மாதவிடாய் காலங்களில் கடைபிடிக்க வேண்டியவை!---ஹெல்த் ஸ்பெஷல்,
முதலில் மனதில் தோன்றும் வெறுப்பை மாற்றிக் கொள்ளுங்கள். மாதவிடாய் நாட்களை கவனத்தில் கொண்டு, அந்தக் காலங்களில் வெளியூர் பயணம், மற்ற கடின வேலை...

அதிக உதிரப்போக்குள்ள காலத்தில், தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிப்பதை தவிர்க்க வேண்டும். பருத்தியினால் ஆன உடைகளை அணிய வேண்டும். ஓய்வு அவசியம். உதிரப்போக்கு காரணமாக சிலருக்கு களைப்பு ஏற்படும். அதனால், ஓய்வும், உறக்கமும் நல்லது. தலைவலி, எரிச்சல் இருந்தால் மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனைஇன்றி மருந்துகளோ, மாத்திரைகளோ உபயோகிக்கக் கூடாது. தேநீர், காபி போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும். குளிரூட்டப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது. கொதித்து ஆற வைத்த நீரை அருந்துவது நல்லது. வாசனை திரவியங்களை உபயோகிக்க வேண்டாம். மாதவிலக்கின் போது வயிற்றுவலி இருந்தால், பத்து கிராம் சீரகத்துடன், சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு காய்ச்சி, பெருங்காயத்தூள் சேர்த்து காலை, மாலை அருந்தினால் வயிற்றுவலி நீங்கும். இந்த காலங்களில் உணவில் அதிக அளவு பெருங்காயம் சேர்த்தால், அது நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாட்டை புத்துணர்வு
பெறச் செய்யும்.
— ஐடியா அம்புஜம்.
Post a Comment