வயிற்றுவலிக்கு கடுக்காய்... வாய்ப்புண்ணுக்கு மாசிக்காய்... குழந்தைகளுக்கான எளிய வைத்தியங்கள்!!

வயிற்றுவலிக்கு கடுக்காய்... வாய்ப்புண்ணுக்கு மாசிக்காய்... குழந்தைகளுக்கான எளிய வைத்தியங்கள் குழந்தைகளின் நாக்கில் மாவுபோன்று வெள்ளை ...

வயிற்றுவலிக்கு கடுக்காய்... வாய்ப்புண்ணுக்கு மாசிக்காய்... குழந்தைகளுக்கான எளிய வைத்தியங்கள்

குழந்தைகளின் நாக்கில் மாவுபோன்று வெள்ளை நிறப் பொருள் படிந்திருக்கும். அதைப் போக்க, மாசிக்காயை சந்தனக்கல்லில் உரசி அதன் விழுதை குழந்தையின் நாக்கில் தடவினால் சரியாகிவிடும்.


குழந்தைகளைப் பாதிக்கும் சிறுசிறு உடல் உபாதைகளுக்கு வீட்டிலேயே எளிய முறையில் தீர்வு காண்பது மிகவும் நல்லது. முக்கியமாக, குழந்தைகளுக்கு என்ன நோய் வந்திருக்கிறது என்பதை அறிந்து அதற்கு ஏற்றார்போல வைத்தியங்கள் செய்ய வேண்டியது அவசியம்.
குழந்தைகள் எதற்காக அழுகிறார்கள் என்பதை அவர்களுக்கு ஒரு வயது ஆகும்வரை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கும் தாய்மார் அதிகம். அப்போது, வீட்டிலிருக்கும் பாட்டிகள் அல்லது பெரியோர்தான் இதைக் கண்டறிந்து குழந்தைகளின் அழுகையை நிறுத்தி தாயின் பரிதவிப்புக்கு ஆறுதல் அளிப்பார்கள். அவ்வாறு பாட்டிகள் சொல்லும் வைத்தியங்கள் என்னென்ன என்பதுகுறித்து பார்ப்போம்.
 

* வயிற்றுவலியால் துடிக்கும் ஐந்துமாதக் குழந்தையின் வயிற்றுப்பகுதியில், கடுக்காயை சந்தனம்போல அரைத்துப் பூசினால் வலி குறையும்.
* சில குழந்தைகளின் நாக்கில் மாவுபோன்று வெள்ளைநிறப் பொருள் படிந்திருக்கும். அதைப் போக்க, மாசிக்காயை சந்தனக்கல்லில் உரசி அதன் விழுதை குழந்தையின் நாக்கில் தடவினால் சரியாகிவிடும்.
* ஆறு மாத குழந்தைகளுக்கு பத்து நாள்களுக்கு ஒருமுறை ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் ஆகியவற்றை நன்றாக அரைத்து, வெந்நீரில் கலந்து, ஒரு பாலாடை அளவு குடிக்கக் கொடுத்தால் குழந்தையின் வயிற்றில் வாய்வு எதுவும் சேராது.

* குழந்தைகளின் உடலில் சொறி, சிரங்கு மற்றும் வேறு எந்தவித சருமப் பிரச்னைகளும் வராமலிருக்க எளிய வழி இருக்கிறது. அதாவது, சுத்தமான தேங்காய் எண்ணெய்யை காயவைத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேங்காய்ப்பால் விட்டு அது கொதித்து அடங்கியதும் ஒரு டீஸ்பூன் கஸ்தூரிமஞ்சள் பொடியைப் போட்டு இறக்க வேண்டும். குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை இந்த எண்ணெய்யை தேய்த்து பாசிப்பயறு மாவு தேய்த்து குளிக்க வைத்து வந்தால் சருமப்பிரச்னைகள் நீங்கும்.
* மார்கழிப் பனியில் கைக்குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்கும். எனவே சளித்தொல்லையால் அவதிப்படும் குழந்தைகளுக்கு சற்று வெதுவெதுப்பான உணவுகளைக் கொடுப்பதே மிகவும் நல்லது. அவர்களுக்குக் கொடுக்கும் உணவில் சிறிது மிளகு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வது, எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவும். அதிகமாக இனிப்புப் பொருள்கள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகமாக பால் சேர்ந்த உணவுகளைக் கொடுக்கக் கூடாது.

