டிப்ஸ்... டிப்ஸ்... !

டிப்ஸ்... டிப்ஸ்... ! அ ரிசி உப்புமாவை குழந்தைகள் விரும்பிச் சாப்பிட மாட்டார்கள். இதனால் உப்புமா மிகுந்துவிடும். இப்படி மிகுந்துவிடும...

டிப்ஸ்... டிப்ஸ்... !
ரிசி உப்புமாவை குழந்தைகள் விரும்பிச் சாப்பிட மாட்டார்கள். இதனால் உப்புமா மிகுந்துவிடும். இப்படி மிகுந்துவிடும் உப்புமாவில் ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போடுங்கள். தேவையான அளவு முட்டைகோஸ் மற்றும் கேரட்டை துருவிப் போடுங்கள். எல்லாவற்றையும் கலந்து நன்றாகப் பிசைந்து சிறுசிறு வடைகளாகத் தட்டி, சமையல் எண்ணெயைக் காயவைத்து முறுகலாகப் பொரித்து எடுங்கள். மிகவும் ருசியான இந்த வெஜிடபிள் வடை, நிமிடங்களில் காலியாகிவிடும்.

முருங்கைக்கீரை, அகத்திக்கீரையை வதக்கும்போது கரண்டியின் காம்புப் பகுதியை வைத்துக் கிளறவும். அப்படிக் கிளறினால், கட்டி விழாமல் கீரை உதிரி உதிரியாக இருக்கும்.

மோர்க்குழம்பு செய்யும்போது, பொங்கிப் பொங்கி வழிகிறதா? ஓர் உருளைக்கிழங்கை எடுத்து, தோல் சீவி, துண்டு துண்டாக வெட்டிக்கொள்ளுங்கள். மோர்க்குழம்பு பொங்கி வரும்போது, இந்தத் துண்டுகளைப் போட்டால், பொங்குவது நின்றுவிடும்.

ழுத்த நாட்டு வாழைப்பழத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்துப் பிசைந்து, முகத்தில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து முகம் கழுவி வர... முகம் பளபளக்கும். நல்ல நிறம்... மாசு, மரு இல்லாத பொலிவைக் கொடுக்கும்.

ருளைக்கிழங்கை வேகவைத்த பின்பு உரித்தெடுக்கும் தோலை தூக்கி எறிந்துவிடாதீர்கள். அதைக் கொண்டு வெள்ளித்தட்டு, விளக்கு போன்றவற்றைத் தேய்த்தால் பளிச்சென்று மின்னும்.

வெண்ணெயை நெய்யாக உருக்கும் போது, ஒரு துளி உப்பு சேர்க்கவும். நெய் சாஃப்ட்டாக இருக்கும். துகள், துகளாக வரும். நல்ல வாசனைக்கு கொஞ்சம் கறிவேப்பிலை, வெந்தயம் சேர்க்கலாம்.

இதயத்துக்கு இதமான செம்பருத்தி!
செம்பருத்தி... இது செம்பரத்தை, செவ்வரத்தை என்ற வேறு பெயர்களைக்கொண்டது. செம்பருத்தியின் பூவுக்கு நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. குறிப்பாக, இதயநோய்க்கு செம்பருத்திப்பூ அருமையான மருந்தாகும். காலையில் வெறும் வயிற்றில் ஒன்றிரண்டு செம்பருத்திப்பூவின் இதழ்களைச் சாப்பிட்டு வந்தால், காலப்போக்கில் இதயநோய் குணமாகும். மேலும், இதயநோயாளிகளுக்கு வரக்கூடிய படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு என்று அத்தனை பிரச்னைகளையும் இந்த செம்பருத்திப்பூ சரிசெய்யக்கூடியது.

மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்கள் செம்பருத்திப் பூக்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் பிரச்னைகள் தீருவதோடு கர்ப்பப்பை குறைபாடுகள் சரியாகும். செம்பருத்திப்பூக்களை தலைக்குத் தேய்க்கும் சிகைக்காய் பொடியுடன் சேர்த்துப் பயன்படுத்தினால், பொடுகு, முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்னைகள் சரியாகும். காயவைத்த செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, பயத்தம்பருப்பு, கறிவேப்பிலை அனைத்தையும் பொடியாக்கி, சோப்புக்குப் பதிலாக தலை முதல் கால் வரை பூசி குளித்து வர, தோல் நோய்களில் இருந்து விடுபடலாம்!

சிறிது புளியைக் கரைத்து அந்தத் தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலந்துகொள்ளுங்கள். இந்தக் கலவையில் காய்கறி, பழங்களை 15 நிமிடம் ஊறவைத்துக் கழுவினால்... காய்கறி, பழங்களில் உள்ள ரசாயன உரங்கள், பூச்சிமருந்துகள் தன்மை நீங்கிவிடும். பாகற்காய் போன்ற திக்கான தோல் உள்ள காய்களை இரண்டு முறை கழுவ வேண்டும்.

றுத்த தேங்காய்த் துருவல் ஒரு கப், ஏலக்காய் ஐந்து இவற்றை மிக்ஸியில் தூளாக்கி, அத்துடன் வறுத்த சேமியாவை பொடியாக நொறுக்கிப் போட்டு, வறுத்த முந்திரித் துண்டுகளையும் சேர்த்து ஒரு டப்பாவில் கலந்து வைத்துக்கொள்ளவும். திடீரென விருந்தாளி அல்லது விசேஷம் என்றால், இக்கலவையில் ஒரு கரண்டி எடுத்துப் போட்டு வெந்நீர் விட்டு, சூடான பாலும், ஒரு தேக்கரண்டி நெய்யும் விட்டுக் கலந்தால் இன்ஸ்டன்ட் பாயசம் ரெடி.

டகத்தில் பூச்சி வராமல் நீண்ட நாள் இருக்க, அதனுடன் மிளகாய் வற்றலையும் கொஞ்சம் போட்டு வைத்தால் போதும்; மிளகாயின் காரத்தினால் பூச்சி அண்டாது.

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா? வசம்பைத் தட்டி, தேங்காய் எண்ணெயில் ஊறப்போட்டு அந்த எண்ணெயைத் தடவி வரலாம். வில்வக்காயைப் பொடியாக்கி அதில் சம அளவு சிகைக்காய்த்தூள் கலந்து தலைக்குக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
-
றிவேப்பிலை... இது நம் வீடுகளில் சமையலில் கட்டாயம் இடம்பிடிக்கும். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி-1, பி-2, சி சத்துக்கள் மட்டுமில்லாமல் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன.  கறிவேப்பிலையை துவையலாக்கி சாப்பிடுவதால் பற்கள் உறுதிபெறுவதோடு எலும்பும் பலமாகும். மேலும் கண், பல் சம்பந்தமான வியாதிகள் வராமல் தடுக்கக்கூடியது. குறிப்பாக, காய்ச்சலை விரட்டுவதில் கறிவேப்பிலை முக்கிய பங்காற்றுகிறது. 

ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சிறிதளவு சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் இஞ்சிச்சாறு மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டு, சிறிது நேரம் கழித்து வெந்நீர் அருந்த வேண்டும். இப்படி காலை, மாலை 3 நாள் சாப்பிட்டு வந்தால் எந்தவிதமான காய்ச்சலும் குணமாகும். 

பித்தம் அதிகமாகி சில கோளாறுகளை ஏற்படுத்தும்போது, கறிவேப்பிலையை துவையலாக அரைத்து எலுமிச்சைச் சாறு சேர்த்து, சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். 

மூலநோயால் அவதிப்படுகிறவர்கள் கறிவேப்பிலையுடன் வெந்தயம், மிளகு சேர்த்து இளவறுப்பாக வறுத்து பொடி செய்து உப்பு சேர்த்து காலை, மதியம், இரவு என 3 வேளை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் காலப்போக்கில் முழு பலன் கிடைக்கும்.

Related

வீட்டுக்குறிப்புக்கள் 1937618877386097847

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item