ஆம்பூர் பிரியாணி---சமையல் குறிப்புகள்-அசைவம்!
மட்டன் - 1 கிலோ பாசுமதி அரிசி - 1 கிலோ பெரிய வெங்காயம் - 6 தக்காளி - 6 பச்சை மிளகாய் - 6 இஞ்சி, பூண்டு விழுது...

- மட்டன் - 1 கிலோ
- பாசுமதி அரிசி - 1 கிலோ
- பெரிய வெங்காயம் - 6
- தக்காளி - 6
- பச்சை மிளகாய் - 6
- இஞ்சி, பூண்டு விழுது - 2 1/2 மேசைக்கரண்டி
- பட்டை - 3
- கிராம்பு - 10
- ஏலக்காய் - 15
- அன்னாசி மொக்கு - 2
- மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
- கரம் மசாலா - 1தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- தயிர் - 1 கப்
- எலுமிச்சை - 1
- புதினா - 1 கப்
- கொத்தமல்லி - 1 கப்
- உப்பு - 3 மேசைக்கரண்டி
- நெய் - 5 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - 2 கொத்து
- ரம்பை இலை
- கலர் பொடி
- அரிசியில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
- வெங்காயம், தக்காளி இரண்டையும் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
- பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைத்துக் கொள்ளவும்.
- புதினா கொத்தமல்லி தழைகளை கழுவி வைக்கவும்.
- கறியினை சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு கழுவி வைக்கவும்
- அதில் தயிர் பாதி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள் கிளறி வைக்கவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி மொக்கு போட்டு பொரிய விடவும். உடனே நறுக்கின வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, கீறின பச்சை மிளகாய் போட்டு 3 நிமிடம் வதக்கவும். பிறகு நறுக்கின வெங்காயம், தக்காளி, கறியை போட்டு வதக்கவும். தக்காளி நன்கு வதக்க வேண்டும்.
- புதினா கொத்தமல்லி போட்டு வதக்க வேண்டும்.
- இதனுடன் கறி துண்டங்களைப் போட்டு மசாலா கறி துண்டங்களை சேரும்படி நன்கு பிரட்டி விடவும். அதில் ரம்பை இலை, தயிர், கரம் மசாலா சேர்த்து அதிக தீயில் வைத்து கிளறவும்.
- பிறகு 6 கப் தண்ணீர் சேர்த்து கலர் பொடி, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து கிளறி மூடி விடவும்.
- சுமார் 15 நிமிடம் கழித்து, கொதித்து வாசனை வந்ததும் அரிசியை களைந்து போட்டுக் கிளறி விடவும்.
Post a Comment