டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள்,
டிப்ஸ்... டிப்ஸ்... ...
https://pettagum.blogspot.com/2013/06/blog-post_5067.html
டிப்ஸ்... டிப்ஸ்...
கொத்தமல்லித்தழை
வாடாமல் ஒரு வாரம் வரை பசுமையாக இருக்க வேண்டுமா? வேர் பாகத்தை மட்டும்
வெட்டிவிட்டு, மற்றதை ஒரு பாத்திரத்தில் போட்டு, பாதியளவு தண்ணீர் விட்டு,
மூடாமல் ஃபிரிட்ஜில் வையுங்கள். வாடிப்போன கொத்தமல்லித் தழைகளைகூட இதேபோல்
வைத்தால் ஃபிரெஷ்ஷாக மாறி விடும்.
=======================================================================
இரண்டு ஸ்பூன் சோளமாவை சிறிது
தண்ணீர் விட்டுக் கரைத்து, தோசை மாவுடன் கலந்து தோசை வார்த்துப் பாருங்கள்.
மாவு கல்லில் ஒட்டாமல் தோசை நன்றாக சுட வரும்.
=========================================================================
குழந்தைகளுக்கு வெள்ளை தேங்காய்
பர்ஃபி சாப்பிட்டு போரடித்துவிடும். கலர் கலராக பர்ஃபி செய்ய ஒரு ஐடியா.
பர்ஃபி செய்ததும் தட்டில் கொட்டுவதற்குமுன், சாக்லெட் மற்றும் ஸ்டிராபெர்ரி
பானத்துக்கான பவுடரைச் சேர்த்துக் கிளறுங்கள். வண்ண வண்ண கலர்களில்,
வாய்க்கும் ருசியாக இருக்கும்.
======================================================================
சேமியா,
ஜவ்வரிசியில் பாயசம் செய்யும்போது, முதலிலேயே எல்லாப் பாலையும் சூடாகச்
சேர்த்து விட்டால் பாயசம் கெட்டியாகி விடும். பாயசத்துக்கு தேவையானதை ரெடி
செய்து விட்டு, பரிமாறும்போது, காய்ச்சிய பாலைக் கலந்து விடுங்கள். பாயசம்
கெட்டியாகாமல், சுவையாக இருக்கும்.
=====================================================================
டைனிங் டேபிளில் விரிக்கும் வண்ண
'மேட்'டுகள் பழையதாகிவிட்டால், தூக்கி எறியாதீர்கள். சதுர வடிவ துண்டுகளாக
வெட்டி, எண்ணெய்ப் பாத்திரங்கள், பாட்டில்களுக்கு அடியிலும், காய்கறிகள்
நறுக்கும்போது, தரையில் அமரும்போதும், கீழே விரித்துக் கொள்ளலாம்.
=======================================================================
சமைப்பதற்கு அதிக அளவு பயன்படும்
இடுக்கியில் பிசுக்கும், அழுக்கும் படிந்திருக்கிறதா? ஒவ்வொரு முறை
பயன்படுத்திய பிறகும், அரிசி களைந்த தண்ணீரில் போட்டு வையுங்கள். இந்த
நீரில் ஊற வைத்துத் தேய்த்தால் பளிச்சென்று ஆகிவிடும்.
=======================================================================
=========================================================================
========================================================================
தண்ணீரைப் பயன்படுத்தாமலேயே பூஜை
விளக்குகளைப் பளிச்சென மாற்றமுடியும். சுத்தம் செய்ய வேண்டிய பகுதியில்
வெள்ளை பல்பொடியைத் தூவி, உலர்ந்த துணியால் நன்றாக அழுத்தித் துடையுங்கள்.
கருமை நிறம் காணாமல் போய் விளக்கு பளீரென மின்னும்.======================================================================
=====================================================================
=======================================================================
Post a Comment