கிச்சன் டிப்ஸ்! சமையல் அரிச்சுவடி,
.சோமாஸ், சுருள்போளி, செய்ய மாவு பிசையும்போது டால்டா, சோடாஉப்பு கலந்து 5 மணி நேரம் ஊறிய பின் செய்தால், மிருதுவாக இருக்கும். இடிக்க வேண்டியத...
https://pettagum.blogspot.com/2014/01/blog-post_8644.html
- .சோமாஸ், சுருள்போளி, செய்ய மாவு பிசையும்போது டால்டா, சோடாஉப்பு கலந்து 5 மணி நேரம் ஊறிய பின் செய்தால், மிருதுவாக இருக்கும். இடிக்க வேண்டியதே இல்லை.
- .அதிரசம் செய்யும்போது பொசுபொசுவென இருக்க, பாகு செய்யும்போது பாகை, தண்ணீரில் சில சொட்டுக்கள் விட்டால், உருட்டுவதற்கு ஏற்ற பக்குவத்தில் மாவைக் கலந்து செய்யலாம். இதோடு எள்ளை வறுத்துக் கலந்து பிசைந்து அதிரசம் செய்தால் நல்ல மணமாக இருக்கும்.
- .முறுக்கு மிருதுவாக இருக்க வேண்டுமானால், அதற்கு சரியான அளவில் பொருள்களைகச் சேர்க்க வேண்டும். உதாரணமாக 4 படி அரிசியோடு, அரை படி வெள்ளை உளுந்து, கால் படி பாசிப் பயறும் வறுத்துப்போட்டு முறுக்கு செய்யும்போது பால், டால்டா கலந்து செய்தால், அதன் சுவையே தனிதான்.
- .நெய் சேர்த்து ரவா லாடு செய்தபின், நல்ல வெள்ளை நிறமாக இருக்க, சர்க்கரையை நைசாக அரைத்து வைத்துக்கொண்டு அதில் புரட்டி வைக்கலாம்.
- .சுழியன் செய்யும்போது கடலைப் பருப்பை வேக வைத்து பின் அரைத்து, இதனை நன்றாக வதக்கிவிட்டு, அதேபோல் தேங்காயையும் வதக்கி பின் செய்தால், 4 நாட்கள்கூட கெடாமல் இருக்கும்.
Post a Comment