சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ மறைவு குறித்து பெட்டகம் சிந்தனை!!
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ மறைவு குறித்து? இப்படி ஒரு தலைவர் இந்தியாவுக்குக் கிடைக்க மாட்டாரா என்று ஏங்க வைத்த ஆட்சியாளர்...

இப்படி ஒரு தலைவர் இந்தியாவுக்குக் கிடைக்க மாட்டாரா என்று ஏங்க வைத்த ஆட்சியாளர். அவருக்கும் தமிழர்களுக்கும் பூர்வகாலத் தொடர்பு இறுக்கமாக இருந்தது என்பதே அவரது மறைவின்போது ஏங்கவைத்தது.
ஈழத்தில் 2009-ம் ஆண்டு நயவஞ்சகப் படுகொலைகள் நடத்தப்பட்டபோது எல்லா நாடுகளும் வாய்மூடி மெளனம் சாதித்தன. அப்போது, 'இலங்கை ஒரு மகிழ்ச்சிக்குரிய நாடாக இருக்க வாய்ப்பு இல்லை. இலங்கையில் சிங்களவர்கள் இருந்த காலம் முதல் தமிழர்களும் அங்கு வாழ்கிறார்கள். அந்த நிலம் இரண்டு இனத்துக்கும் சொந்தமானது. சிங்களவர்களின் தாக்குதலுக்கு எதிராக ஈழத்தமிழர்கள் தொடுத்த போர் என்னைப் பொறுத்தவரை நியாயமானதே’ என்று கம்பீரமாகச் சொன்னவர் லீ குவான் யூ. அதனால்தான் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் லீ குவான் யூவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
Post a Comment