ரசிக்க.. ருசிக்க..! 'பஞ்ச ரத்ன' போளி
'பஞ்ச ரத்ன' போளி தேவையான பொருள்கள் : பேரீச்சம் பழம் - 6 (அ) 8, வாழைப்பழம் (சிறியது), 1, (புளிப்பில்லாத) மாம்பழம் -7, 8 துண்டங்கள்,...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_7529.html?m=0
'பஞ்ச ரத்ன' போளி
தேவையான பொருள்கள் :
பேரீச்சம் பழம் - 6 (அ) 8,
வாழைப்பழம் (சிறியது), 1,
(புளிப்பில்லாத) மாம்பழம் -7, 8 துண்டங்கள்,
ஆப்பிள் - 1,
(உலர்ந்த) திராட்சைப் பழம் - 15,
ஏலப்பொடி - 1 டீஸ்பூன்,
மைதா (அ) கோதுமை மாவு -
1 முதல் 2 கப்,
காய்ச்சிய பால் - 1 கரண்டி,
நெய் - 4 மேசைக்கரண்டி,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
சர்க்கரை - 1 கப்
செய்முறை :
பழங்களைச் சுத்தம் செய்து, சிறு துண்டங்களாகச் செய்து கொள்ளவும். பேரீச்சம் பழத் துண்டங்களை பாலில் ஊறவைக்கவும்.
10, 15 நிமிடங்கள் ஊறியபின், பாலுடன் எல்லாப் பழங்களையும் ஏலப்பொடி, சர்க்கரையையும் சேர்த்து, பழங்கள் 'உருத் தெரியாமல்' அரைபட்டு விடாமல், 'மிக்ஸி'யில் ஒரு சுற்றுச் சுற்றி, ஒரு 'எவர் சில்வர்' பேஸினில் எடுத்துக் கொண்டு சலித்த மாவை அத்துடன் சேர்த்து, சற்றுத் தளரப் பிசைந்து கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் எரிய விடவும். சப்பாத்தி இடும் கல், குழவி இரண்டிலும் பரவலாக எண்ணெய்யைத்தடவிவிட்டு, மாவை எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக எடுத்து, சப்பாத்தி போல் 'போளி'யாக இட்டு (அல்லது கைகளால் தட்டி) காய்ந்த 'கல்'லில் போட்டு, இருபுறமும் (ஒவ்வொரு ஸ்பூன்) நெய் விட்டு, பக்குவமாக வெந்தபின், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் ஒரு பரவலான தட்டில் எடுத்து வைத்து பரிமாறவும். (விரும்புகிறவர்கள் 'போளி' யின் மேலும் (மீண்டும்) பால் விட்டுச் சாப்பிடலாம்).
Post a Comment