சுகபிரசவம் ஆகும் சில வழிகள் !

கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள் உண்டு. அவற்றை 7ஆம் மாதத்தில் இருந்து செய்யலாம்.ஆனால் கர்ப்பிணிகள் ஆ...

  • கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள் உண்டு. அவற்றை 7ஆம் மாதத்தில் இருந்து செய்யலாம்.ஆனால் கர்ப்பிணிகள் ஆசனப் பயிற்சி செய்துதான் சுகப்பிரசவம்ஆகவேண்டியதில்லை
  • கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு.
  • முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும். 
  • ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் போது கரு குழந்தையாக உருவாவதில் சிக்கல் ஏற்படும்.   அதன் பிறகும் மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும்.
  • மல்லாந்துபடுத்தால் குழந்தைக்கு குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும்.அதேப்போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த பக்கத்திற்கு அப்படியேத் திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும்.இப்போதெல்லாம் இந்த பழக்கத்தை நிறைய கர்ப்பிணிகள் கடைபிடிப்பதில்லை.அதனால்தான் குழந்தை தலை திரும்புவதில் பிரச்சினை ஏற்படுகிறது. தலை திரும்பாமல் இருந்தால் சிசேரியன் மூலமாகத்தான் பிரசவமாகும்.மேலும், எல்லோருமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலேசுகப்பிரசவமாகும். 
  • வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால்எல்லோருக்கும் சுகப்பிரவமாகும் வாய்ப்பு உள்ளது. அதேப்போல கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும்
  • முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது. அதன் பிறகும் எளிதான
பயிற்சிகளை செய்யலாம்.ஆனால் கர்ப்பம் தரித்த பிறகு புதிதாக யோகாசனம் செய்யவேக் கூடாது.
  • சுகப்பிரசவம் ஆவதற்கான ஆசனத்தையும் 7ஆம் மாதத்தில் இருந்து செய்யத் துவங்கலாம். ஆனால், சுகப்பிரசவம் ஆவதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை.
  • நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் வேலைகளை செய்து கொண்டு வந்தீர்களானால். ஒரு வேளை எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சிகள் தேவைப்படும்.

  • மேலும், வீட்டில் குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளான வீட்டை
பெருக்குதல், துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும் போது வயிறு சுருங்கி விரியும் தன்மையை பெறுகிறது.
 ------------------------------------------------------------------------------------------------------------------------
 தாயாக போகும் உங்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள். தைரியமாக பிரசவத்தை எதிர்நோக்கி மகிழ்ச்சியாக இருங்கள்.

இது 8வது மாதமென்பதால் ரொம்ப கடினமான வேலைகளை செய்யாமல், மிதமாக முடித்துக் கொள்ளுங்கள்.

இந்த நேரத்தில் சுக பிரசவமாதற்காகவும் இடுப்பு எலும்பு வலுவாக இருப்பதற்காகவும் உளுத்தம் பருப்பை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். உளுந்து வடை, உளுத்தங்களி, உளுத்தங்கஞ்சி போன்றவைகளை செய்து சாப்பிடுங்கள்.

வாரத்திற்கு இருமுறை வெந்தயக்களி காலையில் வெறும் வயிற்றில் முதலில் சாப்பிட்டு விட்டு பிறகு (1 மணி நேரம் கழித்து) வழக்கம் போல் நீங்கள் சாப்பிடும் உணவை சாப்பிடுங்கள். வெந்தயக்களி சுகபிரசவத்திற்கு வழி வகுக்கும்.

தினமும் இரவில் படுக்கும் முன் வெந்நீரை இடுப்பு, வயிறு, கால்களுக்கு ஊற்றிக் கொண்டால், நன்கு உறக்கம் வரும்.

