பத்தியத்தின் பெருமை!---ஆயுர்வேத மருத்துவம்!!

பத்தியத்தின்   பெருமை! ஒரு நோய் நீங்குவதற்கு ,  சீரான   சூழ்நிலையில் ,  உடல் நிலை இருக்க வேண்டும். மருந்தைச் சாப்பிடும்போது ,  அந்...

பத்தியத்தின் பெருமை!

ஒரு நோய் நீங்குவதற்குசீரான சூழ்நிலையில்உடல் நிலை இருக்க வேண்டும். மருந்தைச் சாப்பிடும்போதுஅந்த நோய் வந்ததற்கான காரணங்களைத் தவிர்த்துமருத்துவரின் ஆலோசனைப்படி உணவு மற்றும் செயல்களில் கொண்டுவரும் மாற்றத்தால்மருந்து தன் சக்தியைச் சரியாகக் காட்டிநோயிலிருந்து விரைவில் நம்மைவிடுவிக்கிறது. 

பத்திய முறைகளைக் கையாளாமல்மருந்தை மட்டும் சாப்பிட்டால்அதை அதிக அளவில் அதிக நாட்கள் சாப்பிட வேண்டிய கட்டாயநிலை ஏற்படுகிறது. சில சமயம் மருந்தினால் ஏற்பட வேண்டிய நல்ல பலன்களும் கிடைக்காமற் போகக் கூடும். சுருக்கமாகச்சொன்னால் மருந்தின் முழு வீரியத்தையும் உடல் ஏற்பதற்குப் பத்தியம் உதவுகிறது. மேலும் மருந்தின் குணம் முழுவதையும் உடல் ஏற்றுநோயை அகற்ற வழி செய்கிறது.

நம் முன்னோர் நோய் வந்துவிட்டால் உணவுஉடைபாவனைகளில் அதற்கு எதிரான மாற்றங்களைச் செய்துமருந்தை மிகவும் குறைந்த அளவில் மட்டுமே சாப்பிட்டனர். இயற்கையை மதித்து அவர்கள் செயல்பட்டதால்மருந்துகளால் பின்விளைவுகள் ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர்.


ஆனால் இன்றைய வாழ்க்கை முறை அப்படியில்லை. "நான் காபிடீ சூடாகத்தான் அருந்துவேன். காரம்புளிஉப்புதான் அதிகம் சாப்பிடுவேன். என் ஆபிஸ் சூழ்நிலை அப்படி. ஆனால் என் குடல் அல்சர் நோயை நீக்கித் தாருங்கள்என்று கூறி மருத்துவனின் கடமையைப் பெரிதாக்குகின்றனர். 


ஆயுர்வேதம் இந்த விஷயத்தைநோயுற்றவன் பத்தியமிருந்தால் மருந்தால் ஆவதென்ன?நோயுற்றவன் பத்தியமில்லாதிருந்தால் மருந்தால் ஆவதென்னஎன்று கேட்கிறது. அதாவது பத்தியமிருந்தால் மருந்தின் தேவையே இல்லாமல் இயற்கையே தன்னைச் சீரமைத்துக் கொள்ளும்.

பத்தியம் இல்லாமல் தன் இஷ்டப்படி வாழ்ந்து கொண்டுநோய்க்கான மருந்தைத் தேடினால்உடல் நோயிலிருந்து விடுபடும் சூழ்நிலை ஏற்படாது. மருந்து எத்தனை சாப்பிட்டாலும் பயன் தராததால்மருந்தால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதையே மருந்தால் ஆவதென்னஎன்று வினவுகிறது.

நோயுற்றவன் இன்ன இன்ன உணவுகளைத்தான் சாப்பிட வேண்டும் என்று கூறி அவற்றைக் கடைப்பிடிக்கச் செய்வதால் உணவுக் குழாய்உணவை ஏந்திச் செல்லும் ரசாயனங்கள்ரத்தக் குழாய்கள் முதலியவை சரியாக இயங்க உதவி அவற்றுக்குக்கேடு விளைவிக்காதவண்ணம் பாதுகாப்பதே பத்தியம் எனப்படுகிறது. அதற்கு மாறுபட்டது அபத்தியம். பத்திய உணவைச் சாப்பிடுவதால் உடல்தான் இழந்த சமநிலையை அடைந்துஅதேநிலையில் நிலைத்துசமநிலை இழக்காது திடப்படுத்திவிடுகிறது.


ஒரு சிறு உதாரணத்தினால் பத்தியத்தின் பெருமையை விளக்கலாம். பிசுபிசுப்புடன் நீர் வெளியேறிஎரிச்சலும் அரிப்பும் சேர்ந்து ஓர் உபாதையை தோலில் ஒருவருக்கு ஏற்படுத்தினால்அதைக் குணப்படுத்த ஆயுர்வேத கஷாய மருந்தாகிய படோல கடு ரோஹிண்யாதிநல்ல மருந்தாகும். 


ஆனால் அதே நபர்கெட்டியான புளித்த தயிர் சாதத்தை நல்லெண்ணெயில் கடுகு தாளித்துச் சாப்பிட்டால்நோய் குணமாவதில்லை. அதற்குக் காரணம் புளித்த தயிர்குடலில் பிசுபிசுப்பை அதிகரித்துதோலின் வழியாக வெளியேற்றுவதால்கஷாயத்திற்கும் தயிருக்கும் மட்டுமே சண்டை நடக்குமே தவிரகஷாயத்திற்கும் நோய்க்கும்நடப்பதில்லை. 

புளித்த தயிரின் மேலுள்ள ஆடையை அகற்றிஅதில் அரைப் பங்கு தண்ணீர் சேர்த்துமத்து வைத்துக் கடைந்து,வெண்ணெய் அகற்றிஅந்த வறண்ட மோரை அவர் உணவாக ஏற்றால்உட்புறக் குழாய்களின் பிசுபிசுப்பை அகற்றிவறளச்செய்கிறது. இங்கு க ஷாய மருந்தின் வீர்யம் விரைவாக உட்புறக் குழாய்களின் வழியாக,தோலில் சேர்க்கப்பட்டு நோயை எளிதாகக் குணப்படுத்திவிடும்.

Related

நாட்டு வைத்தியம் 7355534904936029307

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item