‘‘மரம் வெட்டுங்கள்!’’ - ஆச்சர்ய மெசேஜ் சொல்லும் மாணவர்கள்!

‘‘மரம் வெட்டுங்கள்!’’ - ஆச்சர்ய மெசேஜ் சொல்லும் மாணவர்கள் 'மரம் நடுங்கள்!’ என்று சொல்லித்தான் கேட்டிருக்கிறோம். 'மரங்களை வெட்டுங்கள...

‘‘மரம் வெட்டுங்கள்!’’
- ஆச்சர்ய மெசேஜ் சொல்லும் மாணவர்கள்

'மரம் நடுங்கள்!’ என்று சொல்லித்தான் கேட்டிருக்கிறோம். 'மரங்களை வெட்டுங்கள்!’ என்ற வாக்கியம் பதித்த துண்டுப் பிரசுரங்களை அந்த இளைஞர்கள் நம் கையில் கொடுக்க, ஆச்சர்யமாகி விசாரித்தோம். வேலூர் மாவட்டத்தில் உள்ள 'தோள் கொடு தோழா’ குழுவின் உறுப்பினர்களான கவாஸ்கர், கோபிநாத், விக்னேஷ், சாந்தகுமார் மற்றும் சரண்யா ஆர்வமாகப் பேசினார்கள்!

'' என்னைத் தவிர, மற்ற அனைவரும் மாணவர்கள். வெவ்வேறு கல்லூரியைச் சேர்ந்தவர்கள். நான் வேலை பார்க்கிறேன்!'' என்று அறிமுகம் தந்த கவாஸ்கர், தானும், எம்.எஸ்.டபிள்யூ படிக்கும் கோபிநாத், விக்னேஷ் மற்றும் சாந்தகுமாரும், பி.காம் படிக்கும் சரண்யாவும் வேறு வேறு தளத்தில் இருந்து வந்து ஒருங்கிணைந்ததைச் சொன்னார்...

''சமூக சேவை என்ற மையப்புள்ளியே எங்களை இணைத்தது. சென்னை, கோவை, ராணிப்பேட்டை, ஆற்காடு, சிதம்பரம் என பல ஊர்களுக்கும், பல்வேறு சேவைகளுக்காகச் சென்றபோது சந்தித்து, நண்பர்கள் ஆனோம். ரத்ததானம், கண்தானம் என்று விழிப்பு உணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வந்தோம். கிராமங்களுக்குச் சென்று, பெண்களுக்கான சட்டங்கள் பற்றி எடுத்துரைத்தோம். அந்த வகையில்தான், தண்ணீர் பஞ்சத்துக்கு தீர்வு ஏற்படும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்தோம்'' என்று கவாஸ்கர் நிறுத்த, கோபிநாத் தொடர்ந்தார்.

''முதல் படியாக, தண்ணீர் பஞ்சம் போக்க மரம் நடுதல் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல அதைப் பற்றிய தகவல்களைத் திரட்டியபோது தான், சில மரங்களின் தீமைகள் பற்றியும் தெரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக, சீமைக்கருவேல் (வேலிக்காத்தான், வேலிக்கருவை) நம் நாட்டின் இயற்கை வளத்தை சிதைத்துக்கொண்டிருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரிந்தது. இதை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் முனைப்புடன் ஆரம்பிக்கப்பட்டதே எங்களின் 'தோள் கொடு தோழா’ அமைப்பு!'' என்ற கோபிநாத், பெற்றோர் தரும் பாக்கெட் மணியை இதற்காக செலவிடுவதாகச் சொல்லி பூரித்தார். 

''இந்த அமைப்பின் சார்பாக, சீமைக்கருவேல மரங்களின் தீமைகளை எடுத்துச் சொல்லும் பிட் நோட்டீஸ்களை பொதுமக்களிடம் வழங்கியும், எடுத்துச் சொல்லியும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அமெரிக்க தாவரவியல் பூங்கா, 'வளர்க்கக் கூடாத நச்சு மரங்கள்' என்று வெளியிட் டுள்ள பட்டியலில் முன்னணியில் இருப்பது, இந்தக் சீமைக்கருவேல மரம்தான். இவை எந்த வறட்சியிலும் நன்கு வளரக்கூடியவை. மழை பெய்யாமல் போனாலும், தன் இலைகளை வாட விடாமல் பார்த்துக்கொள்ளும். நிலத்தடி நீரை உறிஞ்சி, அந்தப் பகுதியையே வறட்சியாக்கி விடும்'' என்று விக்னேஷ், சாந்தகுமார் தந்த அதிர்ச் சித் தகவல்களை மேலும் தொடர்ந்தார், சரண்யா.

''தமிழ்நாட்டில் விறகுகளுக்கு இந்த மரத்தை வளர்க்கிறார்கள். ஆனால், இயற்கை மற்றும் மனித குலத்துக்கு பேராபத்தை தரக்கூடியவை என்பதால்தான் 'மரங்களை வெட்டுங்கள்’ என்ற பிரசாரமாக நாங்கள் முன்னெடுத்துச் செய்துகொண்டிருக்கிறோம்.

இப்போதைக்கு வேலூர், சென்னை மாவட்ட அளவில்தான் கொண்டு சேர்த்துள்ளோம். வரும் நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பாக, சீமைக்கருவேல மரங்களால் கடுமையான வறட் சிக்கு உள்ளாகியிருக்கும் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் எங்கள் பணியை விரிவு படுத்துவோம்!''   

காகிதங்களை மக்களின் கைகளில் சேர்த்துக் கொண்டிருந்தவர்களிடம் விடைபெற்றோம்!

Related

பெட்டகம் சிந்தனை 4306359276203491045

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item