வாரம் இருமுறை சீரக கஷாயம் இரவில் படுக்கும் முன் குடிக்கவும். 2 தேக்கரண்டி சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து, 2 தம்ளர் தண்ணீர் ஊற்றி, 1 தம்ளராக வற்றும் வரை கொதிக்க விடவும். அதை வடிக்கட்டி, எழுமிச்சையளவு பனைவெல்லம் (கருப்பட்டி) 2 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து ஆற்றிக் குடிக்கவும்.

அதுவே 9 மாதமான பின் வயிறு, இடுப்பு வலிப்பது போலிருந்தால், சீரகத்திற்கு பதில் சோம்பை வறுத்து, கஷாயம் போட்டு குடிக்கவும்.

கால், கை வீங்குவது போலிருந்தால், பார்லி வாட்டர் போட்டு வைத்துக் கொண்டு, தாகமெடுக்கும் போதெல்லாம் தண்ணீருக்குப் பதிலாக பார்லி வாட்டரில் உப்பும் சர்க்கரையும் சேர்த்துக் குடிக்கவும்.

தினமும் குளிப்பற்கு 1/2 மணி நேரம் முன்பு தேங்காய் எண்ணெயையோ, நல்லெண்ணயையோ வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் நன்கு தடவி, ஊற விட்டு, பின் குளிக்கவும்.

உடலுக்கு உஷ்ணம் கொடுக்கும் எந்த உணவையும் சாப்பிடாதீர்கள், மிகுந்த குளிர்ச்சியான உணவுப்பொருட்களையும் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

திரும்பி படுக்க நினைத்தால், அப்படியே திரும்பி படுக்காதீர்கள், எழுந்து உட்கார்ந்து, மறுபக்கம் திரும்பி, பின் படுங்கள். இதை செய்வதற்கு மிகவும் கடினமாகத் தானிருக்கும், ஆனால் சுகப்பிரசவத்திற்கு இது மிக மிக மிக மிக முக்கியம். கவனம்.

மேலே அனைத்து உணவு குறிப்புகளுக்கும் செய்முறை என்னுடய குறிப்புகளில் உள்ளன. பார்க்கவும்.

உங்களின் சுகப்பிரசத்திற்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------

நீங்கள் இந்த நேரத்தில் அதிலும் எட்டு மாசத்தில் உணவுப் பழக்கங்களை புதியதாக எதுவும் சேர்க்கவோ மாற்றவோ வேண்டாம் என்றே கருதுகின்றேன்.

வழக்கம் போல் சேர்க்கும் காய்கறி பழங்கள்,தயிர்,கீரைவகைகள் என்று இவைகளை சற்று அதிகமான எடுத்துக் கொள்ளவும் ஏன்னென்றால் அவைகளில் நார்சத்து அதிகமாக இருப்ப்தால் கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் வராமல் சுகப்பிரசவத்திற்க்கு உதவியாக இருக்கும்.

பப்பாளி பழம் கூட சாப்பிடலாம் (என்று எனது அத்தை கூறுவார்கள், அது கண்ணிலே படக்கூடாது என்று அம்மா கூறுவார்கள், இவர்கள் இருவருக்கும் இடையில் நான் மாட்டிக் கொண்டு பட்ட அன்புத் தொல்லையில் இதுவும் ஒன்று, ஆனால் இருவருக்கும் தெரியாமல் கணவருக்கு மட்டும் தெரிவித்துவிட்டு ஒரு சில துண்டுகளை நான் சாப்பிட்டிருக்கேன்).

நீங்க மோர், ஜூஸ், சூப், கஞ்சி, போன்ற நீராகாரம் அதிகம் எடுப்பது நல்லது, இவைகள் உணவிலுள்ள நார்சத்தை எளிதில் ஜீரணமாக்கும்,

மேலும் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.
பிரசவம் என்பது சுகமான விசயம் ஆகவே தேவையில்லாததையெல்லாம் நினைத்து அதை கஷ்டப் படுத்த வேண்டாம்

மற்றபடி மருத்துவர் பரிந்துரைக்கும் சிறிய உடற்பயிற்ச்சிகளை உங்களால் முடிந்தவரையில் செய்யலாம். தினமும் உங்க கணவரின் துணையுடன் பாதுகாப்பாக கொஞ்ச நேரம் நடக்கலாம்.

