இஃப்தார் நோன்பு ஸ்பெஷல்! லுக்மி!
இ ஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரம்ஜான் மாதத்தில் 30 நாள்கள் நோன்பிருப்பது கடமையாக்கப்பட்டுள்ளது. ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மிக ஈர...

சூரியன் அஸ்தமனமான பிறகு (மாலை 6 மணி வாக்கில்) நோன்பை முடித்துக்கொள்வது வழக்கம். நோன்பு முடிப்பதற்கு ‘இப்தார்’ என பெயர். இஃப்தாரில் உண்ணுவதற்கான சிறப்பு உணவுகளின் ரெசிப்பிகளை அளிக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹசீனா செய்யது.
------------------------------------------------------------------------------------------------------------------------
லுக்மி
தேவையானவை:
பூரணம் செய்ய:
லுக்மி செய்ய:
செய்முறை:
கறியுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துப் பிசிறி அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடாக்கி... வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் ஊறவைத்த கறி சேர்த்துக் கிளறி பத்து நிமிடங்கள் வேகவிடவும். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். ஆறிய பின் கறி கலவையுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
பாத்திரத்தில் மைதா மாவுடன், கோதுமை மாவு, உப்பு, ரவை, எண்ணெய் சேர்த்துக் கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மிருதுவாகப் பிசையவும். மாவை மூடி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, மீண்டும் 5 நிமிடங்கள் இந்த மாவை நன்றாகப் பிசையவும். பிசைந்த மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி மைதா மாவு தூவி, சப்பாத்திகளாகத் தேய்க்கவும், இதை நீளவாக்கில் மூன்று துண்டுகளாக்கவும்.
ஒவ்வொரு சப்பாத்தி துண்டின் மீதும் ஒரு டேபிள்ஸ்பூன் கைமாவை வைத்து இரு ஓரங்களையும் ஒன்றின் மேல் ஒன்றாக முக்கோண வடிவத்துக்கு மூடவும். பூரணம் வெளியே வராதபடி ஒரங்களை நன்றாக அழுத்திவிடவும். இதுவே லுக்மி. வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி லுக்மிகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். தயிர், தக்காளி, சாஸ், புதினா சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்
Post a Comment