லாபகரமான வெள்ளாடு வளர்ப்புக்கு ஆடுகளை தேர்வு செய்யும் முறை!
லாபகரமான வெள்ளாடு வளர்ப்புக்கு ஆடுகளை தேர்வு செய்யும் முறை கிடா ஆடுகளைத் தேர்ந்தெடுத்தல் கிடாக்கள் மந்தையில் பாதி என...
https://pettagum.blogspot.com/2017/07/blog-post_61.html
லாபகரமான வெள்ளாடு வளர்ப்புக்கு ஆடுகளை தேர்வு செய்யும் முறை
கிடா ஆடுகளைத் தேர்ந்தெடுத்தல்
கிடாக்கள் மந்தையில் பாதி என்பார்கள். சுமார் 30 முதல் 50 ஆடுகளுக்கு ஒரு
பொலி கிடா போதுமானது. பொலி கிடாவை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க
வேண்டியவை.
மற்றவர்கள் பண்ணையில் தேர்வு செய்யும்போது
- நல்ல ஆரோக்கியமானதாகவும், சுறுசுறுப்பாகவும், வயதிற்கு தகுந்த நல்ல வளர்ச்சியுள்ளதாகவும், நல்ல எடையுள்ளதாகவும் இருத்தல் வேண்டும்.
- கிடாக்கள் உயரமாகவும், உடல்நீளமாகவும், மார்பு அகன்றதாகவும், விரிந்த மார்பெலும்புகளைக் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும்.
- கிடாக்களின் பின்னங்கால்கள் நன்கு திடமாக இருத்தல் வேண்டும்.
- கால்கள் நேராக இருக்க வேண்டும்.
- கிடாக்கள் வீரியத்துடன் பொலிவு செய்யும் திறன் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.
- ஒரு விதைப்பையினுள் இரண்டு ஒரே அளவுள்ள விதைகள் இருக்க வேண்டும். விதைப்பையின் சுற்றளவு குறைந்த பட்சம் 25-35 செ.மீட்டராவது இருக்க வேண்டும்.
- ஒரு விதையுள்ள கிடாக்களை வாங்கக்கூடாது.
- இனத்திற்கான பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும்.
சொந்த பண்ணையில் தேர்வு செய்யும்போது
மேற்கண்ட குணங்களுடன்,
- 2-3 குட்டிகளை ஈனும் பெட்டையாட்டின் குட்டிகளிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்.
- நல்ல எடையுள்ள, ஆரோக்கியமான குட்டிகளை 6 மாதவயதில் தேர்வு செய்ய வேண்டும்.
- 3-4 சதவீத குட்டிகளை தேர்வு செய்ய வேண்டும்.
- சுமார் 9 முதல் 12 மாதங்களில் பருவமடைந்திருக்க வேண்டும்.
பெட்டை ஆடுகளைத் தேர்ந்தெடுத்தல்
மற்றவர்கள் பண்ணையில் தேர்வு செய்யும்போது
- தலை குறுகியதாகவும், கழுத்து மெலிந்தும், உடல் நீளமாகவும் இருக்க வேண்டும்.
- நன்கு வளர்ச்சியடைந்த, மிருதுவான மடி உடலுடன் நன்கு ஒட்டியிருக்க வேண்டும்.
- மிருதுவான மற்றும் பால் கறந்தவுடன் சுருங்கக்கூடிய பால் காம்புகளாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட காம்புகள் உள்ள ஆடுகளை வாங்கக்கூடாது.
- முதுகுப்புறமும், பின்பகுதியும் அகன்று விரிந்து இருக்கும் ஆடுகளை வாங்க வேண்டும்.
- நல்ல எடையுள்ள, ஆரோக்கியமான பெட்டை ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
சொந்த பண்ணையில் தேர்வு செய்யும்போது
மேற்கண்ட குணங்களுடன்,
- பெட்டை ஆடுகள் 6 முதல் 9 மாதங்களில் பருவமடைந்திருக்க வேண்டும்.