உங்க இருவருக்கும் இந்த நேரத்தில் செக்ஸ்ஸில் நாட்டமிருந்தாலும் தாராளமாக ஈடுபடலாம் குழந்தைக்கு ஒன்றுமாகாது.

மருத்துவர் வேறு ஏதாவது காரணங்களுக்காக உங்களிடன் பிரித்தியேகமாக வேண்டாம் என்று கூறினாலொழிய நீங்களாக குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும் என்று பயந்து அதை நிறுத்த வேண்டாம். சுகப் பிரசவத்துக்கு இது கூட ஒரு சிறந்த குறிப்பு என்று தான் கூறுவேன்.

எல்லாவற்றையும் விட சுகப்பிரசவத்திற்க்கு தாயின் மனஅமைதி மிக மிக முக்கியம். ஆகவே நீங்களே கூறியிருப்பதுப் போல் சுகப்பிரசவம் ஆவதற்க்கு எதை பற்றியும் கவலைப்படாம பிரசவ நாளை சந்தோசமுடன் வரவேற்க்க ஆயத்தமாக இருக்கவும் சரியா.

------------------------------------------------------------------------------------------------------------------------
 ஹாஸ்பிடல் செல்லும் முன்  மூச்சு முட்ட சுக்கு பால் குடிக்கவும்.
 -----------------------------------------------------------------------------------------------------------------------

இயற்கை வழியில் இனிய சுகப்பிரசவம்


நம் சமூகத்தைப் பொருத்தவரை, சுகப்பிரசவம் என்பது, கூடங்குளத்தில் மின்சாரம் தயாரிப்பதைப் போல, செயற்கரிய ஒரு செயல் ஆகிவிட்டது. “சுகப்பிரசவம் என்பது கருவுற்ற அனைவருக்குமானது அல்ல; அது ஆசீர்வதிக்கப்பட்ட வர்களுக்கே அமையும்.” நமது ஆங்கில மகப்பேறு மருத்துவமுறைகளும், மகப்பேறு மருத்துவர்களும் அப்படித்தான் நம்மை நம்ப வைத்திருக்கின்றனர்.

ஆங்கில மருத்துவ முறையின்படி, ஒரு பெண் கருவுற்றதற்கான அறிகுறிகளை உணர்ந்த வுடன் என்ன செய்ய வேண்டும்? மருந்து கடைகளில் விற்கும் சுய பரிசோதனைக் கருவியை வாங்கி சோதிக்க வேண்டும். இரண்டு சிவப்புக் கோடுகளை அது காட்டி விட்டால், கருவுற்றிருப்பது உறுதி. உடனடியாக ஒரு ‘கைராசியான’ மகப்பேறு மருத்து வரை அணுக வேண்டும். ஸ்கேனிங் என்ற பெயரில் சில நிமிட ரணகளத்திற்குப் பிறகு கருவுற்றிருப்பதை அதிகாரபூர்வமாக அவர் உறுதி செய்வார்.
அவ்வளவுதான். இனி அந்த கர்ப்பிணி அன்றாடம் எத்தனை மணிக்கு எழ வேண்டும்? எப்படி பல் துலக்க வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? எப்படி நடக்க வேண்டும்? குனியலாமா, கூடாதா? வாந்தி வந்தால் என்ன மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்? மயக்கம் வந்தால் என்ன ஊசி போட வேண்டும்? இப்படி அனைத்தையும் இனி அந்த மருத்துவர்தான் முடிவு செய்வார். ஐந்து மாதங்கள் வரை, வாராவாரம் மருத்துவரைச் சந்தித்து ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும். ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.

