ஆட்டுக்கால் பாயா! சமையல் குறிப்புகள்-அசைவம்!!
தேவையான பொருட்கள்: ஒரு ஆட்டின் கால் சுத்தம் செய்யப்பட்டவை. இஞ்சிப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் - 50 மில்லி ல...

- இஞ்சிப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- சமையல் எண்ணெய் - 50 மில்லி லிட்டர்.
- பெரிய வெங்காயம் - 2 (நீளமாக அரிந்தது).
- தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது).
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி.
- மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி.
- தனியாத் தூள் - 3 தேக்கரண்டி.
- பட்டை - சிறிய துண்டு.
- ஏலக்காய் - ஒன்று.
- கிராம்பு - ஒன்று.
- பிரிஞ்சி இலை - ஒன்று
- உப்பு - தேவையான அளவு.
- கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி.
- கொத்தமல்லித் தழை - தேவைக்கு
- ப்ரஷர் குக்கரில் எண்ணெயை ஊற்றி, சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை இவைகளைப் போட்டு, வாசனை வந்தவுடன், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மொறு மொறுவென வதக்க வேண்டும்.
- இப்போது, இஞ்சிப் பூண்டு விழுதை சேர்த்து வதக்கி, நறுமணம் வந்ததும், ஆட்டுக்காலை கலந்து, இளந்தீயில் 5 நிமிடம் மூடி வைக்கவும்.
- மூடியைத் திறந்து, மிளகாய்த் தூளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
- பின்னர் தனியாத் தூள், மிளகுத் தூள் இரண்டையும் கலந்து ஒரு நிமிடம் கிளற வேண்டும்.
- அதனுடன் தக்காளி, உப்பு சேர்த்து, நன்றாக கலந்து சுமார் 3 லிட்டர் தண்ணீருடன் 1/2 மணி நேரம் ப்ரஷர் குக் செய்ய வேண்டும்.
- ப்ரஷர் அடங்கியவுடன், குக்கரைத் திறந்து, ஆட்டுக்கால் நன்கு வெந்து, பாயா நல்ல பதத்துடன், எண்ணெய் மேலே மிதந்து வரும் நிலையில் கொத்தமல்லி தழை, கரம் மசாலாத் தூள் இவற்றை சேர்க்க வேண்டும்.
Post a Comment