பணமே ஓடி வா! உங்களுக்கு உதவும் சட்டங்கள்!!

பணமே ஓடி வா ! யானை இருந்தாலும் ஆயிரம் பொன் . இறந்தாலும் ஆயிரம் பொன் .’ இந்தப் பழமொழி யானைக்கு மட்டுமல்ல ; சில மனிதர...



யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன்.’
இந்தப் பழமொழி யானைக்கு மட்டுமல்ல; சில மனிதர்களுக்கும் பொருந்தும். காரணம், சில பெற்றோர் அவர்களுடைய பிள்ளைகளுக்கு வாழ்நாள் முழுக்க தேவையானவற்றை செய்துகொண்டே இருப்பது தவிர, அவர்கள் இறந்த பிறகும், அவர்களின் பிள்ளைகளுக்கு ஏதாவது பெரியதாக கொடுப்பார்கள். அது, அவர்கள் வாழ்நாள் எல்லாம் சேர்த்துவைத்த சொத்தாக இருக்கும்.
அவர் பெயர் கருப்பையா. நல்ல பணக்காரர். பணம் என்றால் பெரும் பணம். பெரியவீடு, பல ஏக்கர் நிலங்கள், ஷேர்கள், நகைகள் என்று ஏராளமான சொத்துக்கள். அவ்வளவு இருந்தாலும், மனுஷன் பணத்தினை சுலபத்தில் செலவழித்துவிடமாட்டார். காசு விஷயத்தில் படுகெட்டி. அவரிடம் அவ்வளவு பணம் இருந்ததே, அவர் இறந்த பிறகு, அவர் மகன் போட்ட ஆட்டத்தில்தான் தெரியவந்தது. கருப்பையா பணத்தினைச் சம்பாதித்துச் சேர்த்ததில் மட்டும் கெட்டிக்காரரில்லை. அந்தப் பணம் தன் மகனுக்கு மிகச் சரியாகப் போய்ச் சேர வேண்டும் என்பதிலும் சமர்த்தராய் இருந்திருக்கிறார். அதனால்தான் , அவர் இறந்ததும், அவருடைய அனைத்து சொத்துக்களும், முழுமையாக அதுவும் சீக்கிரமே மகனுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது.
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். இதில் என்ன அதிசயம்? அப்பா சம்பாதித்தது மகனுக்குத்தானே!’’
எல்லோருக்குமே கூடுதலோ குறைவோ, பெற்றவர்கள் வைத்துவிட்டுப் போகும் சொத்து வருகிறது. வாழ்க்கையில் ஒருவருக்கு பணம் வரும் வழிகளில் இதுவும் ஒன்று. பெற்றவர்கள் இருக்கும் போதே பிரித்துக்கொடுப்பது ஒருமுறை. அவர்கள் இருக்கும் வரை பாராமரித்துவிட்டு, அவர்கள் காலத்துக்குப் பிறகு, வாரிசுகளுக்குப் போகும்படிச் செய்வது இன்னொரு முறை. அதைப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம். இந்த வழி, எல்லா குடும்பங்களிலும் சுலபமாக நடந்துவிடுகிறது என்று சொல்லமுடியாது.
உதாரணத்திற்கு இன்னொருவர். அவர் பெயர் ராம்பாபு. அவர் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றியவர். அவரது 47_வது வயதில் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்
அடப்பாவமே! சரி. அதனால் அவர் பிள்ளைக்கு அவருடைய சொத்து கிடைக்கவில்லையா?’’
கிடைத்தது. ஆனால் அந்தப் பணத்தினை வாங்குவதற்குள், ராம்பாபு மனைவிக்கும் மகனுக்கும் போதும் போதும் என்றாகிவிட்டது. காரணம், அவர்கள் தான் ராம்பாபுவின் வாரிசுதாரர்கள் என்று நிரூபிக்க, அவர்கள் அவ்வளவு அலைய வேண்டியதாகிவிட்டது. அதனால் தாமதமாக , கொஞ்சம் குறைந்துபோன மதிப்பில்தான் சொத்துகள் கைக்கு வந்தன.’’
என்ன கொடுமை இது! சின்ன வயதில் அவர் செத்ததே அநியாயம். இதில் அவர் சேர்த்துவைத்த பணம், அவர் குடும்பத்துக்குப் போய்ச்சேர இவ்வளவு பாடா! ஆமாம், ஏன் இப்படி?