இப்படியாக, முப்பது முப்பத்தி ரெண்டு வாரங்கள் கடந்துவிட்ட பிறகு, தேதி குறித்துக் கொடுப்பார் கள். தேதிக்கு முன்னதாகவே அந்த மருத்துவமனையில் சேர்ந்துவிட வேண்டும். குறிப்பிட்ட நாளில் பிரசவ வலி வருகிறதா என பார்ப்பார்கள்.வரவில்லை என்றால், வலி வருவ தற்கான ஊசியைப் போடு வார்கள். மாறாக, குறிப் பிட்ட தேதிக்கு முன்னதாகவே பிரசவ வலி வந்து விட்டால், வலி நிற்பதற்கான ஊசியைப் போடு வார்கள். இப்படி யாக, மருத்துவரின் அல்லது பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு தக்கபடி, குழந்தை பிறந்தாக வேண்டும். இல்லாவிட்டால், ‘சிசேரி யன்’ எனும் அறுவை சிகிச்சைப் பிரசவம் தான். ஆங்கில மருத்துவ உலகில், ‘கேன் ஸர்’ என்ற வார்த்தைக்கு அடுத்தபடியாக அதிகம் உச்சரிக்கப் பட்டது ‘சிசேரியன்’ எனும் வார்த்தையாகத்தான் இருக்கும்.

சிசேரியன் செய்வதற்கு முன்ன தாக, இந்த அறுவை சிகிச்சையால், தாய்க்கோ, குழந்தைக்கோ எது நேர்ந்தாலும், தொடர்புடைய மருத்துவரோ, மருத்துவ மனையோ, அல்லது வேறு யாருமோ காரணம் அல்லர் என கையொப்பம் வாங் கிக்கொள்வார்கள். அந்த அளவிற்கு தங்களது மருத்துவ முறையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை. இப்ப டிப்பட்ட சிசேரியனால், வாழ்க்கை முழுக்க தாயும், சேயும் அனுபவிக் கப்போகும் இன்னல்கள் குறித்த எந்த தகவலும் அந்த அறிக்கையில் இருக்காது.

இவை எல்லாவற்றையும் தாண்டி, ஆசீர்வதிக்கப்பட்ட கர்ப் பிணிக்கு மருத்துவமனையில் சுகப் பிரசவம் நடந்துவிட்டால், அது உலக அதிசயங்களில் ஒன்றாக கொண்டாடப்பட வேண்டியது. ஆக, அறுவை சிகிச்சை பிரசவமோ அல்லது சுகப்பிரசவமோ, மருத்து வச் செலவு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்ச ரூபாய் வரை வந்துவிடும். இப்படியாக, மகப்பேறு என்பதே அபாயகரமான ஒன்றாக, சுகப்பிரசவம் என்பதே அரிதான ஒன்றாக, மருத்துவப் பரிசோத னைகள் என்பவை அத்தியாவசிய மான ஒன்றாக, ஆங்கில மருத்துவ முறை நம் புத்தியில் உறைய வைத் திருக்கிறது.

இவை அனைத்திற்கும் மாறாக, மகப்பேறு என்பதை ஓர் இனிய அனுபவமாக, நிச்சயத்தன்மையுடன் கூடிய சுகப்பிரசவத்தை சாத்தியப் படுத்துகிறது, இயற்கையோடு இயைந்த, மரபு வழி மருத்துவம். இந்த முறையில், ஊசியால் குத்து வது அரிது. நாடித் துடிப்பின் வாயி லாகவே நோயின் அல்லது தொந் தரவின் தன்மையை அறிந்து, உடம் பில் உள்ள குறிப்பிட்ட சில புள்ளி களில் தொடுவதன் மூலமாகவே குணப்படுத் தக்கூடியது இதுவே தொடு சிகிச்சை எனப்படுகிறது. ‘உணவே மருந்து; உடலே மருத்து வர்’ என்பதே இதன் அடிநாதம். தமிழகத்தில் தொடு சிகிச்சை மருத்துவத்தை திரு. ஏங்கெல்ஸ் ராஜா, திரு. போஸ் முகமது மீரான், திரு. மகி ராமலிங்கம், திரு. மாவீரன் போன்றவர்கள் தற்போது வெற்றி கரமாகச் செய்து வருகின்றனர்.

