ரத்தம் சுத்திகரிக்கும் மல்லித்தழை!
ரத்தம் சுத்திகரிக்கும் மல்லித்தழை! கொ த்தமல்லி என்றதும் தனியா நம் நினைவுக்கு வரும். தனியாவுக்கென்று நிறைய மருத்துவக் ...

கொத்தமல்லி என்றதும் தனியா நம் நினைவுக்கு வரும். தனியாவுக்கென்று நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளதுபோலவே கொத்தமல்லித்தழைக்கும் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உள்ளன. அன்றாட சமையலில் வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படும் கொத்த மல்லித்தழையை தனியாக துவையல், சட்னி போன்ற வடிவங்களில் செய்து சாப்பிட்டால் நிறைய பலன்கள் உண்டு. சிறுவயது முதல் கொத்தமல்லித்தழையை துவையல் போன்ற வடிவங்களில் சாப்பிட்டு வருவதால் பார்வைக்குறைபாடுகள் ஏற்படாமல் காத்துக்கொள்ள முடியும். வாயில் புண் ஏற்பட்டால், கொத்தமல்லித்தழையுடன் தேங்காய் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால்... புண் சரியாகும். இதேபோல் வயிற்றுப்புண், வயிற்றுவலி போன்ற பிரச்னைகளை சரிசெய்வதோடு ரத்தத்தை சுத்திகரிப்பதில் கொத்தமல்லித்தழை முக்கிய பங்காற்றுகிறது.
Post a Comment