எல்லாம் அலட்சியம்தான் காரணம்.’’
யாருடைய அலட்சியம்? பணம் கொடுக்க வேண்டியவர்களின் அலட்சியம் தானே?’’
அதுதான் இல்லை. அவர்கள் எல்லாம் உதவத்தான் விரும்பினார்கள். ஆனாலும் முடியவில்லை.’’
பணம் பட்டுவாடா செய்யவேண்டியவர்களின் அலட்சியம் இல்லை என்றால், வேறு யாருடைய அலட்சியம்?’’
ராம்பாபுவின் அலட்சியம்.’’
எப்படி?’’
ராம்பாபு வேண்டியதைச் செய்யவில்லை.’’
இப்படி பூடகமாவே சொன்னால் எப்படி?’’
ராம்பாபு அவர் சொத்துக்களுக்கு யார் வாரிசு என்று உயில் எழுதி வைக்கவில்லை. அவர் வயது அப்படி. அதனால் விட்டுவிட்டார் என்று சொல்லலாம். ஆனால் அவர் அவருடைய பங்குகள் போன்ற சில சொத்துகளுக்கு, வாரிசுதாரர் (நாமினி) நியமித்திருக்கவில்லை’’
அது ஒரு பிரச்னையா?’’
இல்லையா பின்னே? அசையா சொத்துக்கள் யாருக்கு என்கிற கேள்வி வருகிற போது, இறந்தவருடைய இறப்புச் சான்றிதழ் கொடுத்து, மாநில அரசின் அலுவலகத்தில் இருந்து வாரிசுதாரர் சான்றிதழ் பெற்றுவிட்டால் போதும். ஆனால், பங்குகள், வங்கி வைப்புகள், வங்கி லாக்கர்கள், அரசு கடன் பத்திரங்கள், பரஸ்பர நிதிகள் போன்ற பலவற்றுக்கும், ராம்பாபு அவர் காலத்திலேயே, தனக்கு ஏதும் நேர்ந்துவிட்டால் எவரிடம் அந்தப் பணத்தினைக் கொடுப்பது என்பதை எழுதிக்கொடுத்திருக்க வேண்டும். அதன் பெயர் நாமினேஷன். அதனை அவர் செய்திருக்கவில்லை.’’
அப்படி நாமினேஷன் செய்ய, தனியாக கடிதம் ஏதும் கொடுக்க வேண்டுமோ!’’
இல்லை. குறிப்பிட்ட அந்த கணக்கினைத் திறக்கும் போதோ, அதில் பணத்தினைப் போடும் போதோ, விண்ணப்பப்படிவத்தினை சரியாகப் பார்த்தால் தெரியும். அதிலேயே நாமினேஷன் செய்வதற்கான இடம் இருக்கும். அதில் ஒருவர், நியமிக்க விரும்பும் நபரின் பெயர், வயது , முகவரி எழுதினால் போதும். வாரிசுதாரரின் புகைப்படமும் கொடுத்து , அந்த வாரிசுதாரர் அதே படிவத்தில் கையெழுத்தும் அப்போதே போட்டுவிட்டால் இன்னும் பக்கா.”
அப்படிச் செய்திருந்தால், ராம்பாபுவின் குடும்பத்தாருக்குச் சேர வேண்டிய பணம் ஒழுங்காக உடனடியாக சேர்ந்திருக்குமோ!”
ஆமாம்
அடச்சே! ஐந்து நிமிடத்தில் ஆகிற வேலை. அதைச் செய்யாததால் தான் அவர் குடும்பத்துக்கு எவ்வளவு அலைச்சல்! அதைத்தான் அலட்சியம் என்றீர்களோ!”
ஆமாம். இல்லையா பின்னே?”
முன்பு சொன்னது தவிர வேறு எதெதற்கு இந்த நியமனம் அவசியம்?”