ஏற்கெனவே, இந்த தொடு சிகிச்சை முறையின் அடிப்படையை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன் என்ற முறையில், எங்களுக்கான மகப்பேறு மருத்துவத்தையும் தொடு சிகிச்சை முறையிலேயே பார்க் கலாம் என நானும் என் மனைவி சவிதாவும் முடிவு செய்தோம். அதன் படி, திரு. ஏங்கெல்ஸ் ராஜாவிடம் தொடர்ந்து தொடு சிகிச்சை எடுத்துக் கொண்டோம். ஃபோலிக் ஆசிட் உள்ளிட்ட எந்தவிதமான மருந்து, மாத்திரையையோ, ஊசியை யோ, ஸ்கேன் பரிசோதனையையோ எடுத்துக் கொள்ளவில்லை. தொடு சிகிச்சையாளரின் ஆலோசனைப் படி, அன்றாட உணவு முறையில் மட்டும் சில மாற்றங்களைச் செய்து கொண்டோம்.

பால், தயிர், தேநீர் போன்ற வற்றை முற்றிலும் தவிர்த்தோம். பழங்கள், மீன் உணவுகள் போன்ற வற்றைக் கூடுதலாக எடுத்துக் கொண்டோம். பசித்தால் மட்டுமே உண்ண வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தோம். ஐந்து மாதங்கள் வரை ‘பொட்டு போல’ போய்விட்டு, ‘பொட்டு போல’ வரவேண்டும் என்கிற ஆங்கில மருத்துவ அச்சுறுத்தல் எதுவும் இல்லை. எப்போதும் போல, இயல் பாக நடக்கலாம். பேருந்துக ளில், ரயிலில் பயணம் செய்யலாம். ‘ஆசைப்பட்டால், கடற்கரைக்குச் சென்று குதிரைச் சவாரிகூட செய் யலாம்’ என்றார் ஏங்கெல்ஸ் ராஜா. இப்படியாக முதல் ஐந்து மாதங்கள் வெகு இயல்பாகக் கடந்தன.

எல்லாம் சரி. தொடு சிகிச்சை முறையில் மகப்பேறு மருத்துவம் பார்ப்பதற்கு எதிர்ப்பு வரவில் லையா? எதிர்ப்பு மட்டுமல்ல, பலர் நேரடியாகவே எதிர்மறையாகப் பேசி பயமுறுத்தவும் செய்தார்கள். குடும்பத்தினர் மட்டுமல்லாமல், நண்பர்கள் சிலர், அலுவலகத் தோழர்கள் என பலரும் பலவித மான கருத்துக்களைக் கூறி, ஆங்கில மருத்துவத்தின் பக்கம் போகச் சொன்னார்கள். “கருவிப் பரி சோதனை செய்யாமல் இருந்தால், தாய்க்கு சர்க்கரை நோய் வருவதைக் கண்டறிய முடியாது; குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கு வதை கவனிக்க இயலாது; குழந்தை ஊனத்துடன் பிறக்கும்” என்றெல் லாம் நேரடியாகவே பேசி அச்சு றுத்தினார்கள். இவை அனைத் திற்கும் என் மனைவி சொன்ன ஒரே பதில், “விலங்குகள் எவையும் மகப்பேறுக்காக மருத்துவமனைக் குச் செல்வதில்லை. இயல்பாகவே, இயற்கையின் விதிகளின்படியே கருவுற்று குட்டிகளை ஈனுகின்றன. அப்படி இருக்கையில் மனிதன் மட்டும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்; பரிசோதனை களைச் செய்ய வேண்டும் என்ப தெல்லாம் இயற்கைக்கு முரணா னது. நமது வாழ்க்கை முறையும், ஆங்கில மருத்துவ மோகமும் அத்த கைய நிர்பந்தத்தை நமக்கு ஏற்படுத் திவிட்டன. இயற்கையின் விதி களின் படியான பிரசவத்தை மரபு வழி மருத்துவம் கண்டிப்பாக சாத்தி யப்படுத்தும்”.

