சமையல் குறிப்புகள்! ரசம் சுவையாக இருக்க
ரசம் சுவையாக இருக்க என்ன அளவுகளில் பொருட்களைச் சேர்த்து ரசப் பொடி அரைக்க வேண்டும். மூலப் பொருட்களை வறுக்கும் பக்குவத்தையும் சொல்லவும்? ரசத்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_2582.html?m=0
ரசம் சுவையாக இருக்க என்ன அளவுகளில் பொருட்களைச் சேர்த்து ரசப் பொடி அரைக்க வேண்டும். மூலப் பொருட்களை வறுக்கும் பக்குவத்தையும் சொல்லவும்?
ரசத்துக்கு முக்கியத் தேவை வாசனையும் ருசியும்! துவரம் பருப்பு-1 டம்ளர், மிளகு- ¾ டம்ளர், சீரகம்-¼ டம்ளர், கறிவேப்பிலை-1 கப், பெருங்காயம் சிறிய நெல்லிக்காய் அளவு.
வெறும் கடாயில் முதலில் மிளகை வறுத்துக் கொண்டு, து.பருப்பு, சீரகம் என ஒவ்வொன்றாய் வறுத்துக் கொள்ளவும். பெருங்காயத்தை கறிவேப்பிலையுடன் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இந்த ரசப் பொடி ஒரு வாரம் வரை அதன் தன்மை மாறாதிருக்கும். ரசத்தை முடிந்த வரை ஈயப் பாத்திரத்தில் வைத்தால், ரசம் வாசனையாக நன்றாக இருக்கும்.
Post a Comment