சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில்
சுவையான வடைகறியை எப்படி வீட்டிலேயே செய்வது? ஒரு டம்ளர் கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் உப்பு, காய்ந்த மிளகாய்-6, பூண்டு பற...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_09.html?m=0
சுவையான வடைகறியை எப்படி வீட்டிலேயே செய்வது?
ஒரு டம்ளர் கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் உப்பு, காய்ந்த மிளகாய்-6, பூண்டு பற்கள்-4, சிறிது சோம்பு எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றிடரண்டாக கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவை சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொரித்துக் கொள்ளுங்கள். மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் சோம்பு, கிராம்பு, பூண்டைத் தாளித்து நான்கு சின்ன வெங்காயத்தை நைசாக நறுக்கிப் போட்டு வதக்குங்கள். அதனுடன் இரண்டு பெங்களூர் தக்காளியை நறுக்கிப் போட்டு, இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து மறுபடியும் வதக்கி, பிறகு பதினைந்து முந்திரியுடன் கசகசா ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து அரைத்த விழுதை வதக்கிய கலவையில் சேருங்கள். அதில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து சிறிது தண்ணீரும் ஊற்றி கொதிக்க விடுங்கள். நன்கு கொதித்ததும் அதில் பொரித்து வைத்த பக்கோடாவைப் போட்டு வேண்டிய அளவு திக் ஆனதும் இறக்குங்கள். அவ்வளவுதான்...
Post a Comment