வீட்டுக்குறிப்புக்கள்! டிப்ஸ்!!
சமையல் குறிப்பு முறுக்கு நன்றாக கரகரப்பாக இருக்க மாவு பிசையும்போது வெண்ணை சேர்க்க வேண்டும். அல்லது எண்ணெயை மிதமான சூட்டில் ஒரு கப் எட...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_7966.html
சமையல் குறிப்பு
முறுக்கு நன்றாக கரகரப்பாக இருக்க மாவு பிசையும்போது வெண்ணை சேர்க்க வேண்டும். அல்லது எண்ணெயை மிதமான சூட்டில் ஒரு கப் எடுத்து மாவுடன் சேர்த்துப் பிசையலாம். மூன்றாவதாக ஸ்லோ பிளேமில்தான் அடுப்பு எரிய வேண்டும். ஓவர் ஹீட் கூடாது. இந்த மூன்று விஷயத்தையும் செய்தால் முறுக்கு கரகரப்பாக இருக்கும்.
ஈஸியாக ரசப்பொடியை தயாரிக்க தனியா-3கப்; துவரம்பருப்பு-1/2கப்; மிளகு-1/2கப்; சீரகம்-1/4கப்; காய்ந்த மிளகாய்-1/2கப்; வெறும் கடாயில் தனித்தனியாக வறுத்து அரைத்து ரசம் வைத்தால் கமகமா ரசம் ரெடி.
வெந்தயம் போட்டுத் தாளித்தால் காரக்குழம்பு மணமாக இருக்கும்.
சிறிய வெங்காயத்தை முதல் நாளே உரித்து வைக்கலாம். பெரிய வெங்காயத்தை உரித்து வைக்கக் கூடாது. ஆனால் இரண்டு வெங்காயத்தையுமே சமையலுக்கு சற்றுமுன் வெட்டுவதே சிறந்தது. வெங்காயம் ஒரு மருந்துப் பொருள் என்பதால் இதை முந்தைய இரவே நறுக்கி வைத்தால் சமையியலில் வெங்காய வாசனைக்குப் பதில் மருந்துவாசனை வீசும்.
சாம்பாரில் பச்சை வாசனை வராமல் இருக்க சாம்பார் பொடித் தயாரிக்கும்போது வெறும் கடாயில் மெல்லிய வறட்டு வறுவலாக, மிளகாய், தனியா, சீரகம், போன்ற மற்ற பொருள்களை வறுத்தபின் அரைக்க வேண்டும். பின் அந்த பொடியில் சாம்பார் வைத்தால் பச்சை வாசனை போய்விடும்.
இரண்டு பட்டை, லவங்கம் பொரிகடலை கொஞ்சம், அத்துடன் கசகசாவையும் வறுத்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் டிரையாக அரைத்து எடுத்து பிரிட்ஜில் வைத்துக் கொண்டால் தேவையான பொழுது உபயோகித்துக் கொள்ளாலாம்.
மட்டனைப் புளி சேர்த்தும், சிக்கனை எலுமிச்சை சாறு சேர்த்தும் சமைக்கலாம்.
உப்புக்கண்டம் போட, கறியை எலும்பில்லாமல் எடுத்து நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும். காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ள வேண்டும். இத்துடன், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அதில் கறித்துண்டுகளை ஊற வைத்து கோணி ஊசியால் கோர்த்து சணல் கயிற்றில் இணைத்து நன்றாகக் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
கருவாட்டை சிறிதளவு தண்ணீருடன் மண் சட்டியில் போட்டு உருட்ட வேண்டும். பின் சுடுதண்ணீரை ஊற்றி நன்றாக கழுவினால் கருவாட்டில் உள்ள அதிகமான உப்பு நீங்கிவிடும்.
இட்லிக்கு மாவு அரைக்கும் போது, அரிசிமாவை கெட்டியாகவும் நைஸாகவும் அரைக்க வேண்டும். நன்றாக ஊறிய உளுத்தம் பருப்பை அறைக்கும்போதே அதிக தண்ணீர் விடாமல், அரைக்க அரைக்க தண்ணீர் தெளித்து தெளித்து அரைக்க வேண்டும். உளுந்தம் பருப்பை பூக்கபூக்க அரைத்தால்தான் இட்லி மிருதுவாக இருக்கும்.
வெயில் காலத்தில் சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அதிகமான மழை, வெள்ளக் காலங்களில் மீன் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
மீனை உப்பு, மஞ்சள், மிளகாய்த் தூள் தடவி பிரீசரில் வைத்துக் கொண்டால் 10 நாட்கள் வரை கெடாது.
மீன் குழம்பு மணமாக வர இறக்கும்போது சிறிதளவு கொத்தமல்லி தூவுங்கள்.
தேங்காய் சட்னி வெள்ளைவெளேர் என அரைக்க, தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, புளிக்குப்பதில் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து அரைத்தால் தேங்காய் சட்னி வெள்ளைவெளேர் என்று வரும். கடுகு தாளிக்கக் கூடாது.
ப்ரட்டை ஒரு வாரத்திற்கு வைத்து பயன்படுத்துவது ஹெல்த்துக்கு நல்லதல்ல.
Post a Comment