மீன் குருமா -- சமையல் குறிப்புகள்
தேவையான பொருள் வஞ்சர மீன் - 1கிலோ வெங்காயம்- 100 கிராம் தக்காளி- 100கிராம் பச்சை மிளகாய்- 4 மல்லிப் பொடி- 4டேபிள் ஸ்பூன் மிளகாய்ப் பொட...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_4549.html
தேவையான பொருள்
வஞ்சர மீன் - 1கிலோ வெங்காயம்- 100 கிராம் தக்காளி- 100கிராம் பச்சை மிளகாய்- 4 மல்லிப் பொடி- 4டேபிள் ஸ்பூன் மிளகாய்ப் பொடி- 2ஸ்பூன் மிளகுப் பொடி- 1ஸ்பூன் சீரகப் பொடி- 2ஸ்பூன் சோம்புப் பொடி- 1/4ஸ்பூன் மஞ்சள் பொடி- 1/4ஸ்பூன் தேங்காய்- 1 எண்ணெய்- 150கிராம் ஏலம்- 2 பட்டை- 2 கிராம்பு- 2 கறிவேப்பிலை- 2கொத்து எலுமிச்சைப் பழம்- பாதி உப்பு-தேவையான அளவு
செய்முறை தேங்காயை அரைத்து ஒரு டம்ளர் கெட்டிப் பாலும்,இரண்டு டம்ளர் தண்ணிர் பாலும் தனித்தனியே எடுத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை விட்டு காய்ந்ததும் கொஞ்சம் வெங்காயத்தை போட்டு சிவந்ததும் அதில் மிளகாய்ப் பொடியை போட்டு கருகுமுன் எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.மீதி எண்ணெயை ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலம் போட்டு வெடிக்கவிடவும்.பின்னர் வெங்காயம்,கறிவேப்பிலை போட்டு வதக்கி தண்ணிர் பாலை ஊற்றவும்.அதில் நறுக்கிய தக்காளி,பச்சை மிளகாய்,மசாலா பொடிகள்,மீன்,உப்பு ஆகியவற்றையும் கொட்டி கிளறி மூடி கொதிக்க விடவும். குழம்பு கொதித்த மணம் வந்ததும்,கெட்டிப் பாலை ஊற்றிக் கொதிக்க விட்டு இறக்கி எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்
Post a Comment