பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ! ஆசனம்!!
பிரணாயாமம் என்பது யோகாவின் ஒரு பகுதியாகும். இது பெரும்பாலும் மூச்சுப்பயிற்சி சம்பந்தப்பட்டவை. பிரணாயாமம் என்பது 'பிராண...

பிரணாயாமம் என்பது ஒரு வெறும் மூச்சுப்பயிற்சி மட்டுமே என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பது தவறாகும். இயல்பான சுவாசத்திலிருந்து அது வேறுபடுகிறது என்பதோடு வேறுபடுத்தப்படுகிறது ஒழுங்குபடுத்தப்படுகிறது.
ஓடுதல்,குதித்தல், தாண்டுதல், நீந்துதல், பளு தூக்குதல், அதிக நிறை உள்ளவற்றை நகர்த்துதல் நீண்ட நேரம் களைப்படையாமல் பணிபுரிதல் போன்றவற்றை எந்தவிதப் பயிற்சியும் இல்லாத சாதாரண ஒரு மனிதனை விட யோகப்பயிற்சி பெற்ற ஒருவரின் மேற்கண்டசெயல்பாடுகளை மிகச்சுலபமாகவும் விரைவாகவும் அதிசயத்தக்க வகையில் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.
இயல்பான மூச்சை பிரணாயாமத்தின் மூலம் வகைப்படுத்தப்படும்போது மனிதனின் உடல் ஆற்றல் மற்றும் உள்ள ஆற்றல் பல மடங்கு பெருகுகிறது. எனவே பிரணாயாமம் என்பது ஆற்றல்களைப் பெருக்கும் ஒரு வித்தையும் ஆகும்.
இந்த வித்தையினை மூச்சுக்கலை , சரகலை, வாசிக்கலை , என பல பெயர்களை கொண்டதாகும். பிரணாயாமம் என்பதற்கு அடக்குதல் என்பது ஒரு பொதுப்பெயர்,பொதுச்சொல் ஆகும். மூச்சினால் பிராணன் இயக்கப்படுகிறது. பிராணனை அடக்கும்போது மனம் அடங்குகிறது.
அதனால் வாழ்வு சிறக்கிறது. மனதை , புலன்களைக் கட்டுப்படுத்த பிரணாயாமம் முக்கியமாகிறது. பசி, தாகம், மூச்சு, உடல் இயக்கம் இந்த நான்கும் பிராணனால் நடத்தபடுபவையே. பிராணன் குறையும் போது இந்த நான்கு செயல்களாலும் உடல் துன்பம், உள்ளத்துன்பம், ஏற்படுகிறது. உணவில், நீரில், காற்றில், பிராணன் உலவுகிறது.
மூச்சு உள் இழுத்தல், உள்நிறுத்துதல், வெளி விடுதல், இந்த மூன்று வகையிலும் உள் நிறுத்துதல் என்பது பிரணாயாம நெறிகளில் தலைமைச் செயல் என கருதப்படுகிறது.
பலன்கள்-
சகிப்புத்தன்மை (பொறுமை) , சமாளித்தல், சுற்றுப்புற துன்பங்களை சகித்தல், உடல் வேதனை (வலி) தாங்குதல் , வாழ்க்கைப்போரட்டங்களை தாங்கி நிற்றல். கவலை, கலக்கம், இவைகள் அனைத்திலும் பாதிப்பின்றி வெற்றியடைய மனபலம் பெற, மனமடங்க, பிராணனை அடக்குவதன் மூலம் இப்பலன்கள் கிடைக்கிறது.
2 comments
எளிய முறையில் விளக்கம் கொடுத்துள்ளீா்கள் நன்றாக உள்ளது
இருப்பினும் நம் மக்கள் பிரச்சனைகளை சந்திக்கும் போது தான் இந்த பயிற்சி செய்ய ஆா்வம் கொள்கிறார்கள்
அல்லது MBBS சொல்ல வேண்டும்
இது ஒரு இனிமையான பயிற்சி
இதனை தொடா்ச்சியாக செய்பவா்களுக்கு தான் இதன் அருமை புாியும் ............
Sreenivasan KrishanaMoorthy அவர்களுக்கு என்றும் அன்புடன் A.S. முஹம்மது அலி வணக்கம் கூறி வரவேற்கின்றேன். தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் பல!
Post a Comment