அந்த நாள் வந்தது. மனைவிக்கு பிரசவ வலி வந்துவிட்டது என சென்னையிலிருந்த எனக்குத் தகவல் வந்தது. மயிலாடுதுறையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்ளலாம்” என்று சொல்லி விட்டார் எங்கெல்ஸ். உதவிக்கு வேண்டுமானால், யாராவது செவி லியரை உடன் வைத்துக் கொள் ளுங்கள் என்றார் அவர். அதன்படி, ஈழத்தமிழரும், மயிலாடுதுறையில் பணிபுரியும் மரபுவழிச் செவிலியரு மான நளாயினி என்பவரை உடன் தங்க வைத்திருந்தோம்.

மனைவிக்கு பிரசவ வலி தொடங்கிய செய்தி அறிந்ததில் இருந்தே நான் பதற்றமாயிருந்தேன். இன்னும் சில மணி நேரங்களில் என் மகனையோ, மகளையோ பார்க்கப் போகிறேன் என்ற ஆசை ஒரு புறம்; இயற்கை முறை யிலான இந்தப் பிரசவம் சரியாக நடைபெற வேண்டுமே என்கிற எதிர்பார்ப்பு இன்னொருபுறம். இதில் ஏதாவது தவறு நடந்து, தாய்க்கோ, குழந் தைக்கோ சிக்கலாகிவிட்டால், உடனடியாக வேறு ஏற்பாடுகளின் படி காப்பாற்றிவிட முடியும் என்றா லும், அனைத்து தரப்பின் குற்றச் சாட்டுகளையும் சுமக்க வேண்டுமே; நாம் முன்னெடுக்கும் மாற்று முயற்சிகள் அனைத்துமே தோல் விக்குரியவை என்ற உதாரணத்தை அது ஏற்படுத்தி விடுமே என் றெல்லாம் மனக்குழப்பம் சூழ்ந்து கொண்டது.

நான் வீட்டிற்குச் சென்றபோது மாலை 6 மணி. பிரசவ வலியால் என் மனைவி அழுது கொண்டி ருந்தார். செவிலியர் நளாயினியிடம் தொலைபேசி மூலம் ஏங்கெல்ஸ் சில குறிப்புகளைச் சொல்லியி ருந்தார். “ஆங்கில மருத்துவ முறை யின்படியான எந்த முயற்சியையும் மேற்கொள்ளக் கூடாது; குறிப்பாக, கர்ப்பப்பை வாசலைக் கிழித்து விடுவது, முதலில் தலை வருகிறதா, கால் வருகிறதா என தொட்டுப் பார்ப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது. குழந்தை தானாக பிறக்கும் வரை காத்திருக்க வேண்டும்” என்ப வையே அவை.
இரவெல்லாம் விழித்திருந்தோம். அரைமணி நேரத்திற்கு ஒரு முறை ஏங்கெல்ஸிடம் தொலை பேசியில் பேசியபடி இருந்தோம். வலியின் தன்மையை வைத்து, இப்போது தண்ணீர் குடிக்கலாம்; இப்போது சற்று தொலைவு நடக் கலாம் என்பது போன்ற குறிப்பு களை அவர் சொன்னபடி இருந் தார். இரவு சரியாக 12.40 மணிக்கு நீர்க்குடம் உடைந்தது. தொடர்ந்து ஏங்கெல்ஸிடம் பேசியபடி இருந் தோம்.

பொழுது விடிந்தது. காலை 5 மணி. தொடந்து பிரசவ வலி இருந் தது; ஆனால், குழந்தை மட்டும் வெளியில் வரவில்லை. வீட்டில் இருந்தவர்கள் கலவர முகத்துடன் அறைக்குள் எட்டி பார்த்தபடி இருந்தார்கள். செவிலியர் நளாயி னியும் பதற்றத்தில் இருந்தார். இப் போது ஏங்கெல்ஸிற் குப் பதிலாக, அவரது மனைவி பிரியா தொலை பேசி தொடர்பில் இருந்தார். மணி 6, 7, 8 என கடிகார முட்கள் நகர்ந்துகொண்டே இருந்தன.

