குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பெண்களுக்குத் தரும் அனுகூலங்கள்! - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

சட்டம் பெண் கையில்! எழுத்து வடிவம்: யாழ் ஸ்ரீதேவி , ஓவியம்   : கோ . ராமமூர்த்த ி தி ருமண உறவில் , பெண்ணின் மீது வார்த்தைகளாகவும...


சட்டம் பெண் கையில்!
எழுத்து வடிவம்: யாழ் ஸ்ரீதேவி, ஓவியம்: கோ.ராமமூர்த்தி

திருமண உறவில், பெண்ணின் மீது வார்த்தைகளாகவும் செயல்களாகவும் வன்முறை நிகழ்த்தப்படும்போது, அவர் சட்டத்தை நாட வேண்டியது அவசியம். கணவன் மனைவி என்றில்லை; குடும்ப அமைப்பில் வாழும் ஆண் பெண் யாராக இருந்தாலும் பெற்றோர், உடன்பிறந்தவர்கள் எனத் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களால் துன்பத் துக்கு உள்ளாக்கப்படுவதும் குடும்ப வன்முறையே. இதைத் தடுக்க உருவாக்கப்பட்டதுதான் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம். என்றாலும், இது அதிகமாகத் தேவைப் படுவது திருமண உறவில் கணவர் மற்றும் புகுந்த  வீட்டினரால் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்களுக்கே.
நான்கு சுவர்களுக்குள் நடக்கும் குடும்ப விஷயங் களில், எவற்றையெல்லாம் வன்முறை எனச் சட்டம் அடையாளம் காட்டுகிறது? அதைத் தெரிந்துகொள் வதன் மூலமே, பாதிக்கப் பட்டவர்கள் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதி பெற முடியும்.

குடும்ப அமைப்பில் எவையெல்லாம் வன்முறை?

ஒரு குடும்பத்துக்கு மருமகளாக வந்த பெண்ணை பையனின் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், இன்னபிற குடும்ப உறவுகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்துவது வன்முறை. மனரீதியாக என்று சொல்லும்போது, சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றி புறம்பேசுவது, உள்நோக்கத்துடன் அவர் மனதைக் காயப்படுத்தும்படி பேசுவது, வார்த்தைகளால் மன உளைச்சல் தருவது... இவையெல்லாமே வன்முறைதான். உடல்ரீதியாக என்று சொல்லும்போது, முடியைப் பிடித்து இழுப்பது, அடிப்பது, சூடு வைப்பது எனச் சம்பந்தப்பட்ட பெண்ணைத் துன்புறுத்தும் அனைத்துச் செயல்களும் தண்டனைக்குரிய வன்முறையே.

இதுபோன்ற விதவிதமான குடும்ப வன்முறைகளைப் பெண்கள் பலர் சகித்துக் கொண்டு வாழ்கின்றனர். ஆண்கள், தங்கள் இயலாமையை மனைவியிடம் கோபமாக, ரணப்படுத்தும் சொற்களாக, வன்முறையுடன் வெளிப்படுத்தி அவர்களை மனம்நோகச் செய்கின்றனர். மதுப் பழக்கத்துக்கு ஆளான ஆண்கள் மனைவியை அடிப்பதற்கும் உதைப்பதற்கும் காரணமே தேவைப்படுவதில்லை. அவர்களின் அந்த நேர ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள ஒரு ஜீவன் தேவைப்படுகிறது... அவ்வளவுதான்.
புகார் கொடுக்க...

இந்தியாவில் குடும்ப உறவுகளால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதால், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகக் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005 செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்டு, 2006 அக்டோபர் 26 அன்று நடைமுறைக்கு வந்தது. குடும்ப வன்முறை வழக்குகளை விசாரிப்பதற்காகவே தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் சமூகநலத் துறை அலுவலகத்தில்  இந்தப் பாதுகாப்பு அலுவலர்கள் (Protection Officers) உள்ளனர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அலுவலகத்தைத் தொடர்புகொண்டு புகார் கொடுக்கலாம். புகாரின் அடிப்படையில் ஆலோசனை வழங்குவார்கள். பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவ உதவி அளிப்பார்கள். அரசு பாதுகாப்பு அலுவலகத்தில் தங்கிக்கொள்ள உதவுவார்கள். பாதுகாப்பு அலுவலர்கள் பெண்களாக இருப்பதால் பாதிக்கப்பட்ட பெண் அவரின் அந்தரங்க விஷயங்களையும் தயக்கம் இல்லாமல் பகிர்ந்துகொள்ளலாம். தேவை ஏற்படும்போது வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் இவர்களால் முடியும். தவிர, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணும், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம்.

தயக்கம் வேண்டாம்... அச்சமும் வேண்டாம்...

குடும்ப வன்முறை என்பது எந்த நேரத்திலும் நடக்கலாம். இரவு நேரம் கணவன் அடித்துத் துன்புறுத்தினால், ‘இந்நேரத்தில் எங்கு போய் புகார் கொடுப்பது? தற்காப்புக்காகப் பாதுகாப்பு அலுவலரைத் தொடர்புகொள்ளலாமா? அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு இந்த நேரத்தில் போகலாமா?’ என்பதுபோன்ற தயக்கமும் குழப்பமும் தங்களுக்கான அரணை அடைவதிலிருந்து பெண்களைப் பின்னிழுக்கிறது. விளைவு, அந்நேர மன நெருக்கடியின் காரணமாகச் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குத் தள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற பாதுகாப்பற்ற சூழலில் பெண்களுக்கு முதலில் உதவக்கூடியது, அவர்களின் தைரியமே. அதன் துணையோடு, உடனடியாக அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்தை அணுகலாம். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கச் செயல்படும் 1091 என்கிற இலவச எண்ணில் தொடர்புகொண்டும் புகார் அளிக்கலாம்.

