கிச்சனுக்கு புதுசா வர்றீங்களா?
கிச்சனுக்கு புதுசா வர்றீங்களா? புதிதாக சமைக்க வருகிறவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை மனத்தில் வைத்துக்கொண்டு சமைத்தால், ...
https://pettagum.blogspot.com/2015/05/blog-post_38.html
கிச்சனுக்கு புதுசா வர்றீங்களா?
புதிதாக சமைக்க வருகிறவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை மனத்தில் வைத்துக்கொண்டு சமைத்தால், பாராட்டுக்கள் குவிவதுடன், ‘கிச்சன் கில்லாடி’ யாகவும் ஆகிவிடுவீர்கள் !
சாம்பார் பொடி அரைக்கும் போது... அதில் சிறிதளவு கல் உப்பு போட்டு அரைத்தால் சுவையும் அதிகமாக இருக்கும். கூடவே, பொடியில் வரும் வண்டுகளும் வராமல் இருக்கும்.
காலையில் வடித்த சாதம் மிஞ்சிவிட்டதா...?, மதியம் சாப்பிடுவதற்கு முன் சுத்தமாக இருக்கும் வெள்ளைத்துணியில் மிச்சமிருக்கும் சாதத்தை மூட்டையாகக் கட்டி , இட்லித் தட்டில், இட்லி வேக வைப்பது போல் கொஞ்ச நேரம் வைத்து எடுத்தாலே போதும், புதிதாக செய்த சாதம் போல் ஆகிவிடும்.
நூடுல்ஸ் செய்யும் போது, சிலர் நூடுல்ஸ் போட்ட பின், மசாலவைப்
போடுவார்கள். அப்படி செய்யக் கூடாது, தண்ணீர் நன்றாக கொதித்த பின்,
மசாலாவைப் போட்டு அதன் பிறகு நூடுல்ஸ் சேர்த்தால், மசாலா சீராக எல்லா
நூடுல்ஸிலும் சேர்ந்திருக்கும்.
துவையல் அரைக்கும் போது புளியையும் சேர்த்து அரைப்பார்கள் அது மிக்ஸியில் சிக்கிக்கொள்ளும். அதைத் தவிர்க்க, புளியை சுடுதண்ணீரில் சில நிமிடம் போட்டு வைத்துவிட்டு, பிறகு அந்தப் புளியைச் சேர்த்து அரைத்தால் எளிமையாக இருக்கும்.
கார்ன் ஃபிளேக்ஸை பாலில் கலந்து சாப்பிடுவதற்கு பதில் கெட்டித் தயிரில் கேரட் துருவல், கொத்தமல்லித்தழை, ஒரு பச்சை மிளகாய் கலந்து சாப்பிட்டால், ரொம்ப டேஸ்டாகவும் வித்தியாசமான உணவாகவும் இருக்கும்.
சாத்தை குக்கரில் வடிக்கும் போது, வெயிட்டை எடுக்காமல், அப்படியே ரொம்ப
நேரத்துக்கு வைத்துவிடக்கூடாது. அதனால்தான் சிலர், குக்கர் சாதத்தை
விரும்பமாட்டார்கள். இதற்கு சாதம் வெந்ததும், அதில் இருக்கும் பிரஸ்ஸர்
போனதும், அதை உடனே ஹாட் பாக்ஸுக்கு மாற்றினால், சாதம் பொலபொலவென அருமையாக
இருக்கும்.
இன்ஸ்டண்ட் பஜ்ஜிக்கு, பச்சைப் பயறு, பச்சரிசி, கடலைப்பருப்பு சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால், எப்போது பஜ்ஜி தேவையோ அப்போது பஜ்ஜி மாவுக்கு பதில் இந்த மாவைப் பயன்படுத்தலாம். வறுவல் போன்றவற்றை செய்யும்போது இந்த மாவைச் சேர்த்துக் கிளறி இறக்கினால், அருமையாக இருக்கும்.
சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது, தண்ணீருக்கு பதில் பாலில் செய்யலாம்.
கூடுதல் ருசியாக பொங்கல் வேண்டும் என்றால், பாலுடன் 3 டேபிள்ஸ்பூன்
மில்க் மெயிட் கலந்துசெய்தால் உங்கள் பொங்கலை அடிச்சுக்கவே முடியாது.
இட்லி மென்மையாக வர, இட்லி மாவு அரைக்கும் போது 4 பங்கு அரிசியும் 1 பங்கு உளுந்தும் சேர்த்து அரைப்பதுதான் சரியான அளவு. இட்லி மாவை எந்த அளவுக்குக் கையால் கரைக்கிறமோ அந்த அளவுக்கு மறுநாள் இட்லி பூப்போல் வரும்.
வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ போன்றவற்றை சமைக்கும் போது தேங்காய் எண்ணெயில் தாளித்தால் ருசியாக இருக்கும்.
புதிதாக சமைக்க வருகிறவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை மனத்தில் வைத்துக்கொண்டு சமைத்தால், பாராட்டுக்கள் குவிவதுடன், ‘கிச்சன் கில்லாடி’ யாகவும் ஆகிவிடுவீர்கள் !
சாம்பார் பொடி அரைக்கும் போது... அதில் சிறிதளவு கல் உப்பு போட்டு அரைத்தால் சுவையும் அதிகமாக இருக்கும். கூடவே, பொடியில் வரும் வண்டுகளும் வராமல் இருக்கும்.
காலையில் வடித்த சாதம் மிஞ்சிவிட்டதா...?, மதியம் சாப்பிடுவதற்கு முன் சுத்தமாக இருக்கும் வெள்ளைத்துணியில் மிச்சமிருக்கும் சாதத்தை மூட்டையாகக் கட்டி , இட்லித் தட்டில், இட்லி வேக வைப்பது போல் கொஞ்ச நேரம் வைத்து எடுத்தாலே போதும், புதிதாக செய்த சாதம் போல் ஆகிவிடும்.
துவையல் அரைக்கும் போது புளியையும் சேர்த்து அரைப்பார்கள் அது மிக்ஸியில் சிக்கிக்கொள்ளும். அதைத் தவிர்க்க, புளியை சுடுதண்ணீரில் சில நிமிடம் போட்டு வைத்துவிட்டு, பிறகு அந்தப் புளியைச் சேர்த்து அரைத்தால் எளிமையாக இருக்கும்.
கார்ன் ஃபிளேக்ஸை பாலில் கலந்து சாப்பிடுவதற்கு பதில் கெட்டித் தயிரில் கேரட் துருவல், கொத்தமல்லித்தழை, ஒரு பச்சை மிளகாய் கலந்து சாப்பிட்டால், ரொம்ப டேஸ்டாகவும் வித்தியாசமான உணவாகவும் இருக்கும்.
இன்ஸ்டண்ட் பஜ்ஜிக்கு, பச்சைப் பயறு, பச்சரிசி, கடலைப்பருப்பு சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால், எப்போது பஜ்ஜி தேவையோ அப்போது பஜ்ஜி மாவுக்கு பதில் இந்த மாவைப் பயன்படுத்தலாம். வறுவல் போன்றவற்றை செய்யும்போது இந்த மாவைச் சேர்த்துக் கிளறி இறக்கினால், அருமையாக இருக்கும்.
இட்லி மென்மையாக வர, இட்லி மாவு அரைக்கும் போது 4 பங்கு அரிசியும் 1 பங்கு உளுந்தும் சேர்த்து அரைப்பதுதான் சரியான அளவு. இட்லி மாவை எந்த அளவுக்குக் கையால் கரைக்கிறமோ அந்த அளவுக்கு மறுநாள் இட்லி பூப்போல் வரும்.
வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ போன்றவற்றை சமைக்கும் போது தேங்காய் எண்ணெயில் தாளித்தால் ருசியாக இருக்கும்.
Post a Comment