வீட்டிலேயே அழகாகலாம் ! ஆயுர்வேத டிப்ஸ்!!

வீட்டிலேயே அழகாகலாம் ! ஆயுர்வேத டிப்ஸ் எல்லாருக்குமே அழகாக இருக்க வேண்டும் என்று ஆசை. ஏதேதோ கிரீம்களைப் பயன்படுத்தி...

வீட்டிலேயே அழகாகலாம் ! ஆயுர்வேத டிப்ஸ்
எல்லாருக்குமே அழகாக இருக்க வேண்டும் என்று ஆசை. ஏதேதோ கிரீம்களைப் பயன்படுத்தி வந்த நிலை மாறி, இயற்கை, ஆர்கானிக் அழகுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்பு உணர்வு இப்போது வந்துவிட்டது. ஆனால், தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள் உண்மையில் இயற்கையானவைதானா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு, ஒரு பெண் என்னிடம் வந்திருந்தார். “போன வாரம் பார்லரில்‌ ஹெர்பல் பிளீச்சிங் செய்தேன். க‌ண்ணுக்குக் கீழ் சிவப்புத் திட்டுக்கள் (பேட்சஸ்) மாதிரி வந்திருக்கு. மூணு நாளாகியும் சரியாகலை” என்றார். ‘பிளீச்சிங் செய்தபோது, மூலிகை வாசனை இருந்ததா?’ என்றதற்கு, ‘லைட்டா அமோனியா நெடி அடித்தது’ என்றார்.
இன்று ஹெர்பல் என்ற பெயரைப் பயன்படுத்தி நிறைய காஸ்மெடிக்ஸ் வருகின்றன. ஹெர்பல் என்றாலே, எந்தப் பக்கவிளைவும் இருக்காது என மக்களும் நம்பி வாங்குகின்றனர். ஹெர்பல் என்ற பெயரில் வரும் கிரீம், சோப்பு, ஷாம்புகளில், 70 சதவிகிதம் வரை கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன. ரசாயனம் இல்லாத, இயற்கை முறையில் செய்யப்படும் அழகுப் பராமரிப்புக்களை வீட்டிலேயே செய்துகொள்வது நல்லது.