- ஒரு ஈற்றில் 2 ஈனும் ஆடுகளின் குட்டிகளிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
- நல்ல எடையுள்ள, ஆரோக்கியமான பெட்டை குட்டிகளை 3 மாத வயதில் தேர்வு செய்ய வேண்டும்
- 30-35 சதவீத குட்டிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
‘தாயைப்
போல பிள்ளை, நூலைப் போல சேலை’ என்ற பழமொழிக்கேற்ப நல்ல தரமான
ஆட்டுக்குட்டிகளைப் பெறுவதற்கு நல்ல பெட்டை ஆடுகளும், தரமான பொலிக்
கிடாக்களும் மிகவும் அவசியம். பொதுவாக பொலி கிடாக்கள் நல்ல குட்டிகளை
உருவாக்குவதில் 80-90 பங்கு வகிக்கின்றன. ஆகவே அதிக விலையில் நல்ல பொலி
கிடாக்களை வாங்க வேண்டும்.
வெள்ளாடுகளின் வயதை கண்டறியும் முறை
ஆடுகளின்
ஆயுட்காலம் 10-12 வருடங்கள் ஆகும். 5 -7 ஆண்டுகள் வரை பண்ணையில் லாபகரமாக
வளர்த்தலாம். ஆடு வளர்ப்போர் ஆடுகளின் பற்களைக் கொண்டு வயதை தீர்மானித்து
கீழ்க்கண்ட பயன்களை அடையலாம்.
· - ஆடுகளை வாங்கும்போது அதன சரியான வயதைக் கண்டறிந்து இடைத்தரகர்கள் மூலம் ஏற்படும் இழப்பைத் தவிர்க்கலாம்.
· - சரியான வயதில் ஆடுகளை விற்பனைக்கு அனுப்பலாம்.
· - வயதான மற்றும் உற்பத்தித் திறனற்ற ஆடுகளைக் கண்டறிந்து அவற்றை பண்ணையிலிருந்து நீக்கம் செய்யலாம்.
· - ஆடுகளைக் காப்பீடு செய்வதற்கு வயதை நிர்ணயிப்பது மிக அவசியமாகும்.
ஆடுகளில்
வெட்டும் பற்கள், முன் தாடைப் பற்கள் மற்றும் பின் தாடைப் பற்கள்
(அரைக்கும் பற்கள்) காணப்படுகிறது. ஆடுகளின் மேல் தாடையில் வெட்டும் பற்கள்
காணப்படுவதில்லை. அதற்கு பதிலாக ஈறு மட்டுமே காணப்படும். கீழ் தாடையில்
பக்கத்திற்கு 4 வீதம் 8 வெட்டும் பற்கள் காணப்படும். கீழ் தாடையின் உதடுகளை
விலக்குவதன் மூலம் இந்த பற்களைக் காணலாம். பொதுவாக வெள்ளாடுகளில் 20
தற்காலிகப் பற்களும், 32 நிரந்தரப் பற்களும் காணப்படும். மேல் தாடையிலும்,
கீழ் தாடையிலும் கீழ்க்கண்டவாறு பற்கள் காணப்படும்.
வெட்டும் பற்கள்
|
முன்தாடைப் பற்கள்
|
பின்தாடைப் பற்கள்
|
மொத்தம்
| |
தற்காலிகப் பற்கள்
|
0/8
|
6/6
|
0/0
|
6/14
|
நிரந்தரப் பற்கள்
|
0/8
|
6/6
|
6/6
|
12/20
|
ஆடுகளை வெளியில் இருந்து வாங்கும்போது அதன் பற்களின் அமைப்பு மற்றும் எண்ணிக்கையை வைத்துதான் வயதைக் கண்டறிய முடியும்.