* குழந்தைகளுக்கு வயிற்றுப்பொருமல் ஏற்பட்டால், ஓமத்தை இளம்வறுப்பாக வறுத்துப் பொடித்து ஒரு சிட்டிகை அளவு வெந்நீரில் கலந்து தரவும்.
* குழந்தைகளுக்கு வரும் வாய்ப்புண்ணுக்கு, மாசிக்காயைப் பொடித்து தேனில் கலந்து தரலாம். தேங்காய்ப்பால் கொடுத்தாலும் வாய்ப்புண் ஆறும். பருப்பு சாதத்துடன் மணத்தக்காளிக்கீரை கலந்து சாப்பிடக் கொடுத்தாலும் வாய்ப்புண் குணமாகும்.
* குழந்தைகளுக்கு வரும் வாந்தியை நிறுத்த எளிய மருந்து உள்ளது. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அக்கரகாரம், திப்பிலி, சீரகம் சம எடை எடுத்து சிறிது தேன் விட்டு பொன்வறுவலாக வறுக்க வேண்டும். அதில் நீர் விட்டுக்காய்ச்சிய குடிநீரில் 15 முதல் 30 மில்லி வரை கொடுத்தால் வாந்தி நிற்கும். அதிமதுரத்தைப் பொடியாக்கி பாலில் போட்டு அது நன்றாக ஊறியதும் அதை வடிகட்டிக் கொடுத்தாலும் வாந்தி நிற்கும்.
* குழந்தைகளின் செரிமான சக்தி மிக எளிதாகத் தூண்டலாம். சுக்கு, மிளகு, திப்பிலி, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை இளவறுப்பாக வறுக்க வேண்டும். அதனுடன் சிறிது பொரித்த பெருங்காயத்தைச் சேர்த்துப் பொடித்து ஒரு சிட்டிகை அளவு எடுத்து நெய்யுடன் கலந்து முதலில் சாப்பிட்டும் சாதத்துடன் சேர்த்துக் கொடுக்க நல்ல செரிமானம் உண்டாகும்.
*  குழந்தைகளின் செரியாக் கழிச்சலுக்கு ஓமக் குடிநீர் நல்ல மருந்து. அதாவது ஓமம், கோஷ்டம், கோரைக்கிழங்கு, சுட்ட வசம்பு சமஅளவு எடுத்துப் பொடியாக்க வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து 100 மில்லி நீர் சேர்த்து கொதிக்கவைத்து, வயதுக்கு தக்கவாறு குழந்தைகளுக்குக் கொடுத்தால் கழிச்சல் நிற்கும்.
*  குழந்தைகளுக்கு வரும் குடல் கிருமிக்கு வேப்பங்கொழுந்து, ஓமம், சுக்கு, மிளகு, கறிவேப்பிலை, வெள்ளைப் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு வாரம் ஒருமுறை தரலாம். வாய்விடங்கத்தைச் சூரணமாகச் செய்து ஒன்று முதல் இரண்டு கிராம்வரை குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப தரலாம்.

*  குழந்தைகளின் வறட்டு இருமலைப் போக்க சித்தரத்தை, மிளகு, தாளிசபத்திரி, இலவங்கம் சமஅளவு எடுத்துப் பொடித்து சூரணித்து அரை முதல் ஒரு கிராம்வரை தேனுடன் கலந்து கொடுக்கலாம். தூதுவளை, கண்டங்கத்தரி, திப்பிலி, அக்கரகாரம், சிற்றரத்தை சமஅளவு எடுத்து நீர் விட்டுக் கொதிக்கவைத்து குடிநீராக்கி அதில் 15 முதல் 30 மில்லி வரை கொடுத்தாலும் வறட்டு இருமல் சரியாகும்.
*  குழந்தைகளின் நெஞ்சுச்சளி மற்றும் கோழைக்கட்டைப் போக்க, பிரண்டைத் துண்டின் கணுவை நீக்கிவிட்டு நெருப்பில் வாட்டி பிழிந்த ரசத்தை வயதுக்கு ஏற்ப கொடுக்கலாம். ஆடாதோடை இலையை குடிநீரிட்டு தேன் சேர்த்து 30 மில்லி அளவு இரண்டுவேளை  தரலாம்.
* குழந்தைகளின் மூக்கு நீர் பாய்தல், தும்மல் மற்றும் தொண்டைக் கட்டைப் போக்க தும்பைப்பூ நான்கு கிராம், மிளகு இரண்டு கிராம் சேர்த்து தேன் விட்டு அரைத்து இரண்டு வேளை கொடுக்கலாம்.
சித்த மருந்துகளான உரை மாத்திரை அல்லது கஸ்தூரி மாத்திரையை இளைத்தும் கொடுக்கலாம். ஓமத்தைக் கசக்கி அதனுடன் சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து துணியில் கட்டி அடிக்கடி மோந்து வந்தாலும் தும்மல், தொண்டைக்கட்டு குணமாகும்.
 குழந்தைகளின் உடலில்  ஏற்படும் இந்த உபாதைகளுக்கு எந்தவித சந்தேகமுமின்றி கொடுக்கலாம். ஆனால், தொடர்ந்து இரண்டு நாள்களுக்குமேல் ஏதேனும் தொந்தரவு இருந்தால் அருகே உள்ள சித்த மருத்துவர்களை அல்லது உங்களின் குடும்ப மருத்துவர்களை ஆலோசித்து மருந்துகள் கொடுப்பது சிறந்தது.

Related

தாய் சேய் நலம்! 4926333617496028060

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item