முன்பு பார்த்தோமே சேம நல நிதி. ஊதியத்திற்காக வேலைசெய்யும் இடங்களில், சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் மற்றும் நிர்வாகத்தினால் வழங்கப்படும் சேம நலநிதி (றிதி) .அந்த சேமிப்பினை, ஊழியரின் பணிக்காலம் முடிந்ததும், அவர் சேமித்த பணத்தினை வட்டியோடு சேர்த்து வழங்குவார்கள். அதேபோல, அவர் பணி செய்யும் இடத்தில் கிராஜிவிட்டி எனப்படும் கருணைத் தொகை கொடுக்கவேண்டிவந்தால் அதனையும், ஓய்வு பெறும் ஊழியரிடம் கொடுப்பார்கள். ஆனால் அவர் ஒருகால் ராம்பாபு போல, எவரேனும் எதிர்ப்பாராமல் இறந்துபோனால், அந்தத் தொகைகளை யாரிடம் கொடுப்பது?
அப்படிப்பட்ட பட்டுவாடாக்களுக்கும் கூட ஊழியர், உரிய படிவங்களில் நியமனம் செய்ய வேண்டும். ராம்பாபு அதனையும் முறையாக செய்யவில்லை
முறையாக என்றால்..?’’
அவர் அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததுமே நியமனங்கள் செய்துவிட்டார்தான்
பிறகென்ன?’’
அப்போது அவர் நியமனம் செய்தது அவர் தாயை. ராம்பாபு அப்போது திருமணம் ஆகாதவர். ஆனால் அவர் இறந்த போது, அவருக்கு திருமணமாகி, ஒரு மகனும் இருந்தான். அவர்கள் பெயர்கள் நியமனத்தில் இல்லை’’
சரி. அதனால் என்ன? அம்மாவிற்கு கொடுத்துவிட்டுபோவது!’’
ராம்பாபு இறப்பதற்கு மூன்று வருடங்கள் முன்னால்தான் அவருடைய அம்மா இறந்துபோனார்’’
அடடா!’’
நியமனம் செய்தவர் உயிருடன் இல்லை. உயிருடன் இருப்பவர்களுக்கு நியமனம் இல்லை. அதனால் அந்தப் பணத்தினைப் பெறுவதற்கு வாரிசுதாரர் சான்றிதழ் தேவைப்பட்டது.’’
அதை வாங்குவது ஒன்றும் அவ்வளவு சிரமமில்லையே! அதைப்பெற்று அதைக்காட்டி, ராம்பாபுவின் சொத்துகளை பெறவேண்டியதுதானே!’’
எல்லா இடங்களிலும் வெறும் வாரிசுதாரர் சான்றிதழ் போதாது. உதாரணமாக பரஸ்பர நிதிகளுக்கு , நோட்டரி பப்ளிக் கையெழுத்து, வங்கி மேலாளர் சான்றிதழ் போன்றவையும் தேவைப்படும். பங்குகளை வைத்திருக்கும் டி.பி. (ஞிறி) க்கும், சில வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்திற்கும் கெடுபிடிகள் இன்னும் அதிகம்.
ஞிறி. யில் வைத்திருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால், வெறும் வாரிசுதாரர் சான்றிதழ் போதாது. நீதிமன்றத்தில் இருந்து பெறவேண்டியசக்சஷன் சர்டிபிகேட்கொடுக்க வேண்டும். அதை வாங்குவதற்கு செலவும் சில மாதங்களும் நிச்சயம் ஆகும்’’
அடேயப்பா. . ராம்பாபு பணத்தினை அவர் குடும்பத்திற்குக் கொடுப்பதற்கே இவ்வளவு கெடுபிடிகள், சிரமங்களா? இவற்றைத் தவிர்க்க வழியே இல்லையா?’’
ஏன் இல்லை? சுலபமான வழி இருக்கிறது.’’.
உயிலே.. உயிலே..
வள்ளல் சீதக்காதி கதை தெரிந்திருக்கலாம். இல்லை என்று சொல்லாத கொடைவள்ளல். ஒரு புலவர், சீதக்காதியிடம் வழக்கமாக பரிசுகள் வாங்கி பலனடைந்தவர். நொடிந்துபோன நிலையில், சீதக்காதியைப் பார்த்து பணம் வாங்குவதற்காக நம்பிக்கையுடன் வருகிறார். ஆனால் அவர் கேள்விப்பட்ட தகவலோ வேறுமாதிரியாக இருந்தது. “சீதக்காதி மரணம் அடைந்துவிட்டான்.” புலவருக்கு அதிர்ச்சி. புதைக்கப்பட்ட சுடுகாட்டிற்கு ஓடுகிறார். சமாதியைப் பார்த்துக் கதறுகிறார், “எப்போதும் கொடுப்பாயே. போய்விட்டாயே. உன்னை நம்பி வந்தேனே. பணம் வேண்டுமே ! எங்கே போவேன்? யாரிடம் கேட்பேன்?”
