ஊறுகாய் பிடிக்காதவர்கள் கூட பூண்டு ஊறுகாயை விரும்பி சாப்பிடுவார்கள். காரணம், அது உடலுக்கு நல்லது என்பதால்.
வீட்டிலேயே ருசியான பூண்டு ஊறுகாயை செய்யலாம்.
தயாரிக்கும் அளவு: 1 படி கொள்ளவு
தேவையான பொருட்கள்:பூண்டு - 1/2 கிலோ
வெந்தையம் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - 10
கருவேப்பில்லை - 10 இலைகள்
எண்ணெய் - 50 மில்லி
இஞ்சி - 1 பல்லு
பெருங்காய பொடி - 1 தேக்கரண்டி
புளி தண்ணீர் - 2 புளி
எலுமிச்சை சார் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 10 கிராம்
தயாரிக்கும் முறை:
- பூண்டை நன்றாக குளிர்ந்த தண்ணீரில் ஊறவைத்து அதன் தோலை உரிக்கவும்.
- நீள துண்டுகளாக வெட்டவும்.
- வாணலியில் தேவையான உப்பு, மஞ்சள் அளவுடன் மெதுவான சூட்டில் வதக்கவும்.
- மின் அம்மியில் அல்லது பாக்கு உரல் வைத்து தேவையான அளவில் பசை செய்து கொள்ளவும்.
ஊறுகாய் மசாலா தயாரிக்கும் முறை:
- வெந்தையம், ஜீரகம், கடுகு, காய்ந்தமிளாகாய் உடன் வானலியில் வதக்கவும்.
- பிறகு மின்அம்மி வைத்து பொடியாக அடித்து வைத்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றவும்.
- சீரகம், கடுகு, வெந்தையம் மற்றும் கருவேப்பில்லை சேர்க்கவும்.
- அதோடு இஞ்சி, பெருங்காயப்பொடியை சேர்க்கவும்.
- அதோடு புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- அதோடு மேலே தயாரித்த பசையை சேர்க்கவும்.
- சிறிது நேரம் மெல்லிய தீயுடன் வைக்கவும்.
- இதோடு அரைத்த பொடியை சேர்த்து கொள்ளவும்.
- இதோடு எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.
சுவையான பூண்டு ஊறுகாய் தயார்.
Post a Comment