மாதவிடாய் சீராக செம்பருத்திப் பூ--மருத்துவ டிப்ஸ்

மூளைக்கும், இதயத்திற்கும் இதமானது செம்பரத்தை பூ. இதயம் சம்மந்தமான கோளாறுகளை தீர்க்க வல்லது. தமிழ் நாட்டில் வீடு தோறும் காணப்படும் செடி. கண...

மூளைக்கும், இதயத்திற்கும் இதமானது செம்பரத்தை பூ. இதயம் சம்மந்தமான கோளாறுகளை தீர்க்க வல்லது. தமிழ் நாட்டில் வீடு தோறும் காணப்படும் செடி. கண் கவரும் வண்ணமும், அழகும் கொண்ட செம்பரத்தை பூக்களுக்காகவே வளர்க்கப்படும். இறைவனுக்கு அரிச்சிக்கப்படும் பூக்களில் ஒன்று செம்பரத்தம்.
இதர மொழிப் பெயர்கள் – சம்ஸ்கிருதம், ஜபா, ஜபகுசுமம், ருத்ர புஷ்பம், ஹிந்தி – ஜாஸீம், தெலுங்கு – மந்தாரா, கன்னடம் – தேசவலா, மலையாளம் – செம்பருத்தி,
தாவர விவரம்
சீனாவில் தோன்றியது செம்பரத்தை இப்பொழுது இந்தியாவில் பரவலாக வளர்க்கப்படுகிறது. பலவகைகள் – ஒற்றை, அடுக்கு செம்பரத்தம், சிகப்பு, மஞ்சள், வெள்ளை போன்ற வண்ணபூக்களுடன் – பயிரிடப்படுகின்றன. செடி 5 அடி முதல் 10 அடி உயரம் வளரும். இலைகள் பசுமையாக இரு புறங்களிலும் வெட்டப்பட்ட தோற்றத்துடன் இருக்கும். நீண்டு இருக்கும் பூக்களில், மகரந்தக் காம்பு, பூக்களின் வெளிவரை நீண்டு இருக்கும்.
எல்லா நிலங்களில் வளர்ந்தாலும், நன்கு உரமிட்ட, நீர் பாசனமுள்ள நிலங்களில் செம்பரத்தை சிறப்பாக வளரும். அது செடித்துண்டுகளை நட்டு பயிரிடப்படுகிறது.
பயன்படும் பாகங்கள்
இலை, பூ, வேர்.
பொது குணங்கள்
மலமிளக்கி, ஆண்மை பெருக்கி, குளிர்ச்சியுண்டாக்கும்.
செம்பரத்தை பூக்களில் ஈரப்பசை 89.8% நைட்ரஜன் 0.064% கொழுப்பு – 0.36%, நார் 1.56%, கால்சியம் 4.04%, பாஸ்பரஸ் 26.68%, மற்றும் இரும்பு 1.69 மி.கி (100 கிராமில்), தவிர தியானமன், ரிபோஃப்ளாவின் நியாசின் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் இவைகளும் உள்ளன. இவை பி காம்ளெக்ஸ் வைட்டமின்களாகும்.
பயன்கள்
இலைகளைவிட பூக்கள் நல்ல பலன்களை அளிக்கின்றன. மூளைக்கும் இதயத்திற்கு நல்ல ‘டானிக்’ செம்பரத்தை நான்கைந்து இலைகளை பறித்து கால் லிட்டர் தண்ணீரில் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்து குடித்துவர இதயம் வலுவடையும். மான்கொம்புவின் மருந்துடன், இந்த பூவின் கஷாயத்தை குடித்து வர இதயநோய்கள் நீங்கும். பூக்களின் கஷாயத்தை ஒரு நாளுக்கு இரண்டு வேளை சாப்பாடு கலந்து பருகி வந்தால் இதயத்தின் செயல்பாடு சீராகும்.
செம்பரத்தை வேர் இருமலை – கட்டுப்படுத்தும். பெண்களின் பெரும்பாடு – மாதவிடாய் போது ஏற்படும் அதிகரத்தப் போக்கை நிறுத்தும். நெய்யில் வறுத்த செம்பரத்தை பூக்களும் மாதவிடாய் அதிக உதிரப்போக்கை நிறுத்த கொடுக்கப்படுகின்றன.
செம்பரத்தை பூ கஷாயம் ரத்தச்சோகையை குணப்படுத்தும். தினமும் 2 வேளை 48 நாட்கள் குடிக்க வேண்டும். ரத்தம் ஊறும்.
