மனை வணிகச் சட்டத்தில் 'வாடிக்கையாளரே ராஜா': அறிய வேண்டிய அருமையான தகவல்கள்!

  சென்னை: ரியல் எஸ்டேட் வரையறை மற்றும் மேம்பாட்டுச் சட்டம் - 2016 (RERA) மே 1ம் தேதி 2017 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒவ...

 


சென்னை: ரியல் எஸ்டேட் வரையறை மற்றும் மேம்பாட்டுச் சட்டம் - 2016 (RERA) மே 1ம் தேதி 2017 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் தங்களுக்கென தனித்தனி மனை வணிகச் சட்டத்தை இயற்றிக் கொள்ளவும் இந்த சட்டம் வகை செய்கிறது.
வீடு மற்றும் குடியிருப்புகள் விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக இயற்றப்பட்டிருப்பதே மனை வணிகச் சட்டம்.
எனினும், இந்தச் சட்டத்தை ஏற்று இதுவரை 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே அறிவிக்கை வெளியிட்டுள்தால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.

மனை வணிகச் சட்ட அமலாக்கம் குறித்து மத்திய வீட்டுவசதி - நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் எம். வெங்கய்ய நாயுடு கூறுகையில், ஒன்பது ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு, மனை வணிக ஒழுங்குமுறைச் சட்டம் அமலுக்கு வருகிறது.

இதன் மூலம், வீட்டு மனை விற்பனைத் துறையில் "வாடிக்கையாளரே அரசர்" என்ற நிலையை ஏற்படுத்தும் ஒரு புதிய சகாப்தம் பிறக்கிறது.
இந்தச் சட்டம் அமலாவதைத் தொடர்ந்து, தற்போது கட்டுமான நிலையில் இருக்கும் வீட்டு மனைத் திட்டங்களை 3 மாதங்களுக்குள் மனை வணிக ஒழுங்காற்று அதிகாரிகளிடம் விற்பனையாளர்கள் பதிவு செய்ய வேண்டும்.
எனினும், தற்போது உத்தரப் பிரதேசம், குஜராத், ஒடிஸா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களும், அந்தமான்-நிக்கோபார், சண்டீகர், தாத்ரா-நாகர் ஹவேலி, டாமன்-டையூ, லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களும் மட்டுமே மனை வணிகச் சட்டத்தை ஏற்று அறிவிக்கை வெளியிட்டுள்ளன என்று தெரிவித்தார்.
வீடு, மனை வாங்கும் விஷயத்தில் எத்தனையோ மக்கள் சரியான வழிகாட்டுதல்கள் இன்றி தங்களது வாழ்க்கையையே தொலைத்துள்ளனர். இதுபோன்ற சிக்கல்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்கவே இந்த மனை வணிகச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இனி இந்த சட்டத்தின் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
இந்த புதிய சட்டத்தின்படி, மனை-வணிக விற்பனையில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொரு கட்டுமானத் திட்டத்தையும் ஒழுங்காற்று அமைப்பிடம் பதிவு செய்வதுடன், திட்டத்தின் நிலை குறித்து ஒழுங்காற்று அமைப்பின் வலைதளத்தில் அவ்வப்போது பதிவு செய்ய வேண்டும்.

முன்பதிவு செய்யும் போது
ஒரு நபர், மனையை முன்பதிவு செய்யும் போது, அவருக்கு, மனைத் திட்டம் (லே அவுட் பிளான்), நிலத்தின் தகுதி, குடியிருப்புப் பதிவுகள், சட்ட ரீதியான அனுமதி விவரம் உள்ளிட்டவற்றை கட்டுமான நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்.

முன்பணம்
ஒரு மனையை முன் பதிவு செய்யும் போது, அதன் மொத்த மதிப்பில் 10 சதவீதத்தை முன் பணமாக கட்டுமான நிறுவனங்கள் வாங்கிக் கொள்கின்றன. ஆனால், அதன்பிறகு தான் 'விற்பனை ஒப்பந்தம்' தயாரிக்கப்படுகிறது. இனி 'விற்பனை ஒப்பந்தம்' தயாரிக்கப்படுவதற்கு முன்பு, முன்பணமாகவோ, விண்ணப்பக் கட்டணமாகவோ எந்த சிறிய தொகையையும் பெற முடியாது.