தற்காலிகப் பற்கள் (அ) பால் பற்கள்
|
நிரந்தரப் பற்கள்
|
சிறியதாக, நீள் செங்குத்தாக இருக்கும்
|
முன் பகுதி அகன்றும், பின் பகுதி குறுகியும் காணப்படும். வயது அதிகரிக்கும்போது பற்கள் தேய்ந்து முன் பகுதி கூறாக மாறி விடும்.
|
பற்களுக்கு இடையில் இடைவெளி இன்றி காணப்படும்.
|
ஒரு பல்லிற்கும் அடுத்த பல்லிற்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருக்கும்.
|
வயது
|
பற்களின் அமைப்பும் எண்ணிக்கையும்
|
பிறந்தவுடன்
|
0-2 ஜோடி பால் பற்கள்
|
6-10 மாதம்
|
கீழ்த் தாடையின் முன்புறம் 8 முன் பற்கள் இவை அனைத்தும் பால் பற்கள்
|
11/2 வயது
|
நடுவில் உள்ள இரண்டு முன் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்கும்
|
2-21/2 வயது
|
நான்கு நிரந்தரப் பற்கள் காணப்படும்
|
3-31/2 வயது
|
ஆறு நிரந்தரப் பற்கள் காணப்படும்
|
4 வயது
|
எட்டு நிரந்தரப் பற்கள் காணப்படும்
|
6-7 வயது
|
பற்கள் விழுந்து விடும்
|
பரண் மேல் ஆடு வளர்ப்பு
- வெள்ளாடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்க சிறந்த முறை பரண் மேல் வளர்க்கும் முறையாகும்.
- பரண் மேல் ஆடு வளர்ப்பில் ஆடுகள் மரத்தினால் ஆன பரண் போன்ற அமைப்பின் மேல் வளர்க்கப்படுகிறது.
- பரண் மேல் ஆடு வளர்ப்பு கொட்டகை தரையிலிருந்து உயரமான இடத்தில் குறைந்த்து 4 - 5 அடி உயரத்தில் இருப்பதால் ஆட்டு சாணி மற்றும் சிறுநீர் போன்றவை கீழே சேகரமாகிறது. ஆதலால் தினமும் சுத்தம் செய்யும் பணி மிகவும் குறைவாக இருக்கிறது.
- பரண் மேல் ஆடு வளர்ப்பு முறையில் வளர்ப்பதால் ஆடுகள் சுகாதரமாகவும் நோய் பரவும் தன்மை குறைவாகவும் இருக்கும்.
- வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் கொட்டகையிலே பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம் அளிக்கப்படுகிறது.
- வெள்ளாடுகளுக்கு ஏற்ற பசுந்தீவன பயிர்கள்- கோ 3 , கோ 4, கோ எப் எஸ் 29 , அகத்தி, கிளிசீடியா, வேலி மசால்.
- வெள்ளாடுகளுக்கு அளிக்க வேண்டிய தடுப்பூசிகள் - ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி (PPR ), துள்ளுமாரி நோய் தடுப்பூசி (ET)மற்றும் கோமாரி நோய் தடுப்பூசி (FMD). கால்நடை மருத்துவர்களை அணுகி தகுந்த நேரத்தில் தடுப்பூசிகளை போட்டு கொள்ளலாம்.
- வெள்ளாடுகளுக்கு குடற்புழுநீக்கம் செய்யும் முறை. --- புதிதாக வாங்கி வரும் வெள்ளாடுகளை தனியாக பிரித்து வைத்து குடற்புழு நீக்கம் செய்த 15 நாட்களுக்கு பிறகே பண்ணை வெள்ளாடுகளுடன் சேர்க்கவேண்டும். குடற் புழு நீக்க மருந்துகளில் பலவகை உண்டு. அவைகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சுழற்சி முறையில் கொடுக்கவேண்டும். அப்போது தான் அனைத்து வகையான குடற்புழுக்களை நீக்கமுடியும். வெள்ளாட்டு குட்டிகள் பசுந்தீவன உண்ண ஆரம்பித்த உடனே குடற்புழுநீக்க மருந்துகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனை படி சரியான கால இடைவெளியில் கொடுக்கவேண்டும்.
- பரண் மேல் ஆடு வளர்ப்பு பண்ணை அமைக்கும் முன் ஒன்றுக்கு மேற்பட்ட 3 ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கப்பட்டு வரும் பண்ணைகளை பார்வையிடுவதும் வெள்ளாட்டு பண்ணையாளர்களை கலந்தலோசிப்பதும் நல்லது.