சிறப்பம்சங்கள்

*
மணமாகாமல் லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையில்  ஓர் ஆணுடன் வசிக்கும் பெண்ணுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.

*
அடிப்பது, உதைப்பது, கிள்ளுவது, தலையைச் சுவரில் மோதுவது, ஆபாச வார்த்தைகளில் திட்டுவது, மன உளைச்சலை உண்டாக்கும் விதமாகப் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுப்பது, வற்புறுத்துவது, நடத்தையைச் சந்தேகித்து இழிவுப்படுத்துவது, வரதட்சணை வாங்கிவரக் கட்டாயப்படுத்துவது, பொருள்களை எறிந்து காயப்படுத்துவது, குழந்தைகளை அடிப்பது... இவையெல்லாம் வன்முறையே.

*
பதிவு செய்யப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் புகார்களைப் பெற்றுப் பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்கலாம்.

*
வசதி இல்லாதவர்களுக்கு இலவச சட்ட உதவி செய்து தரப்படும்.

*
குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் கணவர்மீது (அல்லது அப்பா, சகோதரர் என்று வன்முறைக்கு ஆளாக்கியவர் எவர் மீதும்) புகார் கொடுக்கும் பெண், அவர் வீட்டிலேயே தங்கிக்கொள்ளும் உரிமையைச் சட்டம் பெண்ணுக்குக் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

*
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, தனக்குப் பாதிப்பு ஏற்படுத்தியவரிடமிருந்து மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைப்பட்டாலோ, மாதாமாதம் பராமரிப்புச் செலவுக்கோ உண்டான தொகையைக் கொடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிடலாம்.

*
திருமணமாகி ஏழு வருடங்களுக்குள் மட்டுமே வரதட்சணைப் புகார் கொடுக்க முடியும். குடும்ப வன்முறை புகார்களுக்கு இதுபோன்ற காலவரம்புகள் இல்லை.

*
குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் சிறை தண்டனை அல்லது ரூபாய் இருபதாயிரம் அபராதம் அல்லது இவை இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். இது தவிர, குற்றத்தின் தன்மையைப் பொறுத்து இந்திய தண்டனைச் சட்டம் 1860, பிரிவு 498A மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961-ன் கீழும், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அதற்கேற்பவும் தண்டனைகள் தீவிரமாகும்.

*
துணையை மிரட்டுவதற்காக இந்தச் சட்டத்தின் கீழ் புகார் கொடுப்பது தவறு.

ஆகவே பெண்களே... குடும்ப வன்முறை என்பது பொறுத்துக்கொள்ளவோ, சகித்துக் கொள்ளவோ வேண்டியதல்ல; தடுக்கப்பட வேண்டியது, தண்டனைக்குரியது.

இந்தச் சட்டம் அனைவருக்குமானது!

*
குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் ‘பெண்’ என்று குறிப்பிடப்படுவது, மனைவி மட்டுமல்லாது, எல்லா உறவுமுறை பெண்களுக்கும் பொருந்தும். மகன் அம்மாவை அடித்தாலும் அதுவும் வன்முறையே.
ஒரு வீட்டில் சொந்த அப்பா மற்றும் உறவுகளால் துன்பத்துக்குள்ளாகும் 18 வயதுக்குட்பட்ட பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கும் இச்சட்டம் பொருந்தும்.

குடும்ப வன்முறையால் ஆண் பாதிக்கப்படும்போதும், வன்முறை ஏற்படுத்திய பெண்மீது இந்தச் சட்டம் பாயும்.

கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆண் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியபோது, குடும்ப வன்முறைச் சட்டத்தின் பிரிவு 2(Q)-ல் 18 வயதுக்கு மேலான ஆண்களுக்கு இச்சட்டம் பொருந்தாது என்கிற பகுதியை நீக்கியது.

ஒரு வழக்கு!

கணவனிடமிருந்து குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் பராமரிப்புத் தொகை கேட்டு, ஒடிசா மாநிலக் கீழமை நீதிமன்றத்தில் மமிதா ராணி சுதார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதை ஏற்க மறுத்து அவரின் கணவர் கிரிதரிநாத், ஒடிசா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘என் மனைவி குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்தது செல்லாது. ஏனென்றால், அவர் புகார் அளித்தபோது நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் வசிக்கவில்லை; பிரிந்துவிட்டோம்’ என்பது அவரது வாதம். நீதிமன்றமோ, குடும்ப வன்முறை சட்டப்பிரிவு 2(F)-ன்படி புகார் கொடுக்கும்போது ஒரே வீட்டில் வசிக்காவிட்டாலும் அதற்கு முன்பு வசித்திருந்தால் இந்தச் சட்டம் பொருந்தும் என்று தீர்ப்பளித்தது.

Related

உபயோகமான தகவல்கள் 2021931602222992190

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item