இன்ஷூரன்ஸ் சம்பந்தமான சந்தேகங்களுக்கு கேள்வி-பதில்
கேள்வி-பதில் பகுதியில் இன்ஷூரன்ஸ் சம்பந்தமான சந்தேகங்களுக்கு பதில் அளித்தார் வீரேந்தர் குமார், இன்ஷூரன்ஸ் ஓம்புட்ஸ்மேன், தமிழ்நாடு மற்...

சென்னை அலுவலகத்தின் முகவரி
Fatima Akhtar Court, 4th Floor, New No.453,
Anna Salai, Teynampet, Chennai – 600 018.
Location - Near S.I.E.T. SIGNAL
Tel: + 91 44- 2433668/ 24335284
Fax: +91 44 -24333664
e-mail address : bimalokpal.chennai@gbic.co.in
வணிக ரீதியல்லாத பாலிசி சம்பந்தப்பட்ட புகார்கள் மட்டுமே கையாளப்படுகின்றன.
2. பிரீமியம் சம்பந்தப்பட்ட புகார்கள்
பிரீமியம் தொகைகளை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களே, ஐஆர்டிஏவின் ஒப்புதலோடு தீர்மானிக்கின்றன.
பதில் : பொதுவாக 30 நாட்களுக்குள் க்ளெய்ம் வழங்கப்படும். சில சிக்கலான பாலிசிகளில் அதிகப்படியான விசாரணை தேவைப்பட்டால் அதிகபட்சமாக 6 மாதத்திற்குள் க்ளெய்ம் வழங்கப்படும்.
4. நான் இரண்டு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வைத்திருக்கிறேன். இரண்டுமே ஃப்ளோட்டர் பாலிசி. இரண்டும் வெவ்வேறு நிறுவனத்தில் எடுத்திருக்கிறேன். ஒன்று என் தாய் மற்றும் தந்தையுடன் சேர்ந்து எடுத்திருக்கிறென். இதற்கான கவரேஜ் ரூ. 5 லட்சம். இரண்டாவது பாலிசி என் மனைவி மற்றும் இரண்டு வயது மகனோடு சேர்ந்து எடுத்திருக்கிறேன். இந்த பாலிசிக்கான கவரேஜ் தொகை ரூ. 5 லட்சம். சமீபத்தில் எனக்கு குடலிறக்கம் ஏற்பட்டு ரூ. 1 லட்சம் செலாவாகிவிட்டது. நான் எப்படி க்ளெய்ம் செய்வது?
நீங்கள் எடுத்துள்ள ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் முதலில் கான்டிரிபியூஷன் க்ளாஸ் சொல்லப்பட்டிருக்கிறதா என்பதை பாருங்கள்.
அப்படி கான்டிரிபியூஷன் க்ளாஸ் (Contribution clause - விகிதாச்சார முறை) சொல்லப்பட்டிருந்தால், இரண்டு பாலிசிகளிலும் சொல்லப்பட்ட விகிதாச்சார முறைப்படி க்ளெய்ம் கொடுக்கப்படும்.
3. சம்பந்தப்பட்ட நபர் வழக்குரைஞரின் உதவி இல்லாமலேயே, நேரடியாக வந்து தமிழிலேயே புகாரளிக்கலாம் மற்றும் வாதிடலாம்.
5. மேற்கூறியது போல சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் புகார் செய்து நடவடிக்கை இல்லை என்றால் புகார் செய்து 30 நாட்களுக்குப் பின் அடுத்த ஒரு வருடத்திற்குள் புகாரை இன்ஷூரன்ஸ் ஓம்புட்ஸ்மெனுக்கு சமர்பிக்கலாம்.
6. இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து பாதிக்கப்பட்டு புகார் அளித்தவர்களுக்கு, ஓம்புட்ஸ்மென் கருணைத்தொகை வழங்கும் அதிகாரமும் உள்ளது.
ரெட்ரசல் ஆஃப் பப்ளிக் கிரீவன்சஸ் ரூல்ஸ் (Redressal of public Grievances rules) 1998 ன்படி புகார் பெறப்பட்டு 90 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
ஓம்புட்ஸ்மேனின் தீர்ப்பு புகார் அளித்தவருக்கு அனுப்பப்படும். அந்த தீர்ப்பு நகல் கிடைத்து, 30 நாட்களுக்குள், அந்த தீர்ப்பை ஏற்கும் சம்மத கடிதத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.
9. கிளைம் செட்டில்மெண்ட் ரேசியோ நன்றாக உள்ள கம்பெனியில் தான், இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்கிறார்கள். ஏன்?
இந்த க்ளெய்ம் செட்டில்மென்ட் ரேஷியோ அவர்கள் நிறுவனத்தின் தரமான சேவையை காட்டுகிறது. எனவே தான் இந்த மாதிரியான நிறுவனங்களில் பாலிசி எடுக்கிறார்கள்.
1. பாலிசி தொடர்பான டாக்குமென்ட்களை தெளிவாக படித்து புரிந்து கொள்ள வேண்டும்.
2. க்ளெய்மின் போது, க்ளெய்மிற்காக கூறப்பட்டுள்ள ஆவணங்களை சரியாக மற்றும் விரைவாக சமர்ப்பிக்க வேண்டும். சமர்பித்த பின் அத்தாட்சி கடித்தை கட்டாயமாக பெறவும்.
3. எப்போதும் நீங்கள் சமர்பித்த ஆவணங்கள் மற்றும் அத்தாட்சி கடிதங்களின் நகல்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
Post a Comment