குறையும் சேமிப்பு வட்டி... கூடுதல் வருமானத்துக்கு வழி!

ந டுத்தர வர்க்கத்தினர் மலைபோல நம்பி சேமித்து வந்த திட்டங்களுக்கான வட்டியை மேலும் குறைத்திருக்கிறது மத்திய அரசு (பார்க்க தபால் அலுவலக ...

டுத்தர வர்க்கத்தினர் மலைபோல நம்பி சேமித்து வந்த திட்டங்களுக்கான வட்டியை மேலும் குறைத்திருக்கிறது மத்திய அரசு (பார்க்க தபால் அலுவலக சேமிப்புகள் அட்டவணை). இந்த வட்டி விகிதம் இன்னும் குறையலாம் என்பதே தற்போதுள்ள நிலைமை. இந்த நிலையில், இனி எதில் முதலீடு செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்கிற கேள்வி நடுத்தர வர்க்கத்தினரின் மனதில் எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கான பதில் இனி...

‘‘நாம் முதலீடு செய்யும்போது, நாம் எவ்வளவு காலத்துக்குச் செய்யப்போகிறோம், நாம் எதிர்பார்க்கும் வருமானம் எவ்வளவு, நாம் செய்யும் முதலீட்டில் ரிஸ்க்குகள் என்னென்ன, அந்த முதலீடு பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரக்கூடியதா, அந்த முதலீட்டைக் கண்காணிக்க அரசு அமைப்புகள் ஏதும் உண்டா, முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்துக்குச் செலுத்த வேண்டிய வரி, கடந்த காலத்தில் கிடைத்த வருமானம் எதிர்காலத்திலும் கிடைக்குமா என்பவற்றையெல்லாம் நிச்சயம் கவனிக்க வேண்டும்.

ஆனால், பலரும் இந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. கடந்த சில வருடங்களாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட, பாதுகாப்பான முதலீடுகளின் வட்டி குறைந்துகொண்டே வருகிறது. இனிவரும் காலத்திலும் இந்த வட்டி விகிதம் குறைவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
நம் நாடு இன்னும் 10 வருடங்களில் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு வளர்ந்த நாடுகளின் வட்டி விகிதத்தைப் பார்த்தால், 1 - 2 சதவிகிதமே கிடைக்கிறது. எனவே, நம் வட்டி விகிதம் வரும் காலங்களில் குறையவே செய்யும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. வங்கி வைப்புத் திட்டங்களுக்கும், உத்தரவாதம் அளிக்கும் திட்டங்களுக்குமான வட்டி வருமானம் குறைந்து வரும் வேளையில், இனி எதில்தான் முதலீடு செய்வது என்கிற கேள்வி எல்லோருக்குமே எழும்.

கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டு கால வரலாற்றில் மிகச் சில காலகட்டங்களில் மட்டுமே ரியல் எஸ்டேட் விலை அதிவேகமாக உயர்ந்து, வருமானம் தந்திருக்கிறது. மற்ற காலங்களில் அது குறைவான வருமானத்தையே தந்திருக்கிறது. தற்போது பல நகரங்களில் ரியல் எஸ்டேட் விலை மைனஸில் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. தவிர, நீங்கள் வீடு வைத்திருந்து, அதில் வரும் வாடகை வருமானத்துக்கு நம் வருமான வரிக்கேற்ப வரி செலுத்த வேண்டும். இன்று சொத்தின் மதிப்பில் வாடகை மூலமான வருமானம் என எடுத்துக்கொண்டால், அது 2% க்கு மேல் கிடைக்காது. அதாவது, நம்முடைய வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சம் எனில், அதன் மூலம் நமக்குக் கிடைக்கக்கூடிய வாடகை ரூ.10,000 மட்டுமே. எதிர்காலத்தில் நிலத்தின் மதிப்பு உயருமே என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான் என்றாலும், நீண்ட காலத்தில் ஒற்றை இலக்கச் சதவிகிதத்தில் மட்டுமே அது வளர்ந்திருக்கும்.

