கிராமத்து கைமணம்! கீரை போண்டா
கிராமத்து கைமணம்! வாய்க்கு ருசியான ரெண்டு கிராமத்துச் சிற்றுண்டிகளை இங்கே கொடுத்து இருக்கேன். படிங்க... செய்யுங்க... பாராட்டுப் பெறுங்க! ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_7435.html?m=0
கிராமத்து கைமணம்!
வாய்க்கு ருசியான ரெண்டு கிராமத்துச் சிற்றுண்டிகளை இங்கே கொடுத்து இருக்கேன். படிங்க... செய்யுங்க... பாராட்டுப் பெறுங்க!
கீரை போண்டா
சுலபமா கிடைக்கிற முளைக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை, அரைக்கீரை, முருங்கைக் கீரை... இதுல ஏதாவது ஒண்ணை, ஒரு கட்டு எடுத்துக்குங்க. மண்ணு போக ரெண்டு தடவை அலசிக் கழுவிட்டு, பொடியா நறுக்கிக்குங்க. ஒரு பெரிய வெங்காயத்தையும் மூணு பச்சை மிளகாயையும் ஒரு துண்டு இஞ்சியையும் பொடியா நறுக்கி வச்சுக்குங்க. ஒரு கப் கடலை மாவுல கால் டீஸ்பூன் சோடா உப்பு, சூடான எண்ணெய் ரெண்டு கரண்டி சேர்த்து, நறுக்கி வச்சிருக்கற வெங்காயம், மிளகாயையும் போட்டு கொஞ்சமா தண்ணி விட்டு, வடை மாவு பதத்துல கலந்து வச்சுக்குங்க.
கடாயில எண்ணெயைக் காய வச்சு, கலந்து வச்சிருக்கற மாவைச் சின்னச் சின்ன உருண்டைகளா உருட்டிப் போட்டு, நல்லா செவக்க வேகவிட்டு எடுத்துடுங்க. டூ&இன்&ஒன் டிபன் இது. மதிய சாப்பாட்டுக்கு சைட் டிஷ்&ஆவும் வச்சுக்கலாம். சாயங்காலத்து டிபனாவும் சாப்பிடலாம்.
இதையே, சீடை சைஸ§க்கு உருட்டிப் போட்டு வேகவிட்டு, எடுத்து ‘கீரை பால்ஸ்’னு குழந்தைகளுக்குக் குடுத்துப் பாருங்க. போட்டி போட்டு சாப்பிடுவாங்க.
Post a Comment