“அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும்”- மகாத்மா காந்தி நினைவுதினச் சிறப்புப் பகிர்வு

“அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும்”- மகாத்மா காந்தி நினைவுதினச் சிறப்புப் பகிர்வு “அ ன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்...

“அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும்”- மகாத்மா காந்தி நினைவுதினச் சிறப்புப் பகிர்வு


“அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும்” என்றவர் மகாத்மா காந்தி. அவருடைய நினைவு தினம் இன்று.

அன்பு நிறைந்த வாழ்க்கை யாருக்குக் கிடைக்கிறதோ... அதை அகிலமே கிடைத்துவிட்டதாகத்தான் அவர்கள் நினைப்பார்கள். அப்படியான வாழ்க்கைதான் காந்திக்கும் அவரது மனைவிக்கும் கிடைத்தது. அவர்கள் இருவரும், ஒருவர்மீது ஒருவர் விட்டுக்கொடுக்காமல்வைத்த அன்புதான், அவர்களை உலகமறியும் அளவுக்கு உயர்த்தியது. கஸ்தூரியின்மீது காந்திக்கிருந்த அளவற்ற அன்பால், “இனி, தினமும் அவளுக்கு நாலு எழுத்து சொல்லித் தரவேண்டும். அறியாமை நீங்கிவிட்டால், கணவனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அவள் தெரிந்துகொண்டுவிடுவாள்” என்று காந்தி சிந்தித்தார்.

காந்தியின்மீது கஸ்தூரிக்கிருந்த கண்ணியமான காதலால், “ஐயோ... இந்தப் பாழாய்ப்போனவன், என் கணவரைப் படுகுழியில் தள்ளிவிடுவானே? இதை எப்படியாவது அவரிடம் பக்குவமாகச் சொல்ல வேண்டும்” என்று தீய நண்பரிடம் சிக்கிக்கொண்ட காந்திக்காக, கஸ்தூரிபாய் ஏங்கினார். அதற்காக அவர், “இதோ பாருங்கள்... நான் சொல்கிறேன் என்று கோபித்துக்கொள்ளக்கூடாது. அந்த அயோக்கியனுடன் சேராதீர்கள். அவன், பெரிய போக்கிரி. அவன், சகவாசமே வேண்டாம்” என்று வேண்டுகோள்வைத்தார்.

அவருடைய கோரிக்கையைக் காந்தி, அப்போது ஏற்காதபோதும் நாளடைவில் உண்மையிலேயே மாறித்தான் போனார். அந்த மாற்றம், பின்னாளில் அவர்களுக்குள் அன்பை விதைத்தது. அதை உணர்த்தும் நிகழ்வாக அவர்களுடைய வாழ்வில் எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஒருமுறை வழக்கு ஒன்றில் வாதாடுவதற்காகத் தென்னாப்பிரிக்கா வரும்படி காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்குச் செல்வதற்கு முன் காந்தி... தன் மனைவியிடம், “தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும்போது உனக்கு என்ன வேண்டும், சொல்” என்று கேட்டார். அதற்கு அவர், “ஒரு நல்ல புடவையாகக் கிடைத்தால் வாங்கிக்கொண்டு வாருங்கள்” என்றார். “பைத்தியம்... இங்கே இல்லாத புடவையா அங்கே? புது ஃபேஷனா ஒரு ‘கவுன்’ வாங்கிக்கொண்டு வரட்டுமா? உனக்கு ரொம்ப அழகாக இருக்கும்” என்றார். அதைக் கேட்டதும் கஸ்தூரி பாய்க்கு சிரிப்பு வந்துவிட்டது. “எப்படியோ, நீ சிரித்துவிட்டாய்; அதுபோதும்” என்றபடியே அங்கிருந்து நடையைக் கட்டினார் காந்தி.