தங்கத்தில் முதலீடு செய்தாலும் எதிர்காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை நம் மக்களிடம் இருக்கிறது. ரியல் எஸ்டேட் போலவே ஒரு சில ஆண்டுகளில் தங்கத்தின் மூலம் கிடைக்கும் லாபம் அதிகமாக இருந்தாலும், நீண்ட காலத்தில் பணவீக்கத்தைவிட கொஞ்சம்தான் அதிக வருமானம் தருவதாகவே தங்கம் இருக்கிறது.
ஆனால், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டைவிட பங்குச் சந்தை முதலீடு என்பது நீண்ட காலத்தில் பணவீக்கத்தைவிட கணிசமான வருமானத்தைத் தரவல்லது. இதனால்தான் வளர்ந்த நாடுகளில் பலரும் பங்குச் சந்தை முதலீட்டை விரும்பிச் செய்கிறார்கள். அமெரிக்காவில் 80 சதவிகித்தினருக்கு மேல் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டைத் தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் பங்குச் சந்தை முதலீட்டைத் தேர்வு செய்கிறவர்கள் வெறும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே. மேலும், இதில் செய்யப்பட்டுள்ள முதலீடு ஒரு வருடத்தைக் கடந்துவிட்டால் கிடைக்கும் லாபத்துக்கு ஒரு ரூபாய்கூட வரி கட்ட வேண்டியதில்லை, இப்போதுள்ள விதிமுறைகளின்படி.

‘‘பங்குச் சந்தையா..? அதில் முதலீடு செய்தபின், சந்தை விழுந்துவிட்டால்..?’’ எனப் பலர் பயப் படுகிறார்கள். பங்குச் சந்தை எப்போதும் உயர்ந்து கொண்டே செல்லும் முதலீடு அல்ல; ஏற்ற இறக்கம் இருக்கவே செய்யும். குறைந்தபட்சம் 10 சதவிகித இறக்கத்தைக் கண்டு பதறாத முதிர்ச்சி நமக்கு வேண்டும். 2008-ல் பங்குச் சந்தை 50 சதவிகிதத்துக்கு மேல் குறைந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் விழுந்த வேகத்தில் சந்தை மீண்டு வந்தது வரலாறு. இனி சந்தை நிச்சயம் விழும். ஆனால், விழுந்த சந்தை மீண்டும் உயரும்.

‘‘எனக்குப் பங்குச் சந்தை பற்றித் தெரியாது. பங்குகளின் செயல்பாட்டினை என்னால் நேரடியாகக் கண்காணிக்க முடியாது’’ என்கிறவர்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்யலாம். நீண்ட காலத்தில் இரட்டை இலக்க வருமானம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளைத் தாராளமாகத் தேர்வு செயலாம்.

நீண்ட காலத்துக்கான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு, பேலன்ஸ்டு வகை பண்டுகள், குறைந்த ஏற்ற இறக்கம் மற்றும் குறைவான ரிஸ்க்-ல் நல்ல பலன் தரும். ஆனால், குறைந்தபட்சம் 5 வருடங்களுக்காவது நம் முதலீட்டை அதில் வைத்திருக்க வேண்டும்.

போஸ்ட் ஆபீஸ், சீனியர் சிட்டிஷன் சேவிங்ஸ், பி.பி.எஃப், செல்வமகள் திட்டம் என எல்லாமே நீண்ட கால முதலீடுகளாகும். அவற்றில் முதலீடு செய்யும்போது யாரும் காலத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அதுமாதிரி, மியூச்சுவல் ஃபண்டிலும் 15 அல்லது 20 ஆண்டுகள் முதலீட்டைப் போட்டு வைத்திருந்தால், குறைந்த வருமானம் என்கிற பேச்சுக்கே இடமிருக்காது!

Related

சேமிப்பின் சிறப்பு 8467960839053717047

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item