சரியாக காலை 8.46 மணி. ரத்தமும், தண்ணீரும் கசிய, குழந்தை வெளியே வந்தது. மழையில் நனைந்து தலைதுவட்டாத புறா வைப் போலிருந்தது. “ஆண் குழந்தை பிறந்திருக்கு சார்” என்ற படி நளாயினி குழந்தையை என் கைகளில் கொடுத்தார். நடுங்கிய கைகளில் குழந்தையை வாங்கி முத்த மிட்டேன். என் மனைவி கண்ணீர் மல்க சிரித்துக் கொண்டிருந்தார்.

இப்போது ஏங்கெல்ஸ் தொடர் பில் வந்தார். “குழந்தை அழுகிறதா? அழாவிட்டால் அழவையுங்கள்” என்றவர், “15 நிமிடங்களுக்கு தொப் புள் கொடியை துண்டிக்கக் கூடாது. 15 நிமிடங்களுக்குப் பிறகு, குழந்தை யின் நெற்றியைத் தொடும் நீளத் திற்கு இடைவெளிவிட்டு துண்டிக்க வேண்டும்” என்றார்.

ஆங்கில மருத்துவ முறையில், குழந்தை பிறந்தவுடனேயே தொப் புள் கொடியை துண்டித்து விடு வார்கள். அதுவும் இரண்டு அல் லது மூன்று அங்குல அளவில் வைத்து துண்டிப்பார்கள். மரபு வழி மருத்துவத்தில் 15 நிமிடங்கள் வரை துண்டிக்காமல் வைத்திருப்பதன் மூலம் சில சத்துக்கள் குழந்தைக்குச் செல்வதை உறுதி செய்ய இயலும். மேலும், எவ்வளவு நீளம் விட்டு துண்டிக்கிறோமோ, அந்த அள விற்கு குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும் என்றும் சொல்லப் படுகிறது. ஏங்கெல்ஸ் சொன்னது போல, தொப்புள் கொடியை துண்டித்து நூல் கொண்டு முடிச் சிட்டு, கட்டிலில் கிடத்தினார்கள்.

மனமார்ந்த மகிழ்ச்சியுடன் மதியம் நேரில் வந்து குழந்தையைப் பார்த்தார் ஏங்கெல்ஸ். குழந்தை பெற்ற களைப்புகூட தெரியாத என் மனைவி, கூடத்திற்கு வந்து அவரை வரவேற்றார். ஏங்கெல்ஸிடம் “நீங்கள் முன்பே வந்திருந்தால், நாங்கள் இன்னும் தைரியமாக இருந்திருப்போம்” என்றேன். “எந்த வொரு ஆகச் சிறந்த மருத்து வருக் காகவும் குழந்தை காத்திருக்காது; அதேபோல, அவர் வந்தவுடன் குழந்தை பிறந்துவிடாது” என்றார்.

இப்படித்தான் குழந்தை பிறந்தது என்பதைச் சொல்லும் போது பலரும் அதிர்ச்சி அடைகி றார்கள். ஆச்சரியப் படுகிறார்கள். “நீங்கள் செய்திருப்பது மாபெரும் சாதனை” என்கிறார்கள். மருத்துவப் புரட்சி என்கிறார்கள். கடவுளின் கருணை என்கிறார்கள்.

இதில் ஆச்சரியப்படுவதற்கோ, என்னையோ, என் மனைவியையோ பாராட்டுவதற்கோ எதுவுமில்லை. காரணம், இதில் எங்களது சாதனை எதுவும் இல்லை. இது இயற்கையின் சாதனை. இயற்கையின் இயல்பு. இயற்கையின் வழியில் நடக்கும் எவருக்கும் இனிய சுகப்பிரசவம் சாத்தியமே!
--------------------------------------------------------------------------------------------------------------------------











Related

தாய் சேய் நலம்! 7877620424283956348

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item