வாசகிகள் கைமணம்! தக்காளியில் ஒரு கலர்ஃபுல் பர்ஃபி!
வாசகிகள் கைமணம்! தக்காளியில் ஒரு கலர்ஃபுல் பர்ஃபி! தேவையானவை: தக்காளி & அரை கிலோ, சர்க்கரை - தேவையான அளவு, தேங்காய்-அரை மூடி, முந்திரி ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_4766.html?m=0
வாசகிகள் கைமணம்!
தக்காளியில் ஒரு கலர்ஃபுல் பர்ஃபி!
தேவையானவை: தக்காளி & அரை கிலோ, சர்க்கரை - தேவையான அளவு, தேங்காய்-அரை மூடி, முந்திரி - ஒரு கப், எஸன்ஸ் - 3 டீஸ்பூன், நெய் - சிறிதளவு, ஏலம், கிராம்பு, ஜாதிக்காய்தூள் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு 2 நிமிடம் வேக வைத்து எடுத்து, தோல் விதை நீக்கி, கெட்டியான சாறாக எடுத்துக் கொள்ளவும். இந்தச் சாற்றைப் போல் இரு மடங்கு சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். தேங்காயை மெலிதாக துருவவும். ஒரு வாணலியில் தக்காளி சாறு, சர்க்கரை, தேங்காய் எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலந்து அடுப்பில் வைக்கவும். அடுப்பை நிதானமாக எரிய விட்டு கலவையை கைவிடாமல் கிளறவும். சிறிது சிறிதாக நெய் விட்டு, முந்திரியில் பாதி போட்டு பாத்திரத்தில் ஒட்டாத பதத்தில் திரண்டு வரும்போது எஸன்ஸை விடவும். பிறகு இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஏலம், கிராம்பு, ஜாதிக்காய் தூள் கலவையை மேலே தூவவும். மீதி முந்திரியை மெலிதாக சீவி நெய்யில் வறுத்து மேலே தூவவும். ஆறினவுடன் துண்டுகள் போடவும்.
Post a Comment