அழுது புலம்புகிறார். நிமிர்ந்த அவர் கண்ணில் பட்டதை அவரால் நம்பமுடியவில்லை. அட! சீதக்காதியின் ஒரு கை வெளியே நீட்டிக்கொண்டிருக்கிறது. பிரிந்திருந்த விரல் ஒன்றில், பளபளக்கும் தங்க மோதிரம்! “வா. இதை நீ எடுத்துப் போ’’ என்று சீதக்காதி சொல்லுவது போல இருக்கிறது. எடுத்துக்கொண்ட சந்தோஷத்தில் பாடினார், “..செத்தும் கொடுத்தான் சீதக்காதி.’’
சீதக்காதி போன்ற பலர் இறந்த பிறகும் கொடுக்க, வேறுசிலரோ, தெரிந்தோ தெரியாமலோ, ‘செத்தும் கெடுப்பார்கள்.’
வித்தியாசத்தினை கவனித்திருக்கலாம். கொடுக்காதது மட்டுமில்லை மேற்கொண்டு கெடுப்பார்கள், சென்ற அத்தியாயத்தில் பார்த்த ராம்பாபு போல. பெற்றவர்களின் சிதறிக்கிடக்கும் சொத்துக்களை சேகரிக்கவும், பெறுவதற்காகவுமே தங்களின் முழுநேர வேலை அல்லது செய்துகொண்டிருந்த தொழிலை கவனிக்க முடியாமல் விட்டவர்கள் உண்டு.
வாழ்நாள் எல்லாம் சிரமப்பட்டு சேர்கிற பணம், சிந்தாமல் சிதறாமல் வாரிசுகளுக்கு போய்ச் சேர வேண்டும்.
பணம் சம்பாதிப்பதும் அதனை பாதுகாப்பதும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம்தான் அதற்கு வாரிசுகள் நியமிப்பதும். மிஞ்சி மிஞ்சிப் போனால் அரை நாள் ஆகக்கூடிய வேலை. அதைச் சரியாக செய்யாவிட்டால், பணமும் சொத்தும் உரியவர்களுக்கு வந்துசேர பலவருடங்கள் கூட ஆகலாம்.
என்ன செய்ய வேண்டும்? எதோ சுலபமான வழி இருக்கிறதென்று சொன்னதாக ஞாபகம்.’’
எல்லா கணக்குகளிலும் கணவன் _ மனைவி இருவர் பெயர்களையும் போட வேண்டும்.’’
ஜாயிண்ட் அக்கவுண்ட் போல?’’
ஆமாம். சில இடங்களில் ஜாயிண்ட் அக்கவுண்ட். வேறு சில இடங்களில்இருவரில், இருப்பவர் எவரோ அவர்என்கிற வகையில் ஆரம்பிக்கப்படுகிறஎய்தர் ஆர் சர்வைவர்’ (Either Or Survivor). சுருக்கமாக E or S. கணக்குகள்.’’
இதனால் என்ன பலன்?’’
இருவர் பெயர்களிலும் கணக்கு இருப்பதால், அந்த வங்கிக் கணக்கிலோ அல்லது பிக்செட் டிப்பாசிட்டிலோ அல்லது வேறு கணக்கிலோ இருக்கும் பணத்திற்கு இருவருமே சொந்தம். ஒருவருக்கு ஏதும் ஆகிவிட்டால், மற்றொருவருக்கு அந்தத் தொகை சுலபமாக கிடைக்கும். சிக்கல் ஏதுமில்லை.
பங்குகள் வாங்கினாலும் இப்படி இருவர் பெயர்களில் வாங்கலாம். அதில்ஃபர்ஸ்ட் ஹோல்டர்’, ‘செகண்ட் ஹோல்டர்என்று பெயர் போடுவார்கள். பங்குகளை வைத்திருக்கும் டி.பி கணக்குகளுக்கும் இது பொருந்தும்.’’
கணக்கு வைத்திருப்பவருக்கு ஏதும் ஆகிவிட்டால் என்கிற சூழ்நிலைக்கு இது சரிதான். ஆனால் அதற்கு முன்?’’