- பரண் மேல் ஆடு வளர்ப்பு பண்ணைகளில் ஆடுகளை விடுவதற்கு முன்பே பசுந்தீவன பயிர்களை பயிரிட்டு தயார் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும்.
பரண் மேல் வெள்ளாடு வளர்க்கும் பண்ணையாளர்கள் விவரம்
- புவனன் - 915-013-0127
- சதாசிவம் -94420-94446
- நல்லுசாமி - 975-139-9630
மரு.மகேந்திரன் எம்.வி.எஸ்.சி. 944-500-1168
மரு.தெய்வவிருதம் எம்.வி.எஸ்.சி. 9842-480-986
திருவாரூர் மாவட்டம்ஆடுகளில் குடற்புழு நீக்கம்
ஆடுகளைத் தாக்கும் நோய்களில் குடற்புழு
நோய்கள் மிக முக்கியமானதாக இருப்பதால், ஆடுகளின் உற்பத்தி திறன் குறைவால்
ஏற்படும் இழப்பை தவிர்க்க, தகுந்த காலத்தில் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம்
செய்வது இன்றியமையாது ஆகும்.
நோய் காரணிகள்:
1. தட்டைப் புழுக்கள்2. நாடாப் புழுக்கள்
3. உருளைப் புழுக்கள்
குடற்புழு நோயின் அறிகுறிகள்:
1. பாதிக்கப்பட்ட ஆடுகளின் வயிறு பெருத்து பானை போல் இருத்தல்
2. உடல் எடை குறைந்து மெலிதல்
3. கீழ் தாடையில் வீக்கம் ஏற்படுதல்
4. வயிற்றுப்போக்கு
5. இரத்த சோகை ( கண்ணின் உள் இமை வெளிறி காணப்படுவது)
குடற்புழு நோயினால் ஏற்படும் பாதிப்புகள்:
1. ஆடுகளின் தீவன மாற்றும் திறன் குறைதல்
2. ஆடுகளின் இறைச்சி, உரோமம், பால் உற்பத்தித் திறன் குறைதல்
3. ஆடுகள் இறப்பதால் ஏற்படும் கடும் பொருளாதார இழப்பு
ஆடுகளுக்கான குடற்புழு நீக்க அட்டவணை:
1. பொதுவாக 3 மாத இடைவெளியில் ஒரு வருடத்திற்கு நான்கு முறை ( குறைந்த பட்சம் வருடத்திற்கு இரு முறை மிக அவசியம்)
(குடற்புழுக்களின் வாழ்க்கைச்
சுழற்சி (பெரும்பாலும்) 14- 21 நாட்கள் ஆகும். ஆகவே, குடற்புழு நீக்கம்
செய்த 3 வாரகளிலேயே ஆடுகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.)
2. பருவ மழை தொடங்கும்
முன்பு ஒரு முறையும்,
பருவ மழையின் போது ஒரு முறையும்,
பருவ மழைக்கு பின்னால் இரு முறையும்.
(தவிர பருவ மழைக்காலம் முடிந்தவுடன்
ஆடுகளுக்கு நத்தை மூலம் பரவும் ‘ஆம்பிஸ்டோமோசிஸ்’ மற்றும் கல்லீரல் தட்டைப்
புழு நோய்களைத் தடுப்பதற்கு)
ஏப்ரல் - ஜுன் - உருளை/ நாடாப் புழுக்கான மருந்து
ஜுலை – செப்டம்பர் – தட்டைப்புழுக்கான மருந்து
அக்டோபர் – டிசம்பர் – உருளை/ நாடாப்புழுக்கான மருந்து
கவனத்தில் கொள்ள வேண்டியது:
ஒரே
மருந்துகளைப் பயன்படுத்தாமல் மருந்துகளை சுழற்சி முறையில், ஆடுகளின் வகை
மற்றும் உடல் எடைக்கேற்ப சரியான அளவில் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி
பயன்படுதுவதன் மூலம், குடற்புழு நீக்க மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்புத்
தன்மையினை புழுக்கள் பெறாமல் தடுக்க இயலும்.
Post a Comment