கேரளத்தில் கருத்தடை மருந்தாக செம்பரத்தை பூக்களை, எலுமிச்சம் பழச்சாறுடன் கலந்து பயன்படுத்துகின்றனர். செம்பரத்தை பூவின் கருத்தடை செயல்பாடு பற்றி எலிகளை வைத்து பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு கிலோ எடைக்கு 250 மி.கி. என்ற அளவில் கொடுக்கப்பட்ட பூக்களின் சாறு பயனளிப்பதாக தெரியவந்துள்ளது. கேப்சூல் (மாத்திரை) ரூபத்திலும் ஒரு நாளுக்கு மொத்தம் 750 மி.கி. அளவில் மூன்று வேளை 21 பெண்மணிகளுக்கு கொடுக்கப்பட்டு, ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு பெண் கூட கர்ப்பமடையவில்லை. தவிர உதிரப்போக்கு (மாதவிடாயின் போது) சீரடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. பூக்கள் அளவு செம்பரத்தை வேருக்கும், இலைகளுக்கும் கருத்தடை செயல்பாடு இல்லை. சீனாவில் இம்மரத்தின் பட்டை பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்கு மருந்தாக உபயோகிக்கிறார்கள்.
தலை முடி வளர, ஆலிவ் எண்ணையுடன், செம்பரத்தை பூவின் சாறு சம அளவில் சேர்த்து காய்ச்சிப்பட்ட எண்ணை நல்ல பலன் தரும். செம்பரத்தை பூவின் சாற்றுக்கு ஒரளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து சிறுதீயில், நீர் சுண்டும் வரை காய்ச்சி, காற்றுபுகாத குப்பியில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இதை தலையில் தடவி வர, மூளை குளிர்ச்சியடையும். முடி செழிப்பாக, கறுப்பாக வளரும், இந்த எண்ணெயில் பூவின் நிளமான காம்பையை சேர்த்துக் கொள்ளவும்.
இதன் வேருடன் ஆடாதோடை இலை சேர்த்து, தண்ணீருடன், இருமலுக்கு கொடுக்கலாம்.
பூவின் மகரந்தக் காம்பை மட்டும் எடுத்து தூள் செய்து வைத்துக் கொண்டு, தினமும் பாலுடன் இரவில் குடித்து வர, தாது பலம் பெருகும்.
மனநோய் மருந்துகளிலும் செம்பரத்தை சிறந்தது என்கிறார்கள். மூலிகை மருந்து நிபுணர்கள்.
செம்பருத்திப் பூ சர்பத்
தேவை
செம்பருத்தி இதழ்கள்- 3 கப்
சீனி- 1 கிலோ
தண்ணீர்- 3 லிட்டர்
பால்- 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் ஜுஸ்- 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
சீனியை தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். கொதிக்கும் பொழுது பாலை ஊற்றுவதால், சீனியிலுள்ள அழுக்குகள் ஓரத்தில் தங்கும். அடுப்பிலிருந்து சீனி சிரப்பை இறக்கி வடிகட்டி, எலுமிச்சம் ஜுஸ் சேர்த்து, மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கம்பிப் பதம் வரும் வரை அடுப்பில் வைக்கவும் வந்தவுடன் இறக்கி செம்பருத்தி இதழ்களை அதில் போட்டு உடனடியாக ஒரு மூடியைப் போட்டு அந்த பாத்திரத்தை மூடவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு காலையில் வடிகட்டி சுத்தமான பாட்டிலில் ஊற்றி மூடவும். இதனை பிரிட்ஜில் வைத்து உபயோகித்தால் ஏழு நாட்கள் கெடாமல் இருக்கும். அதற்கும் மேலாக நன்றாக இருக்க 5 கிராம் எஸ்.பி. பவுடரை கரைத்து வைத்துக் கொள்ளலாம்.

Related

மருத்துவ டிப்ஸ் 7328381307000928757

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item