துக் கொண்டு தீவிரவாதி போல இருப்பாங்களாம். அவங்க எங்க குண்டு வைப்பாங்கன்னே தெரியாது. அதமாதிரி நீயும் எதாவது வச்சிருக்கியா” என்றார் சிரித்தபடி.
நானும் சிரித்துக்கொண்டே, ”யார் சார் சொன்னா உங்களுக்கு முஸ்லிம் என்றால் தீவிரவாதின்னு??..” என்றேன். அவர் உடனே, ”அதான் டிவியில சினிமாவுல காட்டுறானேடே. முஸ்லிம் தீவிரவாதிகள் நாட்டுக்குள்ள ஊடுவிருயிருக்காங்க.. ஆங்காங்கே குண்டு வைக்கிறாங்கன்னு படத்துல காட்டுறாங்களே., அதற்கு என்னப்பா சொல்றே” என்றார்.
நாட்டுல இருக்கிற முஸ்லிம்கள் இருபது சதவீதம் பேரும் கையில் துப்பாக்கியும் குண்டும் வைத்துக் கொண்டு இருந்தால் நீங்களும் நானும் நிம்மதியா வாழ முடியுமா.. அதுபோக இந்த நாட்டில் முஸ்லிம்களும் மற்ற மதத்தினரும் அண்ணன்-தம்பி, மாமன்-மச்சான் என்று ஒரு குடும்பம் போல பழகிக்கிட்டு இருக்கோம். இது இன்னக்கி நேற்றல்ல.. காலம் காலமா இப்படித்தானே வாழ்ந்துக்கிட்டு இருக்கிறோம்.
சினிமா என்பது ஒரு நிழல். அதற்கும் நிஜ வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை”” என்றேன். மேலும் நான், ””சார்! எங்கோ ஒருவன் மதவெறி பிடித்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு ஒட்டு மொத்தமாக எல்லோரையும் குற்றம் சொல்றீங்களே இது சரியா??..
தீவிரவாத செயல்கள்ல ஈடுபடுகிறவங்களுக்கு ஏன் மத அடையாளப்படுத்துறீங்க??..
அவன் இந்துவோ முஸ்லிமோ கிறிஸ்டியனோ.. தண்டிக்கப்பட வேண்டியவன். மற்ற மதத்தினர் செய்யும் இதுபோன்ற தீவிரவாத செயலுக்கு மத அடையாளம் பொருத்தாத மீடியாக்கள் அவன் முஸ்லிமாக இருந்தால் உடனே எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதி என்று முத்திரை குத்துகின்றனர். இது எந்த விதத்தில் நியாயம் சொல்லுங்க சார்??”” என்றேன்.
””தம்பி அருமையா சொன்னேப்பா.. நல்ல தெளிவான சிந்தனை. நீ பிற்காலத்தில் நன்றாக வருவாய்”” என வாழ்த்தியனுப்பினார். பின்னர் எங்க ஊர் அக்காவும், ”நல்லா சொன்னேடா தம்பி” என்றார்.
””எல்லாம் இறைவனின் சித்தம். சரி சார் எனக்கு கல்லூரிக்கு நேரமாகிவிட்டது நான் வருகிறேன்”” என்றபடி இருவரிடமும் விடைப்பெற்று கிளம்பிய எனக்கு கல்லூரியில் நுழைந்ததும் ஆசிரியரிடம், ”ஏண்டா இவ்வளவு லேட்டு!” என்று திட்டு விழுந்தது.
Thanks to:- http://ensaaral.blogspot.in/2013/01/blog-post.html
Post a Comment