டிப்ஸ்... டிப்ஸ்...!
டிப்ஸ்... டிப்ஸ்...! கை கள் புக முடியாத கண்ணாடி பாட்டில்களின் அடியில் காணப் படும் கறைகளை அகற்ற சிரமமாக இருக்கிறதா...
https://pettagum.blogspot.com/2016/03/blog-post_9.html
டிப்ஸ்... டிப்ஸ்...!
கைகள் புக முடியாத கண்ணாடி பாட்டில்களின் அடியில் காணப் படும் கறைகளை அகற்ற சிரமமாக இருக்கிறதா? எலுமிச்சைப் பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு, பாதிக்கு மேல் தண்ணீர் விட்டுக் குலுக்கினால் சுத்தமாகிவிடும்.
தக்காளி சட்னி செய்யும்போது. எள்ளை வறுத்துப் பொடித்துப் போட்டு அரைத்தால், மணம் தூக்கலாக இருப்பதுடன் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
கை
நகங்களுக்குக் கீழே கருமை நிறம் ஏறியிருப்பவர்கள், தேங்காய் எண்ணெயுடன்
சந்தனப் பொடியைச் சேர்த்து கைகளில் தினமும் பூசி வந்தால் நாளடைவில் கருமை
மறையும்.
காலிஃப்ளவரை
பயன்படுத்தியதும், இலையைத் தூக்கி எறியாமல், எண்ணெய் விட்டு வதக்கவும்.
உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து...
இதனுடன் உப்பு, வதக்கிய இலை சேர்த்து துவையல் அரைக்கலாம். இது சுவையும்,
சத்தும் மிக்கது.
போண்டா
அல்லது வடைக்கு உளுந்து அரைக்கும்போது தண்ணீர் சற்று அதிகமாகிவிட்டால்,
மாவை வழித்து பாத்திரத்தில் வைத்து, அதில் ஒரு கைப்பிடி ரவையைத் தூவிக்
கலந்து, சற்று நேரம் ஊறவைத்து எடுத்தால், மாவு கெட்டியாகி இருக்கும்.
இதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வடையோ, போண்டாவோ செய்யும்போது
மொறுமொறு என்று இருப்பதுடன், எண்ணெயும் அதிகம் குடிக்காது.
Post a Comment