அவர், தன் மனைவியிடம் மட்டுமல்ல... குழந்தைகளிடம்கூட அன்பு காட்டினார். குறிப்பாக அவர்களிடம், விளையாட்டாகக்கூடப் பொய் சொல்லக்கூடாது என்று மற்றவர்களுக்கு எடுத்துச் சொன்னார். 1926-ம் ஆண்டு ஓர் இளைஞர், சபர்மதி ஆஸ்ரமத்தில் வந்து தங்கியிருந்தார். அவர், குழந்தைகளிடத்தில் நன்கு பிரபலமானார். ஒருநாள் அவர், எட்டு வயதுப் பெண் குழந்தைக்கு எலுமிச்சைப் பழம் ஒன்றைவைத்து வேடிக்கை காண்பித்துக்கொண்டிருந்தார். அதை எடுத்துக்கொள்ள அந்தக் குழந்தை நினைத்தது. ஆனால், அவரிடமிருந்து அந்தப் பழத்தை எடுக்க முடியவில்லை. மிகவும் களைப்படைந்துபோன அந்தக் குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது. ஆஸ்ரமத்தில் உள்ள ஒரு நோயாளிக்காக அந்த எலுமிச்சைப் பழம் இருந்தது. அவருக்கு இப்போது தர்மசங்கடமான நிலை. இதை அந்தக் குழந்தையிடம் கொடுத்துவிட்டால் நோயாளிக்கு என்ன செய்வது என்று எண்ணினார். உடனே, ‘‘பழத்தை நான் நதியில் வீசிவிட்டேன்’’ என்று குழந்தையிடம் பொய் சொன்னார். ஆனால், உண்மையில் அதை தன் சாமர்த்தியத்தினால் சட்டைப்பைக்குள் மறைத்துவைத்துக்கொண்டார்.

பின்னர், இருவரும் சேர்ந்தே நோயாளி தங்கியிருந்த இடத்துக்குச் சென்றனர். வழியில் அவர் கைக்குட்டையை எடுத்தபோது சட்டைப்பையில் இருந்த எலுமிச்சைப் பழமும் சேர்ந்து கீழே விழுந்துவிட்டது. அதைப் பார்த்த குழந்தை அனைத்தையும் காந்திஜியிடம் போய்ச் சொன்னது. விளையாட்டாகச் செய்த காரியம் என காந்தியடிகள் புரிந்துகொண்டாலும்... அந்த இளைஞரிடம், ‘‘நீ இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குழந்தைகளிடம் கேலியாகக்கூடப் பொய் சொல்லக்கூடாது. சிரிப்பும் குதூகலத்தோடும் ஆரம்பமாகும் இந்தச் சின்ன விஷயம், பின் வழக்கமாகவே ஆகிவிடக்கூடும்’’ என்று அறிவுரை கூறினார்.

குழந்தைகள் குறித்து மற்றவர்களுக்கு அறிவுரை கூறிய காந்தி, பொதுவான விஷயம்குறித்து தன் நண்பர்களுக்கும் செயல்மூலம் அறிவுரை கூறியிருக்கிறார். ஒருசமயம், காந்தியடிகளுடன் நேரு போன்றவர்கள் நடைப்பயணம் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற வழியில் ஒரு சிறு ஓடை குறுக்கிட்டது. அதைப் பார்த்த காந்தியடிகள், அதில் இறங்காமல் நின்றபடி பின்னே வந்தவர்களிடம், ‘‘இதைத் தாண்டிவிட முடியுமா’’ எனக் கேட்டார். அதற்கு நேருவோ, ‘‘ஓ முடியுமே’’ எனக் கூறியவாறு சற்றுப் பின்னோக்கிச் சென்று மறுபடி வேகமாய் ஓடிவந்து அதைத் தாண்டினார். காந்தியடிகள் புன்னகைத்தவாறே, ‘‘பரவாயில்லை. தாண்டிவிட்டீர்கள். ஆனாலும், ஒரு சிறு விஷயம். ஐந்து அடி அகலமுள்ள இந்த ஓடையைத் தாண்டுவதற்கு நீங்கள் 10 அடி தூரம் பின்னால் செல்ல வேண்டியது இருந்தது’’ எனச் சொல்ல... அங்கிருந்தவர்கள் அனைவரும் அதைக் கேட்டுச் சிரித்தனர்.

‘‘தன் சக மனிதனின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுபவனே சிறந்தவனாகக் கருதப்படுகிறான்’’ என்று சொன்ன மகாத்மா காந்தி, அதுபோலவே வாழ்ந்து காட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.

Related

இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! 5635704931369323297

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item