வட்டி, டிவிடெண்ட், போனஸ் , தகவல்கள் எல்லாம் முதல் ஹோல்டருக்குத்தான் வரும். இரண்டாவது ஹோல்டர் என்பவர் பெயருக்குத்தான்.’’
இப்படி மனைவி பெயரில் மட்டும்தான் செய்ய முடியுமா?’’
பிள்ளைகள் பெயரிலும் செய்யலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால், ஒரே கணக்கிலும் அப்படிச் செய்யலாம். அல்லது, தனித்தனி கணக்குகள் திறந்து, ஒவ்வொன்றில் ஒவ்வொருவர் பெயரினை ஜாயிண்ட் ஹோல்டராகப் போடலாம். ஒரு கணக்கில் அப்பாவும் மனைவியும். இரண்டாவதில் அப்பாவும் முதல் மகனும் என்பதுபோல.’’
எவர் பெயருக்குப் போடுகிறோமோ, அவருக்குத் தெரியாமலேயே போடமுடியுமா?’’
தெரியாமல் போட முடியாது. காரணம், அவரும் விண்ணப்பத்தில் கையெழுத்துப் போட வேண்டும். ஆமாம், ஏன் அவருக்குத் தெரியாமல் அவர் பெயரில் போட வேண்டும்?’’
தெரிந்தால் இப்போதே கொடுங்கள் என்பார்களே! ஏதும் ஆன பிறகு அவர்களுக்குத்தான். எடுத்துக்கொள்ளட்டும். இப்போதே எல்லாவற்றையும் கொடுத்துவிட முடியுமா?’’
அதுவும் சரிதான். அப்படி எல்லாவற்றையும் கொடுக்கவும் தேவையில்லை.’’
யாருக்கு நாமினேஷன் இருக்கிறதோ அவருக்குத்தானா எல்லாம்?’’
இல்லை. சட்டப்படி பார்த்தால், ‘நாமினியாக நியமனம் செய்யப்பட்டவர், அந்தக் குறிப்பிட்ட பணத்தினை பெற்றுக்கொள்வதற்கு மட்டுமே உரிமை உள்ளவர். பெற்ற பணத்தினை அவர், எல்லா வாரிசுகளுக்கும் பிரித்துக்கொடுக்கத்தான் வேண்டும்.’’
என்ன விகிதத்தில் பிரிப்பது?’’
சொத்துக்கு உரிமையாளர் விரும்பியபடி பிரிக்கலாம். அவருடைய விருப்பத்தினை அவர் உயில் எழுதிவைத்து தெரிவித்திருக்க வேண்டும்.’’
உயிலா..?’’
இருக்கும் போதே, கொடுக்க வேண்டும் என்று விரும்பினால், ஓரளவு சொத்துகளையும் பணத்தினையும் பிரித்துக்கொடுக்கலாம். வாரிசுதாரர்களுக்குக் கொடுக்கும் பணத்திற்கு , கொடுப்பவர் வாங்குபவர் இருவருக்குமே வரி கிடையாது.
இருக்கும்போது முடியாது, அல்லது வேண்டாம் என்று நினைத்தால், தங்கள் காலத்துக்குப் பின் எடுத்துக்கொள்ளட்டும் என்று திட்டமிட்டால், யார் யாருக்கு எவ்வளவு என்பதைத் தெளிவாகவே எழுதிவைத்துவிடலாம். சம்பந்தப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இப்படி ஒருவர் எழுதி கையெழுத்துப் போட்டு வைப்பதுதான் உயில்.’’
உயில் எப்படி, எதில் எழுதுவது?’’
உயில் என்பதை சாதாரண பேப்பரில் எழுதினால்கூட போதும். அதனை பதிவு செய்ய வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. ஆனாலும் உயிலுக்கு என்று சில அடைப்படைத் தேவைகள் இருக்கின்றன. ஒருவர் தன்னுடைய சொத்துக்களுக்குத்தான் உயில் எழுத வேண்டும் (அட இது நல்லா இருக்கே!) உதாரணத்திற்கு, மனைவி பெயரில் இருப்பதற்கு , மனைவிதான் உயில் எழுதமுடியும்.
