படித்ததில் பிடித்தது! ‘நீ பெரிது, நான் பெரிது’ என்றில்லை. ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொன்று எளிது!!

மா மரத்தின் கீழ் கந்தையா வாத்தியார் நாற்காலியில் அமர்ந்திருந்தார். நாங்கள் புல்தரையில் கைகளைக் கட்டி உட்கார்ந்திருந்தோம். அன்றைய பாடத்தை ...

மாமரத்தின் கீழ் கந்தையா வாத்தியார் நாற்காலியில் அமர்ந்திருந்தார். நாங்கள் புல்தரையில் கைகளைக் கட்டி உட்கார்ந்திருந்தோம். அன்றைய பாடத்தை ஆரம்பித்தார். மரத்தின் மேலேயிருந்த எருமை மேய்க்கும் பையனிடம், ஒளவையார் சுட்ட பழம் கேட்ட கதைதான். அவன் கனிந்த பழத்தை மணலில் எறிந்தான். ஒளவையார் அதை எடுத்து ஊதி ஊதிச் சாப்பிட்டார்.

‘‘பாட்டி, பழம் சுடுகிறதா?’’

ஒளவையார் திடுக்கிட்டார். அவமானமாகிவிட்டது. அப்பொழுது அவர் பாடியது என்று வாத்தியார் பாடலைச் சொன்னார்.

‘கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கு நாணும் – பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்.’


எங்கள் எல்லோருக்கும் வயது எட்டு, ஒன்பதுதான் இருக்கும். வாத்தியார், ‘‘பொருள் தெரியுமோ?” என்றார். முன்வரிசையில் உட்கார்ந்திருந்த வாகேஸ்வரி பட்டென்று கையைத் தூக்கினாள். இரண்டு சடை போட்டு இறுதியில் இரண்டையும் ஒன்றாக்கி சிவப்பு ரிப்பன் கட்டியிருந்தாள். ஸ்டைல் ஒன்றும் இல்லை. அவளிடம் இருந்தது ஒரு ரிப்பன்தான். அவள் கையைத் தூக்கிவிட்டுத்தான் பதிலை யோசிப்பாள்.

வாத்தியார் விளக்கினார். ‘‘கருங்காலி மரத்தை வெட்டும் கோடாலி, வெறும் வாழைத் தண்டை வெட்ட முடியாமல் தோற்கும். படிப்பறிவில்லாத எருமை மேய்க்கும் பையனிடம் நான் தோற்றுவிட்டேன். அவமானம். இரண்டு நாள் எனக்குத் தூக்கம் வராது’’.

எனக்குப் பாடல் பிடித்தது. ஒரு புலவர் தோல்வியை ஒப்புக்கொண்டு பாடுவது எத்தனை அரிதானது. என் வாழ்நாள் முழுக்க அந்தப் பாடல் என்னைத் தொடர்ந்தது. எல்லாம் தெரியும் என்ற அகந்தை கூடாது. ஒருவருக்குத் தெரியாத ஒன்று இன்னொருவருக்குத் தெரியும். அதுதான் உலக மகா அற்புதம்.

நான் பெரியவன் ஆனதும் இன்னொரு கதை படித்தேன். இலியட், ஒடிசி போன்ற கிரேக்க காவியங்களைப் படைத்த ஹோமர், போன வழியில் ஒரு சிறுவனைச் சந்தித்தார். அவன் ஒரு விடுகதை போட்டான். ‘‘நீ பிடித்தால் கொல்வாய்; பிடிக்காவிட்டால் எடுத்துப் போவாய்’’. எவ்வளவு யோசித்தும் ஹோமருக்கு விடை தெரியவில்லை. பையன் சொன்னான், ‘‘பேன்’’ என்று. ஹோமரால் அவமானம் தாங்கமுடியவில்லை. தற்கொலை செய்துகொண்டார் என்று கதையுண்டு.