அழுக்கை நீக்காமல் சருமத்தை அழகுபடுத்த முடியாது. எலுமிச்சைச் சாற்றில் தண்ணீர்விட்டு, பஞ்சினால் முகத்தை நன்றாகத் துடையுங்கள். அழுக்கு பெரும்பாலும் நெற்றி, மூக்கு இடுக்குப் பகுதிகளில் அதிகம் படரும். மூலிகையைப் பயன்படுத்த விரும்புபவர்கள், மஞ்சட்டி ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து 200 மி.லி நீரை கொதிக்கவைத்து வடிகட்டுங்கள். இதைக்கொண்டு முகத்தைத் துடைக்கலாம். சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்கள் மஞ்சட்டிக்குப் பதில், நன்னாரி அல்லது வெட்டிவேரில் இதுபோல் தயாரித்து, முகத்தில் தடவி மசாஜ் செய்தால், சருமம் சுத்தமாகும்.
தோலில் பதிந்திருக்கும் அழுக்குகளையும் இறந்த செல்களையும் நீக்கும்முறை இது. எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம் பழத் தோல்களை காயவைத்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். இந்தப் பழத்தோல்களைத் தனியாகவும் அரைத்துப் பயன்படுத்தலாம். பழத்தோலுடன் சமஅளவு கிச்சலிக் கிழங்குப் பொடி சேர்த்து, ரோஸ் வாட்டர் கலந்து, பேஸ்ட் போல ஆக்க வேண்டும். இதை, முகம் முழுவதும் தடவி, ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். கருவளையம் இருப்பவர்கள், இதை மாதம் ஒரு முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
லாக்‌ஷாதி தைலம், ஏலாதி தைலம், குங்குமாதி தைலம் என ஆயுர்வேதக் கடைகளில் கிடைக்கும் மூலிகைகளைக் கலந்து காய்ச்சப்பட்ட எண்ணெயைக்கொண்டு முகத்துக்கு ஆயில் மசாஜ் செய்யவேண்டும். நல்லெண்ணெயும் நல்ல பலன் தரும். தினமும் 10 நிமிடங்கள் இப்படி மசாஜ் செய்துவந்தால், ஒட்டிய கன்னம் உப்பும்.  கண்ணைச் சுற்றியுள்ள சுருக்கங்கள் மறையும். இளமையாக இருக்கவைக்கும். நின்றபடி நாமே செய்துகொள்வதைவிட படுத்துக்கொண்டு, இன்னொருவர் மசாஜ் செய்தால் எண்ணெய் சருமத்தினுள் நன்கு ஊடுருவும். வறண்ட சருமத்தை வழுவழுப்பாக்கும். ஈரப்பதத்தைத் தக்கவைக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். பொலிவுகூடும். முகத்தில் கருமை, திட்டுக்கள் நீங்கும்.
சிவப்பு அல்லது கறுப்புப் புட்டரிசியை ரவை மாதிரி உடைத்து, கஞ்சி போல் காய்ச்சிக்கொள்ள வேண்டும். கேரளாவில் கிடைக்கும் நவரா அரிசியையும் பயன்படுத்தலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் மஞ்சிஸ்டாதி கஷாயத்துடன் பாலைச் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். காய்ச்சிய கஞ்சியை காடாத் துணியில் சிறிய மூட்டைகளாகக் கட்டி, பாலில் தொட்டு முகத்துக்கு மசாஜ் செய்ய வேண்டும். 10  நிமிடங்கள் செய்தால்போதும். சருமத்தின் இழந்த பொலிவை மீட்டு, நிறுத்தை அதிகரிக்கும். மேலும், சருமத் துளைகள் திறக்கும். வியர்வையை வரவழைக்கும். இதனால், பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் இளகி, வெளியில் வந்துவிடும். கறுப்பு, சிவப்புப் புட்டரிசி வாங்க முடியாதவர்கள், கோதுமையை வேகவைத்து இதே போல் செய்யலாம்.
எலுமிச்சைச்சாற்றுடன் இரண்டு மடங்கு தேன் கலந்து, பருத்திப் பஞ்சில் தோய்த்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். அல்லது, ரோஸ் வாட்டரை ஐஸ்கட்டி போல் தயார் செய்து, ஒரு துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த ஒத்தடம் கொடுக்கக் கொடுக்க சருமத் துளைகள் மூடிக்கொள்ளும். ஆயுர்வேதத்தில் தேனை ‘யோகவாகி’ என்பார்கள். எந்த மருந்துடன் தேனை கலக்குகிறோமோ, அந்தப் பொருட்களின் குணத்தை மேம்படுத்தும். எலுமிச்சையுடன் சேரும்போது, இன்னும் சருமத்தைப் பொலிவாக்கும்.
வைட்டமின், கரோட்டினாய்ட்ஸ் நிறைந்த மாம்பழத்தை இரண்டு துண்டுகள் எடுத்து, பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். பப்பாளி, ஆப்பிள் போன்ற சதைப்பகுதி நிறைந்த எல்லா பழங்களையும் பயன்படுத்தலாம்.  பிளீச்சிங் செய்தது போல் இருக்க வேண்டும் என்பவர்கள், பாலுக்குப் பதில் தயிர் சேர்த்துப் பயன்படுத்தலாம். முகத்தில் ஈரப்பதம் அதிகரிக்கும்.  இதனால், சருமம் அன்று பூத்த மலர் போல் ப்ரெஷ்ஷாக இருக்கும். சில நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.  இதே போல், ஃப்ரெஷ் பன்னீர் ரோஜா, சாமந்தி இதழ்களுடன் மோர் சேர்த்து அரைத்து ஃப்ளவர் ஃபேஷியல் செய்யலாம்.
முல்தானி மட்டியுடன் மஞ்சிஸ்டா கஷாயத்தைச் சேர்த்துக் கலக்க வேண்டும். பிரஷ் பயன்படுத்தி, முகத்தில் பேக் போட வேண்டும்.   பரு, தழும்பு இருந்தால் வெட்டி வேர் கஷாயத்துடன் முல்தானி மட்டி பவுடரை சேர்த்துக்கொள்ளலாம். இமைகளுக்கு மேல் இந்த பேக் போடக் கூடாது.  ஏனெனில், கண்ணைச் சுற்றி இருக்கும் தோலை மேலும் இறுக்கமாக்கிவிடும். முட்டையின் மஞ்சள் கரு கொலாஜன் தன்மைகொண்டது. 40 வயதுக்கு மேல் டபுள் சின், சுருக்கங்கள் இருந்தால் முட்டையின் மஞ்சள் கருவைப் பயன்படுத்தி ஃபேஸ் பேக் போடலாம்.  

கவனிக்க...

மசாஜ் செய்யும்போது, வட்டமாகவும் கீழிருந்து மேல் நோக்கியும் செய்ய வேண்டும். இதனால், சருமம் தளர்வடையாமல் காக்கலாம்.

கஞ்சி மிதமான சூட்டில் இருக்க வேண்டும். நேரடியாகப் பயன்படுத்தக் கூடாது. அதனால்தான், சிறிய துணியில் கட்டி செய்யப்படுகிறது.

எந்த அழகு விஷயத்தையும், முகத்துக்கு மட்டும் செய்யாமல் கழுத்துக்கும் சேர்த்தே செய்ய வேண்டும். அப்போதுதான், ஒரே மாதிரியாக இருக்கும். இல்லையெனில் முகம் ஒரு நிறத்திலும், கழுத்து ஒரு நிறத்திலும் தெரியும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 3689108347384355201

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item