கைமணம்! வாழைத்தண்டு வடகம்
வாழைத்தண்டு வடகம் தேவையானவை: பச்சரிசி & 5 கப், நல்ல பிஞ்சு வாழைத்தண்டு & சிறிதளவு, உப்பு & ருசிக்கேற்ப, பெருங்காயம் & சிறி...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_03.html?m=0
வாழைத்தண்டு வடகம்
தேவையானவை: பச்சரிசி & 5 கப், நல்ல பிஞ்சு வாழைத்தண்டு & சிறிதளவு, உப்பு & ருசிக்கேற்ப, பெருங்காயம் & சிறிது, பச்சை மிளகாய் & 5.
செய்முறை: அரிசியை முந்தின நாளே ஊறவைத்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். மறுநாள் வாழைத்தண்டில் நாரை நீக்கி நறுக்கிக்கொள்ளவும். அத்துடன் மிளகாய், உப்பு, பெருங்காயம் போட்டு மிக்ஸியில் அரைத்து, அரிசிமாவில் கலக்கவும். இக் கலவையை தோசை மாவை விட நீர்க்க கரைத்துக் கொண்டு அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
அரை மணி நேரம் கிளறிய பிறகு, தொட்டுப்பார்த்தால் மாவு நன்றாக வெந்து இருக்கும். வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். ஆறியவுடன் சிறு கரண்டியால் மாவை எடுத்து, பிளாஸ்டிக் பேப்பரில் சிறிய வட்டங்களாக இடவும். நன்கு காய்ந்தவுடன் எடுத்துவைக்கவும். பொரித்து சாப்பிட்டால், இந்த வடகத்தின் சுவை நன்றாக இருக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் நல்லது.
வாழைத்தண்டு வடகம்: வாழைத்தண்டுக்கு பதில் பூசணிக்காயும் சேர்க்கலாம். பூசணிப் பத்தையை முந்தின நாள் இரவே பொடியாக நறுக்கிப் பிழிந்து, மூட்டையாகக் கட்டிவையுங்கள். அதிலிருக்கும் தன்ணீர் சத்து முழுவதும் போனபின், மறுநாள் மாவுடன் சேர்த்து வேகவிடலாம். அரைக்கத் தேவையில்லை.
Post a Comment