இத்தாலிய எழுத்தாளர் இட்டாலோ கால்வினோ ‘Good for Nothing’ என்ற அருமையான சிறுகதையை எழுதியிருக்கிறார். ஒருவனுக்குச் சப்பாத்துக் கயிறு கட்டத் தெரியாது. எத்தனை முறை கட்டினாலும் அது அவிழ்ந்து போனது. அவனைச் சந்திக்கும் ஒரு மனிதன் சொல்வான். ‘‘கவலையை விடு. எல்லோருக்கும் எல்லாம் தெரியும் என்றில்லை. ஒருவனுக்குத் தச்சு வேலை தெரியும். ஒருவனுக்கு விதை விதைக்கத் தெரியும். இன்னொருவனுக்கு வாசிக்கத் தெரியும். சமுதாயம் செயல் படுவது ஒருவர் கையை ஒருவர் பிடித்து முன்னேறுவதால்தான்’’.

ஒரு பழம்பாடல் உள்ளது. தூக்கணாங் குருவிக்கு கூடு கட்டத்தெரியும். மனிதனால் அது முடியாது. கறையான் புற்று எடுக்கும். எந்தப் பெரிய இன்ஜினீயருக்கும் அது சாத்தியமில்லை. சிலந்தி வலை பின்னும். தேர்ந்த விஞ்ஞானியால்கூட அதை நகல் செய்ய ஏலாது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வலிமை இருக்கும். பாடல் இப்படி முடியும். ‘எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது’.

தோமஸ் அல்வா எடிசன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காப்புரிமைகளுக்கு சொந்தக்காரர். மின்சார பல்பை கண்டுபிடித்தவர். அவர்தான் முதன்முதலாக நியுயோர்க் நகரத்து வீடுகளுக்கு மின்சாரம் வழங்கினார். டி.சி மின்சாரம் விநியோகித்ததால், அவரால் மின்சாரத் திட்டத்தை விரிவாக்க முடியவில்லை. ஏ.சி மின்சாரம் வழங்கும் கம்பனி இவரை முந்திக்கொண்டு போனது. ‘‘நான் மின்சாரத்தை மிகக் குறைந்த விலையில் ஏழைகளுக்குக் கொடுப்பேன். பணக்காரர்களுக்கு மட்டுமே மெழுகுவர்த்தி கட்டுபடியாகும்...’’

இப்படிச் சொன்ன பெரிய அறிவாளியான எடிசன், ஏ.சி மின்சாரத்தை எதிர்த்தார். இறுதியில் எடிசன் ஆரம்பித்த கம்பனியே அவரை வெளியே தள்ளியது. எல்லாமே தெரியும் என்ற இறுமாப்பு, அவர் அறிவை மறைத்துவிட்டது.

கணிதமேதை ராமானுஜனால் இந்தியாவில் பி.ஏ பரீட்சை பாஸ் பண்ண முடியவில்லை. அத்வைத வேதாந்த நெறியை போதித்த ரமண மகரிஷி 17 வயதில் ‘Wren and Martin’ இலக்கணப் புத்தகம் புரியாமல் வீசி எறிந்துவிட்டு திருவண்ணாமலை ஏகினார். 500 மில்லியன் ஆண்டுகள் முன்தோன்றிய கரப்பான் பூச்சி, தலையைக் கொய்த பிறகும் சிலநாள் உயிர் வாழும். தேனீக்களை ஒழித்தால் மனித இனம் நாலு வருடங்களில் அழிந்து போகும். உலகத்து சிலந்திகள் முடிவெடுத்தால், ஒரு வருடத்தில் அவை மனித இனத்தைத் தின்று தீர்த்துவிடும்.

ஒவ்வொரு புதுத்தகவலின்போதும் நான் இன்றும் கந்தையா வாத்தியாரை நினைக்கிறேன். ஆதியிலிருந்து வல்லமைகள் பகிர்ந்து அளிக்கப் பட்டிருக்கின்றன. ‘நீ பெரிது, நான் பெரிது’ என்றில்லை. ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொன்று எளிது.

Related

பெட்டகம் சிந்தனை 8363046777594247831

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item