விளம்பரம் கூட செய்யக் கூடாது
இந்த சட்டத்தின்படி, கட்டுமான நிறுவனங்கள், அதன் திட்டங்கள் கட்டாயம் பதிவு செய்த பின்னரே, குடியிருப்புகளை விற்பனை செய்யமுடியும். அவ்வளவு ஏன், பதிவு செய்த பிறகுதான் விளம்பரமே செய்ய முடியும்.

வெளிப்படைத்தன்மை
அதுபோல், அனைத்து திட்ட செயல்முறைகளை வெளிப்படையாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்தல் வேண்டும். அதன்படி, மனைத் திட்டம் (லே அவுட் பிளான்), நிலத்தின் தகுதி, குடியிருப்புப் பதிவுகள், சட்ட ரீதியான அனுமதி விவரம் உள்ளிட்டவையும் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு விளம்பரத்திலும், அந்த கட்டுமான திட்டத்தின் பதிவு எண் நிச்சயம் இடம்பெற வேண்டும். மேலும், கட்டுமான நிறுவனத்தின் பின்னணி விவரங்கள், கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொண்ட கட்டமான திட்டங்கள், முடிந்தவை, நடப்பில் உள்ளவை என அனைத்தும் முக்கியத்துவம் பெறுகின்றன.

புதிய கட்டுமான திட்டத்தின் ஒப்பந்ததாரர், கட்டட நிபுணர், கட்டட பொறியாளர், மேம்பாட்டு நிபுணர் என அனைவரின் பெயர்களும் இடம்பெற வேண்டும்.

நடப்பில் இருக்கும் திட்டங்களுக்கும்
இந்த புதிய சட்டம், எதிர்காலத்தில் புதிதாக கட்டப்படும் கட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று நினைக்க வேண்டாம். ஏற்கனவே கட்டப்பட்டு வரும் கட்டங்கள் பற்றிய விவரங்களையும், கட்டுமான நிறுவனம் அடுத்த 3 மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
இந்த பதிவுக்கு, கட்டட அனுமதி குறித்த உண்மையான விவரங்கள், குறிப்பிடத்தக்க விஷயங்கள், பிறகு நடந்த மாறுதல்கள், வீடு, மனை வாங்குவோரிடம் இருந்து பெறப்பட்ட பணம், செலவிடப்பட்ட பணம், கட்டடத்தை முடித்துக் கொடுக்க ஒப்புக் கொண்ட காலம், பொறியாளர், கட்டட நிபுணர், கணக்கு தணிக்கையாளர் என அனைவரும் கொடுத்த சான்றிதழ்களும் இணைக்கப்பட வேண்டும்.

மனை வணிகச் சட்டத்தின்படி, இதுபோல பதிவு செய்யாமல், விளம்பரம் செய்யவோ, சந்தைப்படுத்தவோ, விற்கவோ, விற்பனைக்கு வைக்கவோ, வீடு, மனை வாங்க மக்களை அழைக்கவோ என எந்த அடிப்படை விஷயங்களையும் கட்டுமான நிறுவனங்கள் மேற்கொள்ளக் கூடாது.

கட்டடத்துக்கு உத்திரவாதம்
கட்டடத்தின் உத்தரவாதத்துக்கும் மனை வணிகச் சட்டம் உறுதி அளிக்கிறது. அதாவது, ஒவ்வொரு கட்டடத்துக்கும் கட்டுமான நிறுவனம் 5 ஆண்டு காலத்துக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். எனவே, வாங்கிய கட்டடத்தில் 5 ஆண்டுகளுக்குள் ஏந்த பிரச்னை ஏற்பட்டாலும், அதனை கட்டுமான நிறுவனம்தான் சரி செய்து தர வேண்டும். எந்த கட்டணமும் இன்றி, புகார் வந்த 30 நாட்களுக்குள் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Related

உபயோகமான தகவல்கள் 2070032183396385810

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item