முக்கியமானது; திணிக்கப்படுகிற முடிவை விட, ஏற்கப்படுகிற முடிவில், உரியவர்களுக்கு முழுமையான ஈடுபாடு வரும்-இந்த நாள் இனிய நாள்!

'நான் கரடியா கத்திக்கிட்டிருக்கேன்; நீ பாட்டுக்கு போறயே... என்ன நினைச்சுகிட்டிருக்கே மனசுல...' இப்படி கத்துபவர், குடும்பத் தலைவர...

'நான் கரடியா கத்திக்கிட்டிருக்கேன்; நீ பாட்டுக்கு போறயே... என்ன நினைச்சுகிட்டிருக்கே மனசுல...'

இப்படி கத்துபவர், குடும்பத் தலைவர் என்பதை ஊகித்திருப்பீர்.
'நான் சொல்றதை செய்யாம, உன் இஷ்டத்துக்கு நடந்துக்கிறியே... நீ முதலாளியா, நான் முதலாளியா?'

'நான், இந்த கல்லுாரியோட முதல்வர்; நான் வச்சது தான் இங்க சட்டம். எவனை வேணும்ன்னாலும் போய் பாரு; உன்னால என்ன முடியுமோ பாத்துக்க...'

'எங்க காம்பவுண்டுக்குள் வந்துட்டா, நாங்க சொல்றபடி தான் நடக்கணும்; இஷ்டமில்லேன்னா வெளியில போங்க...'

— இப்படியெல்லாம் கண்ட படி பேசி குதிப்பவர்கள், தங்கள் நோக்கத்தில், எப்போதாவது வெற்றி பெற்றிருக்கின்றனரா?

மாறாக, 'இங்க வந்து உட்காரு; இதை பத்தி, உன்கிட்ட விரிவாக பேசணும்; முதல்ல, நான் சொல்றதை கேளு; அப்புறம் நீ சொல்றதை கேட்கிறேன். ரெண்டு பேரும் பேசி, நல்ல முடிவா எடுப்போம்...' என்று கூறினால், பேசுபவரின் கருத்து, எடுபடுவதற்கான வாய்ப்பு, அதிகமாகி விடும்.

'நான் அப்படி சொல்றதுக்கு காரணம் இருக்கு; என் வழியில் போய், நான் சொல்றதை செஞ்சியானா, அதன் விளைவுகளை சந்திக்க நான் தயார்...'

'நான், ஒரு முதலாளிங்கிறதையே மறந்துடு; வயசுல மூத்தவன்னும், அனுபவஸ்தன்னும் மட்டும் எடுத்துக்க...' என்று ஆரம்பித்து, நிதானமாக பேசினால், 'சரி முதலாளி...' என்கிற பதில் வருவது நிச்சயம்.
அக்கல்லுாரி முதல்வர் யாரிடம் வேண்டுமானாலும், அப்படி பேசியிருக்கட்டும்; ஆனால், 'எவனை' என்கிற வார்த்தை, கல்லூரி செயலர், தாளாளரை கூட குறிக்கும் என்பதால், இது, வத்தி வைத்தால், உடனே பத்தி கொள்ளும். முதல்வருக்கு எதிராக, எல்லாவற்றையும் திருப்புவதற்கு, இவர், 'ஓவரா' பேசின வார்த்தைகளே போதும்!

தனக்கும், பிறிதொருவருக்குமான பிரச்னையில், உயர் பதவியில் இருப்பதனாலேயே தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற எண்ணத்தில், அனாவசியமாக வீசப்படும் பேச்சு, எதிரிக்கு மிக பெரிய ஆயுதத்தை, இவரே எடுத்து கொடுத்து, 'இந்தா... என்னை தாக்கு...' என்று சொல்வது போன்றதாகும்!

தலைமை பதவியில் இருப்போர், தங்களுக்கு கீழ் பணிபுரிவோரிடம் நீக்கு, போக்காக நடந்து கொள்ளவும், பேசவும் வேண்டுமே தவிர, தான் தோன்றித்தனமாக அல்ல.

'எனக்கு இப்படி தோணுது; சரின்னும் படுது. உங்க ஒத்துழைப்பு இல்லாம, நான் ஒண்ணும் செய்ய முடியாது. நான் சொல்றதுல, உடன்பாடு இல்லன்னா சொல்லுங்க; தாளாளர்கிட்டே வேணும்ன்னாலும், உங்க விஷயமா பேசி பார்க்கிறேன்...' என்று, இந்த முதல்வர் சொல்லியிருந்தால், பிடி, இன்னமும் இவர் கையை விட்டு போகவில்லை என்று பொருள்.

'சார்... எங்க காம்பவுண்டுக்குள்ளே, சில சட்ட, திட்டங்கள் இருக்கு; இதை எல்லாரும் பின்பற்றணும்ங்கிற எதிர்பார்ப்பு, எங்ககிட்டே இருக்கு. இதில, பிழை நடந்தா, நான் தான் பாதிக்கப்படுவேன். உங்க செயல்பாட்டுக்கு, நான் தண்டிக்கப்படணுமா... நீங்களே சொல்லுங்க...' என்றால், எதிராளி இறங்கி வருவார்.

அதிகாரமும், உரிமையும் உள்ளவர்கள், தங்கள் இருக்கையை, ஆயுதமாக பயன்படுத்துகிற போது, அதில் கெடுதல்கள் விளையவே, வாய்ப்பு அதிகம்.
மாறாக, தங்கள் இருக்கையை, கேடயமாக பயன்படுத்தி, தகுதியிலிருந்து ஒருபடி இறங்கி வந்து, முரட்டு வாசகங்களை நீக்கி, அதிகார தொனியை களைந்து, தேனில் தோய்க்கப்பட்ட வார்த்தைகளாக வழங்கினால், இரு வித நன்மைகள் நிகழும்.

முதலாவதாக, 'அவர் இருக்கும் நிலையில், இவ்வளவு இறங்கி வந்து பேசணும்ங்கிற அவசியம் என்ன...' என்கிற சிந்தனை, எதிராளிக்கு வருகிற போது, இதயம் திறந்து, விஷயம் நன்கு பதிந்து விட வாய்ப்பு அதிகம்.

இரண்டாவது நன்மையும் முக்கியமானது; திணிக்கப்படுகிற முடிவை விட, ஏற்கப்படுகிற முடிவில், உரியவர்களுக்கு முழுமையான ஈடுபாடு வரும்; இது, நமக்கு அணி சேர்க்கிற பெரும் பலம் தானே!

Related

இந்த நாள் இனிய நாள் 5546138948937781286

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item