தக்காளி தொக்கு!
தேவையானப்பொருட்கள்: தக்காளி - 4 புளி - ஒரு நெல்லிக்காயளவு (விருப்பமெனில்) மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் இஞ்...

https://pettagum.blogspot.com/2014/10/blog-post_29.html
தேவையானப்பொருட்கள்:
தக்காளி - 4
புளி - ஒரு நெல்லிக்காயளவு (விருப்பமெனில்)
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1 அங்குலத் துண்டு
நல்லெண்ணை - 5 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
வெல்லம் பொடித்தது - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
புளியை சிறிது வெந்நீரில் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 4 முதல் 5 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது, தக்காளியை முழுதாகப் போட்டு மூடி வைத்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து விட்டு, தக்காளியை வெளியே எடுத்து ஆற விடவும். பின்னர் தோலை உரித்து விட்டு, மிக்ஸியில் போட்டு, அத்துடன் ஊற வைத்துள்ள புளியை (ஊற வைத்துள்ள நீரோடு சேர்க்கலாம்) சேர்த்து, விழுதாக அரைத்தெடுக்கவும்.
இஞ்சியையும் விழுதாக அரைத்தெடுக்கவும்.
வெறும் வாணலியில் வெந்தயத்தைப் போட்டு பொன்னிறமாக் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி, எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் பெருங்காயத்தூளை சேர்க்கவும். இஞ்சி விழுதையும் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி விழுதைப் போட்டு, அத்துடன் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறி விடவும். வெல்லத்தூளைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, தொக்கு கெட்டியாகி எண்ணை பிரிந்து வரும் வரை அடிக்கடி கிளறி விடவும். கடைசியில் வெந்தயப் பொடியைத் தூவிக் கிளறி இறக்கி வைக்கவும்.
சுத்தமான மூடி போட்ட காற்றுப் புகாத ஒரு பாத்திரத்தில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.
இதை தயிர் சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ளலாம். சூடான சாதத்தில் சிறிது தொக்கைப் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.
தக்காளி - 4
புளி - ஒரு நெல்லிக்காயளவு (விருப்பமெனில்)
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1 அங்குலத் துண்டு
நல்லெண்ணை - 5 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
வெல்லம் பொடித்தது - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
புளியை சிறிது வெந்நீரில் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 4 முதல் 5 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது, தக்காளியை முழுதாகப் போட்டு மூடி வைத்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து விட்டு, தக்காளியை வெளியே எடுத்து ஆற விடவும். பின்னர் தோலை உரித்து விட்டு, மிக்ஸியில் போட்டு, அத்துடன் ஊற வைத்துள்ள புளியை (ஊற வைத்துள்ள நீரோடு சேர்க்கலாம்) சேர்த்து, விழுதாக அரைத்தெடுக்கவும்.
இஞ்சியையும் விழுதாக அரைத்தெடுக்கவும்.
வெறும் வாணலியில் வெந்தயத்தைப் போட்டு பொன்னிறமாக் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி, எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் பெருங்காயத்தூளை சேர்க்கவும். இஞ்சி விழுதையும் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி விழுதைப் போட்டு, அத்துடன் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறி விடவும். வெல்லத்தூளைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, தொக்கு கெட்டியாகி எண்ணை பிரிந்து வரும் வரை அடிக்கடி கிளறி விடவும். கடைசியில் வெந்தயப் பொடியைத் தூவிக் கிளறி இறக்கி வைக்கவும்.
சுத்தமான மூடி போட்ட காற்றுப் புகாத ஒரு பாத்திரத்தில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.
இதை தயிர் சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ளலாம். சூடான சாதத்தில் சிறிது தொக்கைப் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.
Post a Comment