எழுதியவர், சுயநினைவுடனும், எவர் தூண்டுதல் இன்றியும், உடல் நலமாகயிருக்கையிலும் எழுதியதாக குறிப்பிட்டு, கையெழுத்திட வேண்டும். அவர் அப்படி கையெழுத்துப் போடும்போது, இன்னும் இருவர் சாட்சிக் கையெழுத்துகள் போடவேண்டும். சாட்சிக் கையெழுத்துப் போடுபவர்கள், அந்த உயில் மூலம் பலன் பெறுபவர்களாக இருக்கக் கூடாது. வேறு நபர்களாகத்தான் இருக்க வேண்டும்.
மனைவி பிள்ளைகளுக்குத்தான் எழுத வேண்டும் என்பதில்லை. மற்றவர்களுக்கும் ஏன் தர்மத்துக்கும் கூட சொத்துக்களை எழுதலாம். அதே உயிலில், எவர் அந்த உயிலினை நடைமுறைப்படுத்த வேண்டும் ( எக்ஸிகூட்டர்) என்றும் குறிப்பிடலாம். அவர் வக்கீலாகவோ அல்லது வேறு எவருமாகவோ இருக்கலாம். அப்படி எவரையும் நியமிக்காமலும் விடலாம்.
எழுதிய உயிலைப் பற்றி எவருக்கும் தெரிவிக்காமலே தானே வைத்திருக்கலாம். அல்லது உயிலை ஒரு சொத்துக்கள் பதிவு செய்யும் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் சிறிய கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம் ( ஸ்டாம்ப் டூட்டி அளவு அதிகமில்லை). பதிவு செய்வது மட்டுமில்லை. தேவையானால் அதனை அதே அலுவலகத்தில் டிப்பாசிட்டும் செய்யலாம்.’’
உயில் எழுதி சில வருடங்கள் ஆகிவிட்டது. அதில் மாற்றங்கள் செய்ய நினைத்தால் செய்ய முடியுமா?’’
தாராளமாக. எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிய உயிலினை மாற்றலாம். அடுத்த நாளே கூட மாற்றலாம். எது கடைசியாக எழுதப்பட்டதோ அதுதான் செல்லும். ஆகவே உயிலில் தேதி மிகமிக முக்கியம்.’’
உயில் இருந்தால் போதுமில்லையா? உரியவர்கள் அதன்படி பிரித்துக்கொண்டு விடலாமில்லையா?’’
உயிலினை அவருடைய இறப்புக்குப் பிறகு சம்மந்தபட்டவர், நீதிமன்றத்தில் ப்ரோபேட் (Probate) செய்ய வேண்டும்.”
உயிலுக்கு மாற்று ஏதும் இருக்கிறதா?’’
உயிலுக்குப் பதில்ஃபேமிலி அரேஞ்மெண்ட்ஆகவும் செய்துகொள்ளலாம். சொத்தினை கொடுப்பவர் உட்பட, சம்பந்தப்பட்ட உறவினர்கள் எல்லோரும் சேர்ந்து, எப்படிப் பிரித்துக்கொள்வது என்பதனை எழுதி கையெழுத்துப் போட்டு வைத்துக்கொள்ளலாம். அது செல்லும்’’
உயிலும் இல்லை. வேறு வழிமுறைகளையும் செய்துகொள்ளவில்லை. என்ன ஆகும்?’’
உயில் இல்லாவிட்டால், அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தின்படி பிரிவினை செய்யப்படும். ‘இந்து சக்சஷன் ஆக்ட்படி, ‘ஃபர்ஸ்ட் கிளாஸ்’, ‘செகெண்ட் கிளாஸ்என்பது போல உரிமை அடிப்படையில் வாரிசுகள் பிரிக்கப்படுகிறார்கள். மனைவி, மகன், மகள்களுக்குத்தான் முதல் உரிமை. மகன் தந்தைக்கு முன்பாவே இறந்துவிட்டிருந்தால், அவனுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு அந்தப் பங்கு வரும். அவர்கள் யாரும் இல்லையென்றால்தான் அடுத்தகட்ட வாரிசுகள். அதில் அப்பா, சகோதரர்கள் வருகிறார்கள்.
மொத்தத்தில்?’’
எல்லாவற்றுக்கும் நியமனம் செய்துவிட வேண்டியது. உயில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டியது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சூழ்நிலைக்கு ஏற்றாற் போல பழைய உயிலினை கிழித்தெறிந்துவிட்டு, புதியதாக ஒன்று எழுதி வைத்துக்கொள்ள வேண்டியது.’’.

Related

உபயோகமான தகவல்கள் 2140795637912359781

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item