சுவையான சர்க்கரைப் பொங்கல்! சமையல் குறிப்புகள்!!
சுவையான சர்க்கரைப் பொங்கல் தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1/2 கிலோ பாசிப்பருப்பு – 50 கிராம் (ஊற வைத்து கழுவியது) பால் – 3/4 லிட...

https://pettagum.blogspot.com/2014/01/blog-post_9722.html
சுவையான சர்க்கரைப் பொங்கல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1/2 கிலோ
பாசிப்பருப்பு – 50 கிராம் (ஊற வைத்து கழுவியது)
பால் – 3/4 லிட்டர்
முந்திரி – 10
உலர் திராட்சை – 10
வெல்லம் – 600 கிராம் (பொடி செய்து கொள்ளவும்)
நெய் – 150 கிராம்
பச்சை கற்பூரம் – 1
சிறிய கட்டி (பொடி செய்து கொள்ளவும்)
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அரிசியை நீரில் ஊற வைத்து, பின் கழுவிய நீரை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு மண் பானை அல்லது பொங்கல் வைப்பதற்கான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் அரிசி கழுவிய நீரை பாத்திரம் முழுவதும் நிரப்ப வேண்டும்.
பாலானது நன்கு கொதித்து, பொங்கி வரும் போது, அதிலிருந்து சிறிது நீரை எடுத்து விட்டு, பிறகு அரிசி மற்றும் பாசிப்பருப்பை போட்டு, நன்கு கிளற வேண்டும்.
அதே சமயம் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு, வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அரிசியானது வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை மற்றும் சற்று தாராளமாக நெய் ஊற்றி பிரட்டி, பின் பொடி செய்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு, நன்கு கிளற வேண்டும்.
வெல்லம் கரைந்ததும், அதில் ஏலக்காய் பொடி மற்றும் பச்சை கற்பூரத்தை போட்டு ஒரு முறை கிளறி இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான சர்க்கரைப் பொங்கல் ரெடி!!!
குறிப்பு : பொங்கலை மண்பானையில் செய்தால், அதன் சுவைக்கு அளவே இருக்காது. எனவே முடிந்தவரை மண்பானையில் செய்யவும்.
Post a Comment